புதிய இணைப்பு
-
நாளை (09) பிற்பகல் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை பகுதிகளிலிருந்து காற்றழுத்தத் தாழ்வு நிலை நாட்டை நோக்கி உள்நுழையக்கூடும்.
-
வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் அதுல கருணாநாயக்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
-
தற்போதைய நிலை: கிழக்கு கடற்கரையில் பொத்துவில் பகுதியிலிருந்து தென்கிழக்கே சுமார் 350 கிமீ தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு நிலை அமைந்துள்ளது.
முதலாம் இணைப்பு
-
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று (08) காலை ஆழ்ந்த நிலையாக மாறியுள்ளது.
-
தற்போதைய நிலை: பொத்துவிலிலிருந்து தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் உள்ளது.
-
அடுத்த சில மணி நேரத்தில் கிழக்கு கடற்கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் வானிலை தாக்கங்கள்
-
நாட்டின் பல பகுதிகளில் மேகமூட்டம் காணப்படும்.
-
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்யும்.
-
காற்று: நாடு முழுவதும் 50-60 கிமீ/மணிக்கு வேகத்தில் வீசக்கூடும்.
-
சில இடங்களில் மழை அளவு 100 மில்லி மீட்டருக்கும் அதிகம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடல் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகள்
-
தீவுகள் மற்றும் கடல் பகுதிகளில் கப்பல் போக்குவரத்து மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளை தவிர்க்க எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
மக்கள் மற்றும் மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை: தேவையில்லாமல் கடல் பகுதிகளில் செல்ல வேண்டாம்.
முக்கியமான தகவல்
-
அடுத்த மறு அறிவிப்புவரை வானிலை மற்றும் கடல் நிலை தொடர்பான மேம்பட்ட தகவல்களை பின்பற்ற வேண்டும்.
-
அவசர நிலை ஏற்படும் பகுதிகளில் மக்கள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

