news@ilakkiyainfo.com

பிரிவுகள்

BREAKING NEWS

"நிற்கும் பாபா" என்று அழைக்கப்படும் விரதம்: 12 ஆண்டுகளாக அமராமல் தவம்

ஆன்மீகத்திற்கும், அசைக்க முடியாத நம்பிக்கைகளுக்கும் பெயர் பெற்ற இந்தியாவில், பல வியக்கத்தக்க தவ முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இது ஏதோ எடிட்டிங் செய்யப்பட்ட படம் அல்ல; நெஞ்சை உலுக்கும் ஒரு நிஜ ஆன்மீகத் தவத்தின் சாட்சியே ஆகும்.இந்தியாவில் வாழும் தீவிர ஆன்மீகத் துறவிகளில் சிலர், "நிற்கும் பாபா" என்று அழைக்கப்படும் மிகக் கடினமான விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். இந்தத் தவத்தின் பின்ன...

சுவிட்சர்லாந்தில் இன்று விறுவிறுப்பான பொதுவாக்கெடுப்பு: சனத்தொகையை ஒரு கோடியாகக் கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு மக்கள் ஆதரவா?

சுவிட்சர்லாந்தின் ஒட்டுமொத்த சனத்தொகையை சட்டப்பூர்வமாக ஒரு கோடியாகக் கட்டுப்படுத்துவது தொடர்பான மிக முக்கிய மற்றும் உலக நாடுகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுவாக்கெடுப்பு இன்று (14)  ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த வாக்கெடுப்பானது அந்நாட்டில் குடியேற்றம், பொதுச் சேவைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுவிஸின் உறவு குறித்த விவாதங்களை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.வலதுசாரி கட்சியான 'சுவிஸ் மக்கள் கட்சி' முன்னெடுத்துள்ள இந்தத் திட்டம், நாட்டின் வீட்டுவசதி, ...

தாக்கப்படுவதை தவிர்க்க இரானுடன் ரகசிய ஒப்பந்தமா? ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் விளக்கம்

தாக்கப்படுவதை தவிர்க்க இரானுடன் ரகசிய ஒப்பந்தமா? ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் விளக்கம்மார்ச் 14-ஆம் தேதி, ஃபுஜைராவில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய எரிசக்தி மையம் ஒன்றின் மீது இரான் தாக்குதல் நடத்தியது.அமெரிக்கத் தடைகளால் முடக்கப்பட்ட பல பில்லியன் டாலர் நிதியை விடுவிக்க இரான் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டதாக வெளியான தகவல்களை ஐக்கிய அரபு அமீரகம் முற்றிலும் மறுத்துள்ளது. இச்செய்திகள் ஆதாரமற்றவை என்று அந்த நாடு தெரிவித்துள்ளது.இரானின் முடக்கப்பட்ட பல பில்லியன் டாலர் நிதியை விடுவிக்க ஐக்கிய அரப...

மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்

சென்னை: தமிழக முதல்வர் விஜய் தனது மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களின் விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு ஜூன் 15 (நாளை மறுநாள்) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் விஜய், தனது மனைவி சங்கீதாவுடன் சேர்ந்து மீண்டும் வாழ்வது தொடர்பாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.தமிழ் சினிமாவில் 'டாப்' நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் நுழைந்தார். நடந்து முடிந்த சட்டசபை தே...

உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு

நியூயார்க்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஒப்பந்தம் இன்று (ஞாயிறு) கையெழுத்தாகவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரம் குறித்து சந்தேகம் எழுப்பியிருந்த ஈரானின் முந்தைய அறிவிப்புக்கு இது முற்றிலும் முரணாக அமைந்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த அமைதி ஒப்பந்தம், மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையை உடனடியாக மீண்டும் திறக்க வழிவகுக்கும் என்று டிரம்ப் கூறினார். ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் ஹார்முஸ் நீரிணை உடனடியாக "அனைவருக்கும் திறக்கப்பட...

