ஜே.வி.பியின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்­வாவின் இந்­தியப் பயணம் அர­சியல் வட்­டா­ரங்­களில் அதிகம் பேசப்­படும் ஒன்­றாக இருந்­தது.

அர­சாங்கப் பதவி வகிக்­காத போதும் அவர் இந்­திய அர­சாங்­கத்­தினால் அழைக்­கப்­பட்­டி­ருந்தார்.

ஆட்­சியில் இல்­லாத கால­கட்­டங்­களில், பல அர­சியல் தலை­வர்கள், இந்­தியா, சீனா போன்ற நாடு­களால் அழைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அதி­கா­ரப்­பூர்வ பய­ணத்தை மேற்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.

சந்­தி­ரிகா குமா­ர­துங்க, ரணில் விக்­கி­ர­ம­சிங்க, மஹிந்த ராஜபக் ஷ, நாமல் ராஜ பக் ஷ, கோட்­டா­பய ராஜபக் ஷ, சஜித் பிரே­ம­தாச போன்­ற­வர்­க­ளுக்கு இவ்­வா­றான வாய்ப்­புகள் கிடைத்­தி­ருந்­தன.

ஆனால், இவர்­க­ளி­டத்தில் இருந்து ரில்வின் சில்வா வேறு­பட்­டவர்.

ஏனென்றால், அவர் முற்­று­மு­ழு­தாக இந்­திய எதிர்ப்­பு­வா­தத்தை முன்­னி­றுத்தி, அர­சியல் செய்து வந்­தவர்.

ஜே.வி.பி அர­சியல் கட்­சி­யாக இருந்த போதும், ஆயுதப் போராட்­டத்தில் ஈடு­பட்ட போதும், அதற்குப் பின்­ன­ரான அர­சியல் செயற்­பா­டு­களின் போதும், அதன் முதன்மை இந்­திய எதிர்ப்பும், சீன சார்பும் அதன் கொள்கை நிலைப்­பா­டாக இருந்­தது.

இந்­திய – இலங்கை ஒப்­பந்­தத்­துக்கு எதிர்ப்புத் தெரி­வித்து தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்ட ஆயுத போராட்டம், இந்­தியப் படை­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள், இந்­தியப் பொருட்கள் புறக்­க­ணிப்பு போன்­ற­வற்றில் மாத்­தி­ர­மன்றி, அதற்குப் பின்­ன­ரான கால­கட்­டங்­க­ளிலும், இந்­தி­யாவை எதிர்ப்­பதை ஜே.வி.பி. முக்­கிய இலக்­காக கொண்­டி­ருந்­தது.

இந்­தியா பிராந்­திய சக்­தி­யாக இருப்­பது, எப்­போதும் இலங்­கைக்கு அச்­சு­றுத்­த­லாக இருக்கும் என்­பது ஜே.வி.பி.யின் கணிப்பு.

அதனால் அதன் பிர­தான கொள்­கை­யி­லேயே, இந்­தியா எதிர்ப்­பு­வாதம் உள்­வாங்­கப்­பட்­டது. அவ்­வாறு உள்­வாங்­கப்­பட்­ட­தற்­கான அடிப்­படை காரணம், அதன் சீன சார்பு நிலையும், சீனாவின் ஆத­ரவை பெற்றுக் கொள்­கின்­ற­உத்­தி­யா­கவும் இருந்­தி­ருக்­கலாம்.

இவ்­வா­றான பாரம்­ப­ரி­யத்தில் இருந்து வந்த ஒரு கட்­சியின் பொதுச் செய­லாளர், இன்று ஆட்­சியில் பங்கு கொள்­ளா­விட்­டாலும், அதி­கா­ரத்தை தீர்­மா­னிப்­ப­வ­ராக இருக்­கிறார். ரில்வின் சில்­வாவே நாட்டின் அதி­கா­ர­பூர்­வ­மற்ற ஜனா­தி­ப­தி­யாக செயற்­ப­டு­கிறார் என்ற குற்­றச்­சாட்டு இருந்து வரு­கி­றது.

