சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 7 ஆம் எண் ராசியானது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர்.
ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கப்பட்ட 17.10.2014 அன்று கூட்டுத் தொகை 7. எனவே, ஜெயாலலிதாவுக்கு 7 அதிர்ஷ்ட்ட எண் என்றே அ.தி.மு.க.வினர் விளக்கமளி க்கின்றனர்.
ஜெயலலிதாவுக்கு முன்னைய ஆண்டுகளில் ராசி எண் 9 என்று கூறப்பட்டது. இதனால், ஜெயலலிதா பல்வேறு முக்கிய முடிவுகளை 9-ஆம் திகதியே எடுப்பார்.
மேலும் அவரது செயற்பாடுகள் அனைத்தும் கூட்டுத்தொகை 9 வருமாறு அமைத்துக்கொண்டார். ஆனால், தற்போது அவர் 9க்கு விடுதலை கொடுத்துவிட்டு 7-ஆம் எண்ணு க்கு மாறிவிட்டார்.
ஜெயலலிதா மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக 16.5.2011 பொறுப்பேற்றார். பதவியேற்ற நாள் 16. இதன் கூட்டுத்தொகை 7.
ஜெயலலிதா அமைச்சரவையில் 33 அமைச்சர்கள். ஜெயலலிதாவைச் சேர்த்து 34. இதன் கூட்டுத்தொகை 7. மேலும், பதவியேற்ற பிறகு புனித ஜோர்ஜ் கோட்டையில் உள்ள முதல்வர் அறையில், தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் 7 கோப்புகளில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
பிணை கிடைத்த நாளான 17.10.2014 அன்று, கூட்டு எண் 7. அதேபோன்று அன்றைய தினம் அ.தி.மு.க.வின் 43 வருட ஆரம்ப நாளின் கூட்டுத்தொகையும் 7 என அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர்.
ஜெயாவுக்கு பிணை உத்தரவாதம் அளித்தவர்களுக்கு எச்சரிக்கை
20-10-2014
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பரத் மற்றும் குணஜோதி ஆகிய இருவர் ரூ. 6 கோடிக்கு உத்தரவாதமளித்துள்ள னர்.
இதில் `எலக்ட்ரானிக் சிட்டி’ தொழிலதிபர் பரத் ரூ. 5 கோடி, கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தியின் மனைவி குணஜோதி ரூ. 1 கோடி பெறுதியான சொத்துக்களை பிணையம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், ஜெயலலிதா தப்பியோடி விட்டால் இந்த சொத்துக்கள் முடக்கப்படும் என இருவரிடமும் நீதிபதி டி.குன்கா எச்சரிக்கையுடன் தெரிவித்தார்.
இதேபோன்று, சசிகலாவுக்கு எஸ்.வி.சி.கே. கல்வி நிறுவுனர் இலட்சுமிபதி, கர்நாடக மாநில அ.தி.மு.க. இணைச் செயலர் ராஜுவும், சுதாகரனுக்கு இலட்சுமிபதி மகன் லோகேஷ், ராஜுவின் மனைவி அன்பம்மாளும், இளவரசிக்கு கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலர் புகழேந்தி, பொருளாளர் ராஜேந்திரனும் பிணை உத்தரவாதம் அளித்துள்ளார்கள்.
சிறை அதிகாரிக்கு நன்றி தெரிவித்துச் சென்ற ஜெயா
‘சிறையில் எனக்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை” என விடுதலைக்கு முன்பு ஜெயலலிதா கூறியதாக கர்நாடக சிறைத்துறை அதிகாரி ஜெய்சிம்ஹா தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதா தனக்கு இதன்போது நன்றி தெரிவித்திருந்தாகவும் ஜெய்சிம் ஹா குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், `பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவு வந்துள்ளது என ஜெயலலிதாவிடம் நான் கூறியபோது, எந்த பெரிய மாற்றத்தையும் அவர் முகத்தில் காட்டவில்லை.
வெறும் புன்னகையை மட்டுமே அவரிடமி ருந்து பதிலாக வந்தது. அதேநேரத்தில், சசிகலா, இளவரசி ஆகியோரிடம் இந்த சந்தோஷத்தை அவர் பகிர்ந்து கொண்டதாக அறிந்தேன்.
சிறையில் என்னை சந்தித்தபோது, என் குடும்ப விபரங்களை கேட்டுத் தெரிந்து கொண் டார். யாரையும் சந்திக்காத அவர், என்னையும் என் குடும்பத்தையும் பற்றி விசாரித்தது எனக்கு சந்தோஷத்தை தந்தது.
சிறையிலிருந்து வெளியேறும்போது, ‘எனக்கு போதிய ஒத்துழைப்பு அளித்தமைக்காக உங்களுக்கு நன்றி. இங்கிருந்த நாட்களில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொண்டீர்கள். அதற்காக உங்களை நான் பாராட்டுகிறேன்’ என்று கூறினார்” என்றார்.
சிறையிலிருந்த நாட்களில் ஜெயலலிதா, பூஜை, விரதம் மேற்கொண்டதால் அவர் நான்கு கிலோ எடை குறைந்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
காருக்கு திருஷ்டிகழிப்பு
ஜெயலலிதா வழக்கமாக விலையுயர்ந்த `டொயோட்டா பார்ச்சூனர்’ காரில் பயணிப்பது வழக்கம். சிறையிலிருந்து பெங்களூர் விமான நிலையம் செல்வதற்காக தமிழகத்திலிருந்து நேற்றுமுன்தினம், அந்த கார் சிறை வளாகத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. கார் சிறை வளாகத்தி ற்கு வந்ததும், அங்கு வைத்து காருக்கு சிறப்பு திருஷ்டி கழிப்பு பூஜை நடந்தது.
முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் பூஜை நடந்தபோது அருகில் இருந்தனர். பூசணிக்காய் உடைத்து அந்த காருக்கு திருஷ்டி கழிக்கப்பட்டதாக சிறைவட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. இதன் பின்னர், ஜெயலலிதா உள்ளி ட்டோர் அந்த காரில் ஏறிச்சென்றார்கள்.