Author: owner

1945-ம் ஆண்டுக்கு பிறகான ஐரோப்பாவின் மிக மோசமான போரில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை ஒரு சிறிய ராஜதந்திர முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. யுக்ரேன் மற்றும் ரஷ்யாவின் பிரதிநிதிகள் மார்ச் 2022 க்குப் பிறகு முதல் முறையாக பேச்சுவார்த்தைக்கு நேருக்கு நேர் வந்தனர். இந்த சந்திப்பு, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள பாஸ்ஃபரஸ்ஸின் கடற்கரையில் அமைந்துள்ள ஓட்டமான் காலத்து அரண்மனையில் நடைபெற்றது. துருக்கி மற்றும் அமெரிக்காவின் அழுத்தமும் ஊக்கமும் இரு தரப்பினரையும் அங்கு கொண்டு வர உதவியது. இந்த சந்திப்பின் போது கைகுலுக்கல்கள் எதுவும் இல்லை. யுக்ரேனிய பிரதிநிதிகளில் பாதி பேர், தங்கள் நாடு தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது என்பதை நினைவூட்டும் வகையில் ராணுவ சீருடைகளை அணிந்திருந்தனர். அந்த அறையில் யுக்ரேன், துருக்கி மற்றும் ரஷ்யாவின் கொடிகளும், ஒரு பெரிய மலர் அலங்காரமும் இருந்தது. யுக்ரேனில் நிரம்பி வழியும் கல்லறைகள் மற்றும் தகர்க்கப்பட்ட நகரங்களிலிருந்து வெகு தூரத்தில் அமைந்திருந்தது இந்த உலகம். 1000 போர்க்…

Read More

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் ஒன்பது இடங்களில் உள்ள ‘பயங்கரவாத முகாம்களை’ தாக்கியதாக இந்திய ராணுவம் கூறுகிறது. இந்த ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய ராணுவத்தை சேர்ந்த கர்னல் சோஃபியா குரேஷி, “கடந்த மூன்று தசாப்தங்களாக பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் அதிகரித்துள்ளன. இவற்றில் ஆள் சேர்ப்பு, பயிற்சியளிப்பது மற்றும் ஏவுதளங்கள் ஆகியவை அடங்கும். அவை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் பரவியுள்ளன” என்று கூறியிருந்தார். இது இந்தியாவின் ‘போர் நடவடிக்கை’ என்று கூறிய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தகுந்த பதிலடி கொடுக்க தங்களுக்கு முழு உரிமை உண்டு என்றார். நான்கு நாட்கள் எதிரும் புதிருமாக இருந்த இரு நாடுகளும், பிறகு சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டை நிறுத்தம் குறித்த தகவல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்தான் முதலில் சமூக…

Read More

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்றைய தினம்(12) வெகு சிறப்பாக நடைபெற்றது. இதன்போது அம்பாளின் சேலைகள் ஏலத்தில் விடப்பட்டன. இந்தநிலையில் ஒரு சேலை ஒன்பது இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போனமை குறிப்பிடத்தக்கது.

Read More

கனடாவில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தமிழர் இனப்படுகொலை நினைவுத் தூபி இலங்கை அரசாங்கத்தை கடும் நெருக்கடிகளுக்குள் தள்ளியுள்ளது. இலங்கைக்கான கனடா தூதுவரை நேரடியாக அழைத்து தமது அதிருப்தியை அநுர அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கனடாவின் பிம்டன் நகரில் கடந்த 10 ஆம் திகதி தமிழின அழிப்பு நினைவகமானது பிரம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுணால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதற்கு இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர்கள் உட்பட அநுரவின் அரசாங்கமும் தனது அதிருப்பதியை வெளியிட்டது. மகிந்தவின் ஆட்சி காலத்தில் சிரேஷ்ட அமைச்சர்களாக இருந்தவர்களும் பேரினவாத சிந்தனை கொண்டவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தமை மாத்திரமின்றி ஜனாதிபதி அநுரகுமாரவும் இதை ஏற்றுக்கொள்கின்றாரா என ஊடகங்களில் கருத்துகளை முன் வைக்கத் தொடங்கினர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவும் இந்த நினைவு தூபி அங்குரார்ப்பணத்துக்கு தனது கடுமையான எதிர்ப்பை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தார். இதையடுத்து உடனடியாக செயற்பட்ட அநுர அரசாங்கம் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து…