ஈரானுடன் அமைதி உடன்படிக்கை நாளை கையெழுத்தாகும் - டிரம்ப் அறிவிப்பு

தனது 'Truth Social' சமூக ஊடகக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி, இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து 'ஹோர்முஸ் நீரிணை'  உடனடியாக அனைவருக்கும் திறந்துவிடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஈரானுடன் அமெரிக்கா கொண்டுள்ள உறவானது, முந்தைய அமெரிக்க நிர்வாகங்களை விட முற்றிலும் மாறுபட்ட ஒரு உறவு என்று தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தில் ஈரான் மற்றும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். இருப்பினும், இந்த ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகாது என ஈர...

கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவனின் சடலம், வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நேற்று (12) இரவு இந்தச் சிறுவன் காணாமல் போயுள்ளதாகப் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சிறுவனின் சடலம் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பான ம...

பிஸ்கட் வாங்க சென்ற சிறுமிக்கு நடந்த அதிர்ச்சி… 65 வயது வர்த்தகர் கைது

மாதம்பே பகுதியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 65 வயது வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மாதம்பே, கருக்குவட்டவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் அவரது கடையில் இருந்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெர...

2029 நாமல் ஜனாதிபதி ; தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு - அர்ச்சுனா இராமநாதன்

நாமல் ராஜபக்ஷ தனது சிங்கள இனத்தின் மீது பற்றுக்கொண்டுள்ளார். ஆகவே அவர் ஏனைய இனங்களையும் ஆதரிப்பார். 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். அவருடன் பேசி நாங்கள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக்குத் தீர்வு காண்போம். புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இந்த அரசாங்கத்துக்கு நிதியளிக்க கூடாது என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கௌரவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஏற்பாடு செய்த நிகழ்வு க...

`ரூ.15 லட்சம் கோடி என்ன ஆனது?' செபியின் பிடியில் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்!தங்க சாம்ராஜ்யம் சரிகிறதா?

`கடந்த ஐந்து நிதியாண்டுகளில், சுமார் ₹15.15 லட்சம் கோடி மதிப்பிலான வருவாயை தவறாகக் கணக்கு காட்டி, நிதி மோசடியில் ஈடுபட்டதாக செபி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு, ஒட்டுமொத்த தொழில் உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவின் கார்ப்பரேட் உலகில் பல ஆண்டுகளாக ஒரு வெற்றிக் கதையாக வலம் வந்தது ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ். பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், தங்கச் சுத்திகரிப்பு, நகை ஏற்றுமதி என உலகளாவிய தங்க வர்த்தகத்தில் ஒரு மாபெரும் சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இந்தியாவின் மிகப்பெர...

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன.தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ''இந்த வார இறுதிக்குள் போர் நிறுத்தம் ஏற்படலாம். பேச்சுவார்த்தையின் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டோம்'' என்று தெரிவித்திருந்தார்.நேற்று, ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் பக்கத்தில்..."இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் (Islamabad MoU) இறுதிக்கட்டத்தை...

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த இஸ்லாமிய தீவிரவாதத்தின் உண்மையான வேர்கள் இன்னும் நாட்டுக்குள் செயற்பட்டு வருவகின்றன. சஹ்ரான் ஹாசிமை உருவாக்கிய சிந்தனை மற்றும் கொள்கை அடித்தளங்கள் அழிக்கப்படாமல் தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை, அதனைச் சுற்றியுள்ள அரசியல் விவாதங்கள் மற்றும் தற்போதைய ...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதான சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் விடுதலை: நாமல் வரவேற்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்  கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  24 வயதுடைய சொல்லிசைக் கலைஞர்  சங்கீத்சன் கணேஸ்குமார் விடுவிக்கப்பட்டமையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வரவேற்றுள்ளார்.இது குறித்துத் தனது உத்தியோகபூர்வ எக்ஸ்  சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, இக்கலைஞரின் விடுதலைக்கு பின்னால் உள்ள அரசியல் குறித்துத் தான் எந்தவொரு கருத்தையும் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்."இந்த முடிவுக்குப் பின்னால் உள்ள அரசி...

பேத்தியை முன்பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாத்தா லொறிச் சில்லில் சிக்குண்டு பலி!