அண்­மையில் இந்­தி­யா­வுக்குப் புறப்­ப­டு­வ­தற்கு முன்னர், பெல­வத்­தையே நாட்டை ஆள்­கி­றது என்ற குற்­றச்­சாட்டை அவர் நிரா­க­ரித்­தி­ருந்தார்.

ஆனாலும் அவர் தான், நாட்டின் நிழல் ஜனா­தி­பதி என்ற கருத்து வலு­வாக இருப்­பதை மறுக்க முடி­யாது.

இத்­த­கைய பின்­ன­ணியில், அவ­ரது இந்­தியப் பயணம் ஆச்­ச­ரி­ய­மா­னது தான்.

ஜே.வி.பி. அண்மைக் காலத்தில் இந்­திய ஆத­ரவு நிலைப்­பாட்டை எடுத்­தி­ருந்­தாலும், அது எந்­த­ள­வுக்கு உண்­மை­யா­னது, விசு­வா­ச­மா­னது, நேர்­மை­யா­னது என்ற கேள்­விகள் இருக்­கின்­றன.

நீண்ட பாரம்­ப­ரி­யத்தை விட்டு விலகி, ஜே.வி.பி. இந்­திய ஆத­ரவு நிலைப்­பாட்டை எடுக்க முனை­கி­றது என்றால் அதனை யாரும் இல­கு­வாக நம்பி விடக் கூடிய நிலை இல்லை.

அதனை சாத­க­மான ஒரு நிலை­யா­கவும் எடுத்துக் கொள்ள முடி­யாது.

இவ்­வா­றான பின்­ன­ணியில் ரில்வின் சில்வா மற்றும் குழு­வி­னரின் இந்­திய பயணம் உன்­னிப்­பாக நோக்­கப்­பட வேண்­டிய ஒன்று.

முதன்­மு­த­லாக இந்­தி­யா­வுக்கு பயணம் மேற்­கொண்ட ரில்வின் சில்­வா­விடம் உள்ள இந்­தியா தொடர்­பாக அவ­ரிடம் உள்ள எதிர்­மறை நிலையை களையும் வகையில் அவ­ரது பயண நிகழ்ச்சி நிரல் ஏற்­பட்­டா­ளர்­களால் ஒழுங்­க­மைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­தி­யாவின் நகர்­வு­க­ளுக்கு ஜே.வி.பி. எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­திய விட­யங்கள் குறித்த தவ­றான அபிப்­பி­ரா­யங்­களை களைய இந்­தியா முயன்­றி­ருக்­கி­றது.

இந்­திய- – இலங்கை ஒப்­பந்­தத்தின் மூலம் உரு­வாக்­கப்­பட்ட 13 ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வது மற்றும் மாகாண சபை­களை இயங்கச் செய்­வது குறித்து இந்­திய தரப்பில் பேச்­சுக்கள் நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­பட்­டாலும், அவ்­வா­றான பேச்­சுக்கள் நடக்­க­வில்லை என ரில்வின் சில்வா கூறி­யி­ருக்­கிறார்.

இந்தப் பய­ணத்தின் போது ரில்வின் சில்­வாவை, இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் ஜெய்­சங்கர் மற்றும், துணை தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பவன் கபூர் ஆகி­யோரே சந்­தித்­துள்­ளனர்.

இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி­யு­ட­னான சந்­திப்பு எதுவும் நடக்­க­வில்லை, இது மோடியின் பணிச்­சு­மை­யினால் தவிர்க்­கப்­பட்­டி­ருக்­கலாம். அல்­லது ரில்வின் சில்­வா­வுக்கு கூடுதல் முக்­கி­யத்­து­வத்தை கொடுக்க விரும்­பாமல் தவிர்க்­கப்­பட்­டி­ருக்­கலாம்.

ரில்வின் சில்­வா­வுக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்தே அவர் இந்­தி­யா­வுக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்தார். அப்­ப­டி­யி­ருக்க, அவ­ருக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்க விரும்­பாமல் இருக்­கலாம் என்­பது சற்று குழப்­ப­மா­னது தான்.

இந்­தி­யாவின் உயர்­மட்ட தலைவர் தன்னைச் சந்­திப்­பதை வைத்து, ரில்வின் சில்வா மிகை­யாக எடை­போ­டு­வ­தற்கும், அர­சியல் செய்­வ­தற்கும் இந்­தியா இட­ம­ளிக்க விரும்­பா­தி­ருக்­கலாம்.

