உலகில் மிகவும் அரிதாக கிடைக்கும் மூலிகைகளில் ஒன்றாகக் கருப்பு மஞ்சள் (Black Turmeric) கருதப்படுகிறது. இது சாதாரண மஞ்சளைப் போல அன்றாட சமையலில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில், இது ஒரு சக்திவாய்ந்த மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வெளிப்புறமாகப் பார்க்கும்போது கருப்பு மஞ்சள், சாதாரண மஞ்சளைப் போலவே தோற்றமளிக்கும். ஆனால் அதன் கிழங்கை வெட்டி பார்க்கும் போது, உள்ளே நீல நிறம் முதல் அடர் கருப்பு நிறம் வரை காணப்படும். இந்த தனித்துவமான நிறமே இதை மற்ற மஞ்சள்களிலிருந்து வேறுபடுத்துகிறது.
பண்டைய காலங்களில் கருப்பு மஞ்சளை மக்கள் மிகவும் கவனமாக சேமித்து வைத்தனர். அவசியமான நேரங்களில் மட்டுமே மருத்துவ தேவைக்காக பயன்படுத்தினர். அதன் வலுவான நறுமணம் மற்றும் மருத்துவ குணங்கள் காரணமாக இது சிறப்பு மதிப்பை பெற்றது.
கருப்பு மஞ்சளின் ஆரோக்கிய நன்மைகள்
ஆயுர்வேத மருத்துவத்தில், கருப்பு மஞ்சள் வலி, வீக்கம், மூட்டு வலி, சுவாசப் பிரச்சினைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) பண்புகள் உள்ளதாக நம்பப்படுகிறது.
கிராமப்புறங்களில், கருப்பு மஞ்சளை அரைத்து பேஸ்டாக செய்து கொதிப்பு, பூச்சி கடி, காயங்கள் மற்றும் வீக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தடவுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இது விரைவான நிவாரணம் அளிப்பதாக கூறப்படுகிறது.
சில பகுதிகளில், கடுகு எண்ணெயுடன் கருப்பு மஞ்சளை லேசாக சூடாக்கி உடலில் பூசுவதும் நடைமுறையில் உள்ளது. இது வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது என்று நம்பப்படுகிறது.
ஆன்மீக முக்கியத்துவம்
கருப்பு மஞ்சள் மருத்துவ குணங்களுக்குப் போக, ஆன்மீக மற்றும் சடங்கு வழக்கங்களிலும் முக்கிய இடம் பெற்றுள்ளது. தாந்த்ரீக வழிபாடுகள் மற்றும் லட்சுமி பூஜைகளில் இது சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது. எதிர்மறை சக்திகளை விரட்டி, நேர்மறை சக்தியை ஈர்க்கும் என பண்டைய மக்கள் நம்பினர்.
இதனால், கருப்பு மஞ்சள் பல வீடுகளில் தாயத்து அல்லது வழிபாட்டுப் பொருளாக வைத்திருந்தனர். இன்றைய காலத்தில், அதன் ஆன்மீக பயன்பாட்டை விட, மருத்துவ குணங்களே அதிக கவனம் பெறுகின்றன.