மாத்தளை இராஜ வீதி பொலிஸ் காரியாலயத்திற்கு முன்னால் இன்று சனிக்கிழமை (13) காலை 9.00 மணியளவில் மாத்தளை கிளையிலிருந்து – கொழும்பு நோக்கி பயணித்த லாப் சமையல் எரிவாயு சிலின்டர்களை ஏற்றிச்சென்ற லொறியின் சில்லில் சிக்குண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 74வயது மதிக்கத்தக்க, உக்குவளை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.குறித்த நபர் உக்குவளையில் இருந்து மாத்தளையில் உள்ள பாலர் பாடசாலைக்கு தனது பேத்தியை அழைத்துச் சென்ற வேலையிலேயே இப்பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் தூக்கி எறியப்பட்ட...

இஸ்ரோ விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்தின் புடவை அமெரிக்க அருங்காட்சியகத்தில்; காரணம் என்ன?

ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தின் `கோள்களுக்கிடையேயான அறிவியல் சேகரிப்பில்' இடம்பெற்றுள்ள முதல் இந்தியப் பொருள் இந்தப் புடவைதான்அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற `ஸ்மித்சோனியன் தேசிய விமான விண்வெளி அருங்காட்சியகத்தில்' (Smithsonian's National Air and Space Museum) இஸ்ரோ (ISRO) விஞ்ஞானி நந்தினி ஹரிநாத் அவர்கள் மங்கள்யான் திட்டத்தின்போது அணிந்திருந்த பட்டுப்புடவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.2013, நவம்பர் 5-ம் தேதி இஸ்ரோவால் `மங்கள்யான்' (Mars Orbiter Mission) விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட...

'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

இந்தியா ஏன் ரஷ்ய எண்ணெயை அதிகம் வாங்குகிறது என்பதற்கு ஜெய்சங்கர் பதில்தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார்.பின்லாந்தில் நடந்த குழு விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஜெய்சங்கரிடம், 'இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக பரிவு காட்டுகிறது. ரஷ்ய எண்ணெய் வாங்குவதில் மிக ஆர்வமாக இருக்கிறதே' என்கிற கேள்வியைக் கேட்டார்.இதற்கு ஜெய்சங்கர், "முதலில் எல்லாரும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.உலகச் சந்தையில் எண்ணெயின் விலையை நிலைப்படுத்துவத...

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய குடியேற்றம் புகலிட ஒப்பந்தம்

'புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து ஜூன் 12 முதல் அமுலாகவுள்ள புதிய ஒழுங்குமுறைமைகள் பற்றி பார்வை'சர்வதேச அளவில் வறுமை, வேலைவாய்ப்பின்மை, சிறந்த எதிர்காலத்தைத் தேடித் தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறுதல், போர், உள்நாட்டு வன்முறை, அரசியல் பழிவாங்கல்கள், உயிருக்கு அச்சுறுத்தல் சர்வதேச எல்லைகளை நோக்கி தினசரி ஆயிரக்கணக்கானவர்கள் நாளாந்தம் நகர்ந்தவண்ணம் உள்ளனர். குறிப்பாக, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசிய நாடுகளிலிருந்து ஐரோப்பாவை நோக்கி வரும் இவர்களின் எண்ணிக்கை கடந்த தசாப...

இளைஞரின் உயிரை காப்பாற்றிய இன்ஸ்டாகிராம் பதிவு.. கடைசி நொடியில் தற்கொலையை முறியடித்த மெட்டா ...

:"உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் சர்தானா பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கடந்த ஜூன் 7 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார்.அந்த வீடியோவில் அவர் ஒரு வெள்ளை நிற திரவத்தைக் குடிப்பது போன்ற காட்சிகள் இருந்தன. அந்தப் பதிவின் கீழே \"Be happy in your life\" என்ற வரிகளையும் அவர் பகிர்ந்திருந்தார்.ஒரு பயனர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தற்கொலை செய்துகொள்ளும் வகையிலான வார்த்தைகளையோ, வீடியோக்களையோ பதிவிட்டால் அதனை மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உடனடி...

கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு

சென்னை: பாரதிராஜா தனியாகக் கஷ்டப்பட்டு, தூக்கத்திலேயே அவரது ஆன்மாவும் பிரிந்துவிட்டது. இது மிகவும் கொடுமையான விஷயம். அவர் மறைந்தாலும், தனது மகன் மனோஜின் குடும்பத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற அவரது கடைசி ஆசையாவது இனி நிறைவேற்றப்பட வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.media circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள வெங்கடேச்ன், "பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த இயக்குனர் கங்கை அமரன், அங்கிருந்த குடும்பத்தினரை நோக்கி, "கடைசியில எல்லா...