புது­டெல்­லியில் இந்­தி­யாவின் தனித்­து­வ­மான டிஜிட்டல் ஆவண மையத்­திற்கு ரில்வின் சில்வா பயணம் மேற்­கொண்­டி­ருந்தார்.

இலங்­கையில் டிஜிட்டல் அடை­யாள அட்டை வழங்கும் திட்டம், இந்­தி­யாவின் ஆதார் திட்­டத்தை அடி­யொற்­றி­யது தான். இதனை நிறை­வேற்றும் பொறுப்பு இந்­தியா நிறு­வ­னத்­தி­டமே பொறுப்­பேற்­றி­ருக்­கி­றது.

டிஜிட்டல் அடை­யாள அட்­டை­களை வழங்கும் பொறுப்பு இந்­திய நிறு­வ­னத்­திடம் வழங்­கப்­ப­டு­வதை ஜே.வி.பி. கடு­மை­யாக எதிர்த்து வந்­தது.

முன்னர் இதனை பாகிஸ்­தா­னுக்கு கொடுக்க திட்­ட­மிட்­ட­போது, இந்­தியா அதனை தடுத்­தது.

இப்­போது தவிர்க்க முடி­யாமல் இந்­தி­யா­விடம் இந்தத் திட்டம் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இலங்­கையில் அண்­மையில் ஏற்­பட்ட பேரி­ட­ருக்கு பின்னர், பேரிடர் மீட்பு படை ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்கு இந்­தியா உதவ முன் வந்­தி­ருக்­கி­றது.

பயிற்சி அளிக்­கவும், தேவை­யான உப­க­ர­ணங்­களை வழங்­கவும் தயா­ராக இருப்­ப­தாக இந்­திய வெளி­யு­றவு அமைச்சர் தனது இலங்கைப் பய­ணத்தின் போதும் குறிப்­பிட்­டி­ருந்தார். அதற்கு இலங்கை அர­சாங்கம் இன்­னமும் தெளி­வான எந்த பதி­லையும் கொடுக்­க­வில்லை.

இந்­தியா உதவ முன் வரு­கின்ற சில விட­யங்­களை இலங்கை சந்­தே­கத்­துடன் நோக்­கு­கின்­றது.

இந்த விட­யத்தில் இலங்கை தரப்பை குறிப்­பாக ஜே.வி.பி.யை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்கு இந்­தியா முயன்­றி­ருக்­கி­றது.

இது­போல, இலங்­கையில் ‘மில்கோ’ மற்றும் கால்­நடை அபி­வி­ருத்திச் சபையின் பண்­ணை­களை, இந்­தி­யாவின் ‘அமுல் நிறு­வ­னத்­துக்கு 99 வருட குத்­த­கைக்கு வழங்கும் முன்­னைய அர­சாங்­கத்தின் உடன்­பாட்டை தற்­போ­தைய அர­சாங்கம் பத­விக்கு வந்­த­வுடன் இரத்து செய்­தி­ருந்­தது.

இலங்­கையின் பால்­உற்­பத்­தியை, இந்­திய நிறு­வனம் தன் கூட்டு முயற்­சியின் கீழ் கொண்டு வரு­வ­தற்கு வழி­வ­குத்த அந்த உடன்­பாடு இரத்து செய்­யப்­பட்­டது, இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான ஒத்­து­ழைப்பு மற்றும் உற­வு­களில் சற்று நெரு­டலை ஏற்­ப­டுத்­தி­யது.

இப்­பொ­ழுது அது சீராக்­கப்­பட்­டி­ருந்­தாலும், மீண்டும் அந்தக் கூட்டு ஒத்­து­ழைப்பை பலப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் இந்­தியத் தரப்பில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றதா என்று தெரி­ய­வில்லை.

அதற்­கான சூழலை உரு­வாக்கும் முயற்­சி­யாக, இந்­திய அர­சாங்கம் குஜ­ராத்தில் உள்ள ‘அமுல்’ பால் பண்ணை மற்றும் அதன் உற்­பத்தி பிரி­வு­க­ளுக்கு ரில்வின் சில்­வாவை அழைத்துச் சென்­றி­ருக்­கலாம்.

