ஏறாவூர் புகையிரத நிலைய வீதியில் முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து பெண் போல் வேடமிட்டு நடமாடிய இளைஞர் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.
நேற்றைய தினம் ஏறாவூர் புகையிரத நிலைய வீதியில் உள்ள – அல் ராயிஸ் சர்வீஸ் செட் அருகில் முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து பெண் போல் வேடமிட்டு நடமாடிய இளைஞர் ஒருவரையே அப்பகுதியில் நடமாடிய பொது மக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
பிடிக்கப்பட்ட இளைஞர் முஸ்லிம் இளைஞர் என்பதுடன் அவர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் தனது ஆடைகளை மறைத்துவைத்துள்ளதுடன் மார்பகங்களுக்கு தேங்காய் சிரட்டைகளையும் வைத்திருந்துள்ளார்.
அபாயாவுடன் கையும் மெய்யுமாக பிடி பட்டவர் ஏறாவூர் ஓடாவியார் வீதியை சேர்ந்தவர் என்பதுடன் அவர் குறித்த ஆடையை ஆசையின் நிமிர்த்தமே அணிந்ததாக கூறியுள்ளார்.
எனினும் இது குறித்து பொலீசாரிடம் வினவியபோது இது குறித்து தங்களுக்கு எந்த முறைப்பாடும் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தனர்.