நடுரோட்டில் பேண்ட்டை கழற்றிய ரஜினிகாந்த்.. அதிர்ச்சியோடு சொன்ன நடிகர்.. இப்படியும் நடந்ததா?

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் 2, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம், கமலுடன் நடிக்கும் KHXRK ஆகிய திரைப்படங்கள் வரவிருக்கின்றன. இந்த மூன்று படங்களின் மீதும் அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. கண்டிப்பாக வேட்டையன், கூலி ஆகிய படங்களில் சந்தித்த பின்னடைவை இதில் அவர் சரி செய்வார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள். ரஜினி கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக நடித்துவருகிறார். எத்தனை இளம் ஹீரோக்கள் வந்தாலும் அவர்களுக்கும் சரியான போட்டியை கொடுத்துக்கொண்டிருக்கிறார். இத்தனை வெ...

39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி!

உலகளாவிய கமாடிட்டி மற்றும் நிதிச் சந்தைகளில் கடந்த சில மணிநேரங்களாக நிலவி வரும் உச்சக்கட்ட பரபரப்பிற்குப் பின்னால் ஒரு மாபெரும் சந்தை ஏமாற்று வேலை (Market Manipulation) ஒளிந்திருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று இரவே ஈரான் மீது தாக்குதல் நடத்தி கார்க் தீவை கைப்பற்றப்போவதாக அறிவித்த நிலையில், அடுத்த சில மணிநேரத்தில் ஈரான் உடன் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்த கையெழுத்திட தயாராகியுள்ளோம் என டிரம்ப் அறிவித்தார். இது அனைத்தும் முற்றிலும் உண்மை...

'அச்சுறுத்தியவரை பல ஆண்டு நினைவில் வைத்திருக்கும்' - அபார அறிவாற்றலுடன் செயல்படும் காகங்கள்

காகங்கள் மனிதர்களின் கற்பனையில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளன. நாட்டுப்புறக் கதைகளில் அவை தந்திரக்காரர்களாக, தூதர்களாக, திருடர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு கலாசாரங்களில் இந்தப் பளபளப்பான கருநிறப் பறவை பெரும்பாலும் அசாதாரணமான புத்திசாலித்தனத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.காகம் தொடர்பான பல்வேறு ஆய்வுகளில், அவற்றால் தமது பயன்பாட்டிற்கு உரிய கருவிகளை உருவாக்க, சிக்கலான புதிர்களைத் தீர்க்க, முகங்களை நினைவில் கொள்ள, தனது தேவைக்கு ஏற்ப சுற்றியிருக்கும் சூழலை மாற்றியமைத்துக் கொள்ள முடிய...

3 ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த நிலையில் தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார்

தாய்லாந்து மன்னர் வஜிராலோங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டு அரச குடும்பத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான இளவரசி பஜ்ரகிதியாபா தனது 47ஆவது வயதில் காலமானார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தாய்லாந்து அரச மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது நாய்களுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரது இதயத்தில் ஏற்பட்ட ‘மைகோபிளாஸ்மா’ தொற்றினால்  கடும்  இதயத...

12 வயது சிறுமி போல் நடித்து 14 மாதங்கள் ஏமாற்றிய 37 வயது பெண்

"நான் 12 வயது சிறுமி; துன்புறுத்தலில் இருந்து தப்பித்து வந்திருக்கிறேன்; எனக்கு யாரும் இல்லை" என்று உதவி கேட்டு வந்த அந்தச் சிறுமிக்காக, பிரேசில் மக்கள் தங்கள் வீட்டின் கதவுகளைத் திறந்து உதவினர்.ஆனால், 'கேப்ரியல்' என்ற பெயரில் வலம் வந்த அந்தச் சிறுமியின் உண்மை முகத்தை பிரேசில் அதிகாரிகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். அவர் உண்மையில் 37 வயதுடைய பெண் என்றும், உதவி தேவைப்படும் ஆட்டிசம் பாதிப்புள்ள சிறுமி போல நடித்து மக்களை ஏமாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.அந்தப் பெண்ணை ஜூன் 3-ஆம்...