தொடர் மழை காரணமாக மண் ஏற்கனவே அதிக ஈரப்பதத்துடன் இருப்பதால், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் மிக அதிகமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலை (Amber) எச்சரிக்கை – மாவட்டங்கள்:
-
கண்டி: உடும்பர
-
மாத்தறை: வில்கமுவ
-
நுவரெலியா: வலப்பனை
முதலாம் நிலை (Yellow) எச்சரிக்கை – மாவட்டங்கள்:
-
பதுளை: ஹாலி-எல, பசறை, பதுளை, வெலிமடை, லுணுகலை.
-
கண்டி: தொலுவ
-
மாத்தறை: அம்பன்கொல
-
நுவரெலியா: அதுரட்ட, நில்தண்டாஹின்ன, அங்குரன்கெத்த.
பொதுமக்கள் கவனத்திற்கு:
-
நிலத்தில் திடீர் வெடிப்புகள் ஏற்படுதல்.
-
மரங்கள், மின்கம்பங்கள் அல்லது மதில்கள் சாய்வடைதல்.
-
தரையிலிருந்து திடீரென நீர் ஊற்றெடுத்தல் அல்லது நீரூற்றுகள் தடைப்படுதல். மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