Read More

“வாஷிங்டன்:அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ‘தி ஒன் பிக் பியூட்டிபூல் பில்’ என்ற புதிய மசோதாவை அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் வரையறுத்துள்ளது. இதில் வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், வரிகள் விதிக்கப்பட்டு உள்ளன.குறிப்பாக, அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர், தங்களது சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என புதிய மசோதாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரீன் கார்டு மற்றும் எச்1பி, எச்2ஏ, எச்2பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றும் சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அதிர்ச்சி அடைந்தனர். அதிபர் டிரம்பின் புதிய வரி விதிப்பால் அங்கு வசித்து வரும் 45 லட்சம் இந்தியர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.————–“,

Read More

“காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ள சூரி நடித்துள்ள ‘மாமன்’ படம் நாளை வெளியாகிறது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்த சிறுமி கண்ணீர்விட்டு அழுதுள்ளார். அப்போது அங்கிருந்த நடிகர் சூரியின் நண்பர் ஒருவர் சூரிக்கு வீடியோ கால் செய்து நடந்ததை கூறியுள்ளார். உடனே அந்த சிறுமிக்கு வீடியோ கால் மூலமாகவே சூரி ஆறுதல் கூறியுள்ளார். இந்த வீடியோவை எக்ஸ்தளத்தில் வெளியிட்ட…

Read More

“தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதி இருந்தனர். இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே-19-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்னதாக இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இன்று 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 93.80 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 91.74%, மாணவிகள் 95.88 தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் 92.32 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. ஒட்டன்சத்திரம் கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர் மனீஸ்குமார் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். இவர் ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில்…

Read More

பல நூற்றாண்டுகளாக, ‘ஸ்வஸ்திகா’ சின்னம் இந்து மதம், ஜைன மதம், மற்றும் பௌத்தத்தில் புனிதமான ஒரு குறியீடாக இருந்து வருகிறது. இது அதிர்ஷ்டம், மங்களம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. கிரகப் பிரவேசம், திருவிழாக்கள், மாங்கல்யம், சமய நிகழ்வுகள் ஆகியவற்றில் இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஆஸ்திரேலியா, கனடா, மற்றும் அமெரிக்காவில் இது ஒரு ஆத்திரமூட்டும் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. 1940-கள் வரை, மேற்கத்திய நாடுகளிலும் இந்தக் குறியீடு பரவலாகவும் பிரபலமாகவும் இருந்தது. செழிப்பு மற்றும் செல்வத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. ஹிட்லர் நாஜி ஜெர்மனியின் கொடியில் ‘ஹக்கன்க்ரூஸ்’ (Hakenkreuz) அல்லது கொக்கி வடிவிலான சிலுவையைப் பயன்படுத்தினார். இது ஸ்வஸ்திகாவைப் போன்ற ஒரு உருவம். அதனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மேற்கத்தியர்கள், குறிப்பாக யூதர்களிடையே யூத இன அழித்தொழிப்பு (ஹோலோகாஸ்ட்) பற்றிய வலிமிகுந்த நினைவுகளின் அடையாளமாக இந்த குறியீடு மாறியது. இந்தியாவில் மட்டுமல்ல, ஸ்வஸ்திகா என்பது உலகெங்கிலும் உள்ள பிரபலமான ஒரு சின்னமாகும்.…

Read More

தமிழகம் முழுவதும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் 92.09 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் 11-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 88.70 சதவீதம், மாணவிகள் 95.13 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.8 சதவீதம் பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. ஈரோடு 97 சதவீதமும், விருதுநகர் 96.2 சதவீதமும், கோவை 95.8 சதவீதமும், தூத்துக்குடி 95.1 சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. இந்த நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மதியம் இணையதளத்தில் வெளியானது. மாணவ-மாணவிகள் https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்கள் வாயிலாக முடிவுகளை காணலாம்.”,

Read More

“உலக கால்பந்து ஜாம்பவான் மற்றும் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் உலகின் பணக்கார விளையாட்டு வீரராக மாறியுள்ளார். பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். கடந்த ஆண்டில் ரொனால்டோ மொத்தம் 275 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 2295 கோடி) சம்பாதித்ததாக ஃபோர்ப்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது ஃபோர்ப்ஸ் வரலாற்றில் ஒரு விளையாட்டு வீரர் ஆண்டுக்கு சம்பாதிக்கும் மூன்றாவது அதிகபட்ச தொகையாகும்.சவுதி புரோ லீக்கில் அல் நாசர் கிளப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் ரொனால்டோ பெரும் வருமானத்தைப் பெற்றார். இத்தாலிய கிளப்பான ஜுவென்டஸிலிருந்து அல் நாசருக்கு மாறிய பிறகு, அவரது ஆண்டு வருமானம் 200 மில்லியன் டாலரைத் தாண்டியது. களத்தில் விளையாடுவதோடு மட்டுமல்லாமல், களத்திற்கு வெளியேயும் ரொனால்டோ வணிக ரீதியாக அதிக பணம் ஈட்டி வருகிறார்.…

Read More