news@ilakkiyainfo.com

பிரிவுகள்

BREAKING NEWS

கள்ளக்காதலனுடன் மனைவி தீட்டிய கொடூரத் திட்டம் முறியடிப்பு

நகரமே அந்தச் செய்தியைக் கேட்டு உறைந்து போயிருந்தது. ஒரு ஓய்வுபெற்ற இராணுவ வீரர், நாட்டின் எல்லைகளைக் காத்து ஓய்வுபெற்று வந்தவர், இறுதியில் தன் சொந்த வீட்டிற்குள்ளேயே இழைக்கப்பட்ட ஒரு நயவஞ்சகத்திற்குப் பலியாகியிருந்தார்.கர்நாடக மாநிலத்தின் பெலகாவி நகரத்தில் அன்று மாலை, சந்தீப்பின் சகோதரி காவல் நிலையத்தின் படிக்கட்டுகளில் தவிப்புடன் நின்றுகொண்டிருந்தார்.தன் அண்ணனின் மரணத்தில் ஏதோ ஒன்று சரியாகத் தெரியவில்லை என்பது மட்டும் அவருக்குத் தெளிவாகப் புரிந்திருந்தது.அந்தத் தவிப்பு, ஒரு பெரிய கொலையின் முகத்...

பதறினார் கோட்டா: கைது செய்ய வேண்டாமென நீதிமன்றில் மனுத்தாக்கல்

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுத்து கட்டளையை பிறப்பிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அதன் பொறுப்பிலக்கியத் தலைவர் மாதவ குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். முந்திய செய்தி... உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான நடப்பு விசாரணைகள் நிமித்தம், முன்னாள் ஜன...

யாழ் – கண்டி பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவ, கல்கண்டேகம பகுதியில் இன்று (17) புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பூநாவ பொலிஸார் தெரிவித்தனர். நுரைச்சோலையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பட்டா வாகனம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில், பின்னால் வந்த உரம் ஏற்றிய லொறி அதனுடன் மோதி விபத்துக்குள்ளாகியதுடன், குறித்த லொறியானது தரித்து நின்ற பட்டா மீது கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்த...

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து 10 எலும்புக்கூடுகள் மீட்பு: இரு சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தை அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இரு சிறுவர்கள் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25ஆம் நாள் அகழ்வு பணிகள் திங்கட்கிழமை (15) நடைபெற்றது.அதன்போது புதிதாக 05 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் சிறுவர்கள் குழந்தையின் என்புக்கூடுகள் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.மீட்கப்படும் என்புக்கூடுகள் பல உடைந்த நிலையில், நேர்சீரின்மையான...

ஒற்றுக் கொடுத்தவரின் வாயை அறுத்த விபரீதம்

தமக்கு எதிராகக் காவல்துறையினருக்கு ஒற்றுக் கொடுத்ததாகக் கூறி, கறுவாத் தொழிலாளி ஒருவரின் வாயைத் கூர்மையான ஆயுதத்தால் அறுத்து காயப்படுத்திய சந்தேகநபர் ஒருவரை, திங்கட்கிழமை (15) பிற்பகல் கரந்தெனிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இந்தச் சம்பவம் கரந்தெனிய, எகொடவெல பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குறித்த கறுவாத் தொழிலாளி, போதைப்பொருள் தொடர்பான தகவல்களைத் தமக்கு வழங்கியதாலேயே ஆத்திரமடைந்த சந்தேகநபர், கத்தியால் அவரது வாயை அறுத்துள்ளார்.போதைப்பொருள் குற்றச்சாட்டு ஒன்றிற...

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணை: தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர்,  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அதன் நிலையப் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன ஆகியோர் பெ...

