பருத்தித்துறை, மணல்காடு கடற்பரப்பில் இன்று அதிகாலை வடக்கு கடற்படையினர் நடத்திய விசேட சோதனையின்போது சுமார் 139.930 கிலோ கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது இரு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டதுடன், கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட டிங்கி படகொன்றும் கடற் படையினரால் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் பெறுமதி 41 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபர்கள் 22 மற்றும் 26 வயதுடைய பருத்தித்துறையில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள், கேரளா கஞ்சா மற்றும் டிங்கி படகு ஆகியவற்றுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க நடைமுறையில் உள்ள கொவிட்-19 நெறிமுறைகளைப் பின்பற்றி இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
41 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது #Srilanka #lka #tamilnews pic.twitter.com/Frraa33TrS
— Tamil Mirror (@Tamilmirror) August 26, 2021