‘டித்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் பாதிப்புகளால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நுவரெலியா ஹக்கல தாவரவியல் பூங்காவை (Hakgala Botanical Garden) மீண்டும் திறப்பதற்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுற்றாடல் பிரதியமைச்சர் அன்டன் ஜெயக்கொடி பூங்காவிற்கு நேரில் விஜயம் செய்து சேத விபரங்களை ஆராய்ந்த பின்னர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்:

  • மீளத் திறப்பு: அடுத்த சில நாட்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக பூங்காவைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • வீதிப் புனரமைப்பு: பூங்காவிற்கு முன்னால் உள்ள நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு பாதிப்புகளைச் சீரமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

  • பாதுகாப்பு நடவடிக்கைகள்: நிலச்சரிவு அபாயத்தைக் குறைக்கவும், பூங்காவின் நிலப்பகுதியை உறுதிப்படுத்தவும் குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்களை முன்னெடுக்குமாறு பிரதியமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பூங்காவை விரைவாகச் சீரமைத்து, சுற்றுலாத் துறையை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Share.
Leave A Reply