சர்வதேச கால்பந்து களத்தில் மின்னிய கறுப்பு அழகி (வீடியோ)

சர்வதேச கால்பந்துப் போட்டிகளின் போது, மைதானத்தில் இருக்கும் ரசிகர்களின் உற்சாகமும், சில எதிர்பாராத நிகழ்வுகளும் உலகளாவிய கவனத்தை ஈர்ப்பது வழக்கம். அந்த வகையில், உலகக்கோப்பை கால்பந்து தொடரின் போது, மைதானத்தில் தனது தன்னம்பிக்கை மிக்க தோற்றத்தாலும், இயல்பான அழகாலும் ரசிகை ஒருவர் ஒட்டுமொத்த கேமராக்களின் கவனத்தையும் ஈர்த்து சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியானார்.அந்த ரசிகையின் புகைப்படங்க...

ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. ட்ரம்பைச் சாடும் இஸ்ரேல் ஊடகங்கள்.. என்ன காரணம்?

இஸ்ரேலில் உள்ள நெதன்யாகு ஆதரவு ஊடகங்கள், அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தத்தையும் அதிபர் ட்ரம்ப்பையும் கடுமையாகச் சாடியுள்ளன.ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மௌனமாக இருப்பது சர்ச்சையாகியுள்ளது. நெதன்யாகு ஆதரவு ஊடகங்கள் அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தையும், கத்தாரின் நடுவர் வேடத்தையும் கடுமையாக விமர்சிக்கின்றன. அமெரிக்கா இஸ்ரேலை தனிமைப்படுத்திவிட்டதாக குற்றச்சாட்டு எழ, ட்ரம்ப் பலவீனமான தலைவராக சித்தரிக்கப்படுகிறார்.ஈரான் - அமெரிக்க போர் முடிவடைந்ததாகவும்,...

வடக்கின் "கரம்" சம்பியன் ஆனார் வேலணை மத்தியின் மாணவி!

வடமாகாண மட்ட திறந்த கரம் போட்டியில் யாழ் மாவட்ட அணி சார்பில் ஒற்றையர் ஆட்டத்திலும் குழு போட்டியிலும் கலந்து கொண்ட ஜெ.விதுர்ஷினி இவ் வருடத்திற்கான (2026) வடமாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதே போன்று குழு போட்டியிலும் கலந்துகொண்டு வடமாகாண அணிக்கு தனது திறமையை வெளிப்படுத்தி அணி சம்பியன்னாவதற்கும் பங்காற்றியுள்ளார். முன்பதாக கடந்த 18.04.2026 நடைபெற மாவட்ட மட்ட கரம் போட்டியில் வேலணை பிரதேச செயலகம் சார்பில் கலந்து கொண்டு மாவட்டமட்ட போட்டியில் வெற்றி பெற்று யாழ் மாவட்ட அணியில் இடம் பிடித்திர...

“என் இனிய தமிழ் மக்களே...” ; கம்பீரக் குரல் மௌனமானது

புதுக்கவிதையாகத் தந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, புதன்கிழமை (ஜூன் 10) அதிகாலை காலமானார். அவருக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். பிறப்பும் சினிமா மீதான ஈர்ப்பும்: இயக்குநர் பாரதிராஜா கடந்த 1941-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் திகதி, தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் பெரியமாயத்தேவர் – கருத்தம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் சின்னச்சாமி ஆகும். பள்ளிப் பருவத்திலேயே இலக்கியம், பேச்சுப்போட்டி மற்றும் மேடை நாடகங்களில் அதிக ஆர்வம் காட்...

கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கோர விபத்து: 15 பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம்

கண்டி – யாழ்ப்பாணம் A-9 பிரதான வீதியின் கடுகஸ்தோட்டை, கலகல பகுதியில் திங்கட்கிழமை (15) பிற்பகல் பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்து தொடர்பாக கடுகஸ்தோட்டை பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாடசாலை வேனில் பயணித்த 15 மாணவ, மாணவிகளும் வேன் சாரதியும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்தவர்கள் உடனடியாக கடுகஸ்தோட்டை பிரதேச வைத்தியசாலைக்கும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்...

70 ஏவுகணைகள்; 611 ட்ரோன்கள்.. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்.. கீவ் தேவாலயம் சேதம்!!

