தற்போதைய காலநிலைக்கு மத்தியில் பல்வேறு வைரஸ் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தற்போது இன்ஃப்ளூயன்ஸா ஏ (Influenza A) மற்றும் பி (Influenza B) ஆகிய இரண்டு வைரஸ் தொற்றுகளும், இன்ஃப்ளூயன்ஸா அல்லாத ஏனைய வைரஸ் காய்ச்சல்களும் மக்களிடையே பரவி வருகின்றன.
குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் சிக்குன்குனியா (Chikungunya) பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதாக மருத்துவர் ஜனக சுட்டிக்காட்டியுள்ளார். காய்ச்சல் மற்றும் கடும் மூட்டு வலி இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
2026-ஆம் ஆண்டின் முதல் 9 நாட்களில் மட்டும் இலங்கையில் 2,170 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இது சுகாதாரத் துறையினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூட்டு வலி மற்றும் உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