கேர­ளாவில், விழிஞ்ஞம் ஆழ்­கடல் கொள்­கலன் துறை­மு­கத்­திற்கும் ரில்வின் சில்வா அழைத்துச் செல்­லப்­பட்­டி­ருக்­கிறார்.

இது அண்­மைக்­கா­லத்தில் உரு­வாக்­கப்­பட்ட துறை­முகம். அதானி குழு­மமே இதனை உரு­வாக்­கி­யுள்­ளது.

இது முறை­யாக – முழு­மை­யாகச் செயற்­படத் தொடங்­கினால், கொழும்பு துறை­முகம் மீதான ஈர்ப்பு குறையும் என்ற அச்சம் இலங்­கைக்கு இருக்­கி­றது.

இவ்­வா­றான நிலையில், விழிஞ்ஞம் துறை­மு­கத்­திற்கு ரில்வின் சில்வா அழைத்துச் செல்­லப்­பட்­டது, அது சார்ந்து எதிர்ப்­புகள் வரு­வதை தவிர்ப்­ப­தற்கு அல்­லது வராமல் தடுப்­பதை நோக்­கத்தை கொண்­டி­ருக்­கலாம்.

விழிஞ்ஞம் துறை­முகம் தற்­போ­தைய இலங்கை அர­சாங்­கத்­தினால், அதி­ருப்­தி­யுடன் பார்க்­கப்­ப­டு­கின்ற ஒன்று. அது கொழும்பு துறை­மு­கத்­திற்கு நேர­டி­யாக சவாலை ஏற்­ப­டுத்தக் கூடி­ய­தாக இருக்­கி­றது.

இவ்­வா­றான நிலையில், அந்தத் துறை­முகம் வெற்­றி­க­ர­மாக செயற்­ப­டு­கி­றது என்ற கருத்தை நிறு­வு­வதன் மூல­மாக, எதிர்­கா­லத்தில் இலங்­கையில் உள்ள துறை­மு­கங்­களை இந்­தியா நிர்­வா­கிப்­ப­தற்­கான சூழலை உரு­வாக்­கு­கின்ற நோக்­கமும் இருக்­கலாம்.

எவ்­வா­றா­யினும், ரில்வின் சில்­வாவின் இந்தப் பயணம் அவ­ரிடம் நீண்ட கால­மாக காணப்­பட்டு வந்த இந்­திய எதிர்ப்பு வாதத்தை வலு­வி­ழக்கச் செய்­தி­ருக்­கி­றது.

அவர் நாடு திரும்பிய பின்னர் வெளிப்படுத்தியுள்ள கருத்து ஒன்றே அதற்குச் சான்று.

இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியின் போது, ஜே.வி.பி. இந்தியாவுக்கு எதிராக செயற்படவில்லை, என்றும், அப்போதைய இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கே பதிலளித்ததாகவும் கூறியிருக்கிறார்.

அதாவது, நாடு என்ற ரீதியாக இந்தியாவை எதிர்க்கவில்லை, அப்போதைய (காங்கிரஸ்) அரசாங்கத்தின் நடவடிக்கைகளையே எதிர்த்தோம் என்ற ரீதியாக அவர் பதிலளித்திருக்கிறார்.

தமது இந்திய எதிர்ப்புவாதத்தை அவர் கட்சி அரசியலாக சுருக்குவதற்கு முற்பட்டுள்ளார்.

அத்துடன், நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், இந்திய–இலங்கை உறவுகள் மாறிவிட்டன என்றும் விபரித்திருக்கிறார்.

அப்படியானால் இரண்டு தரப்புகளும் புரிந்துணர்வுக்கு வந்திருக்கின்றனவா? இணக்கப்பாட்டை எட்டியுள்ளனவா?

அத்தகைய இணக்கம்- புரிந்துணர்வு ஏற்பட்டிருக்குமேயானால், சீனா இதனை எவ்வாறு எடுத்துக் கொள்ளப் போகிறது என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.

-ஹரி­கரன்-

 

Share.
Leave A Reply