70 ஏவுகணைகள்; 611 ட்ரோன்கள்.. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்.. கீவ் தேவாலயம் சேதம்!!உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று அதிகாலை ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 11 பேர் உயிழந்திருப்பதுடன், 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட யுனெஸ்கோ பாரம்பரிய தளங்களில் ஒன்றான கீவ்-பெச்செர்ஸ்க் லாவ்ரா பேராலாயமும் சேதமடைந்திருக்கிறது.நேட்டோ கூட்டணியில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இதையடுத்து, தொடங்கிய இரு நாடுகளுக்கு இடையேயான ப...

QR கேட்ட ஊழியருக்கு ஓட ஓட அடி

மதுரங்குளிய, 10ஆம் கட்டை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களிடம், QR குறியீட்டை கேட்ட ஊழியரை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், தங்களுடைய வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புமாறு ஊழியரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அந்த ஊழியர், எரிபொருள் வழங்குவதற்கான QR குறியீட்டைக் (QR Code) காட்டுமாறு கோரியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், "நாங்கள் மதுரங்கு...

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்றம் இன்று- (வீடியோ இணைப்பு)

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்  இன்று திங்கட்கிழமை (15) நண்பகல் 12 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெறும் திருவிழாக்களில் எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குடைத்திருவிழாவும் முத்துச் சம்பரமும், 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கைலைக்காட்சியும், 24 ஆம் திகதி புதன்கிழமை கைலைக்காட்சி மற்றும் திருமஞ்சமும் நடைபெறவுள்ளன. ...

கே.பி: குமரன் பத்மநாதனின் தங்கக் குவியல் எங்கே?

-தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் விசாரணைகள்கே.பி. என அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான குமரன் பத்மநாதனிடம் இருந்திருக்கக் கூடிய பெருந்தொகையான தங்கக் கட்டிகள் மற்றும் ஆபரணங்கள் எவ்வாறு காணாமல் போயின என்பது தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.குமரன் பத்மநாதனை பாதுகாப்புப் படையினர் கைது செய்தபோது அவரிடமிருந்த பெருந்தொகை யான தங்கம் பாதுகாப்பு படையினர் வசம் வந்தது. பின்னர், அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. இந்தத் தங்கம் மாயமாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுவதையடுத்தே இலஞ்ச ஊழல்...

அக்கரப்பத்தனை ஆட்லோ தோட்டத்தில் ஆற்றில் மிதந்துவந்த சடலம் மீட்பு

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆட்லோ தோட்டத்தில் உள்ள ஆற்றில் இருந்து, முதியவர் ஒருவரின் சடலம் திங்கட்கிழம (15) காலை 6 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், இரு பிள்ளைகளின் தந்தை ஆவார். 74 வயதுடைய இவர் கடந்த 14ஆம் திகதி மாலை 7 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், உறவினர்களும் தோட்ட மக்களும் இணைந்து அவரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.தேடுதலின் போது, வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலுள்ள ஆற்றில் அவர் சடலம...

வினோதத் திருடர்களின் வினோதச் செயல்

திருடிய மோட்டார் சைக்கிளை மீண்டும் திருடப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்து விட்டுச் சென்ற வினோத சம்பவம் ஒன்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, தபாலக வீதியில் இடம்பெற்றுள்ளது.ஓட்டமாவடி தபாலக வீதியிலுள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அடையாளம் தெரியாத இருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை 2.30 மணியளவில், திருடிச் சென்றனர். இந்தத் திருட்டுச் சம்பவம், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி (CCTV) கெமராவில் தெளிவாகப் பதிவாகியிருந்தது. இக்காட்சிகளின்...

பிள்ளையானுடன் தொடர்புடைய 5 கொலைகள் தொடர்பான அறிக்கை இன்று நீதிமன்றிற்கு

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ) கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) வழிகாட்டுதலின் கீழ் மட்டக்களப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பான இரகசியத் தகவல்களைக் தகவல்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளன.இந்த விபரங்கள் அடங்கிய விசேட அறிக்கை இன்று (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ...

