விமான நிலைய பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது இந்தக் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரால் கடத்தி வரப்பட்ட 2,400 சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் இந்தியப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சிகரெட்டுகளை அவர் இலங்கையில் யாருக்கு விநியோகிக்கக் கொண்டு வந்தார் என்பது குறித்து விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

