இன்று இரவு 10.00 மணி முதல் நாடு முடக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்தார்.
அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை (20.08.2021) இரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 30 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை நாடு முடக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம் போல் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரம்புக்வெல்ல அனைத்து இலங்கை மக்களும் சட்டத்தை கடைப்பிடித்து வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.