நெடுந்தீவுக்கான சேவையில் மீண்டும் வடதாரகை படகு! ; குமுதினியும் நெடுந்தாரகையும் விரைவில் சேவையில் இணையும்

நெடுந்தீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் திங்கட்கிழமை (15) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை, நெடுந்தாரகை மற்றும் குமுதினி ஆகிய மூன்று படகுகளும் பழுதடைந்தமையால் நெடுந்தீவுக்கான பயணத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், அந்த படகுகளை துரிதமாக திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்...

கணிக்க முடியாத இஸ்ரேல்: அமெரிக்கா - இரான் 'ஒப்பந்தம்' பற்றி நீடிக்கும் கேள்விகளும் சவால்களும்

கணிக்க முடியாத இஸ்ரேல்: அமெரிக்கா - இரான் 'ஒப்பந்தம்' பற்றி நீடிக்கும் கேள்விகளும் சவால்களும்அமெரிக்கா - இரான் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்த அறிவிப்பு, டொனால்ட் டிரம்புக்கு மிகவும் வரவேற்கத்தக்க பிறந்தநாள் பரிசை வழங்கியுள்ளது. இருப்பினும் இது கணிசமான அளவு நிச்சயமற்ற தன்மையால் சூழப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தை தனது சமூக ஊடகப் பதிவில் அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணை வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு திறக்கப்படும் என்றும், அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கும் என்று...

புளத்சிங்கள பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த தம்பதியினரின் சடலங்கள் மீட்பு

களுத்துறை புளத்சிங்கள பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் வசித்து வந்த தம்பதியினர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.புளத்சிங்கள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எகலோயா பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தின் மேல் மாடியில் குறித்த இருவரும் நேற்று 14) ஞாயிற்றுக்கிழமை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலங்களை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.அதற்கமைய எகலோயாவை  சேர்ந்த 55 வயதுடைய பெண்ணும், அ...

` ஈரோடு: மதுபோதையில் லாரியால் மோதிச் சென்ற ஓட்டுநர் - துரத்திச் சென்று பிடித்த துணிச்சல் பெண்!

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரை பெண் ஒருவர் ஸ்கூட்டியில் விரட்டிச் சென்று மடக்கி பிடித்த வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவி வைரலாகி வருகின்றன.ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒருவர், நேற்று மாலை ஸ்கூட்டியில் சென்றுள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா சந்திப்பு அருகில் சென்றுக் கொண்டிருக்கையில், பின்னால் வந்த லாரி ஒன்று பெண்ணின் ஸ்கூட்டி மீது மோதியிருக்கிறது.அதில் நிலைத்தடுமாறிய அந்த பெண் ஸ்கூட்டியுடன் கீழே விழ...

மாமா... உன் பொண்ண கொடு`னு இனி கேட்க முடியாது...

நெருங்கிய இரத்த உறவுகளுக்கு இடையிலான திருமண வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், சுவீடன் நாட்டு பாராளுமன்றம்   ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய சட்டத்தை அதிரடியாக நிறைவேற்றியுள்ளது. அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற நெருங்கிய இரத்த உறவுகளுக்கு இடையே நடைபெறும் திருமணங்களை (Cousin Marriage) முற்றிலும் தடை செய்யும் வகையிலேயே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை இயற்றியதன் பின்னணியில் மிக முக்கியமான காரணங்களை சுவீடன் அரசு முன்வைத்துள்ளது: • சமூகப் பாதுகாப்பு: குடும்ப அழுத்தம், க...

'அமெரிக்கா - இரான் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது': ஹோர்மூஸ் பற்றி டிரம்ப் கூறியது என்ன?

அமெரிக்கா - இரான் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டு விட்டதாக மத்தியஸ்தராகச் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமெரிக்காவுக்கும் இரான் இஸ்லாமியக் குடியரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துவதாக இரு தரப்பினரும் அறிவித்துள்ளனர்.இதற்கான அதிகாரப்பூர்வ கையெழுத்திடும் நி...