விண்ணப்பிக்க விரும்புவோர் 15.09.2021 ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு விண்ணப்பத்தினை செயல் அலுவலர், நசியனூர், பேரூராட்சி அலுவலகம், 3 திங்களூர் ரோடு நசியனூர் ஈரோடு 638107 என்ற முகவரிக்கு தபால் வாயிலாக மட்டும் விண்ணப்பித்து கொள்ளவேண்டும் .
ஈரோடு மாவட்டம் நாசியனூர் பேரூராட்சியில் அரசு நிலையாக்கப்படாத பணியிடங்களில் காலியாக உள்ள தூய்மை பணியாளர் – 2 பணியிடங்களை இன சுழற்சி முறையில் பூர்த்தி செய்திட இப்பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோர் 15.09.2021 ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு விண்ணப்பத்தினை செயல் அலுவலர், நசியனூர், பேரூராட்சி அலுவலகம், 3 திங்களூர் ரோடு நசியனூர் ஈரோடு 638107 என்ற முகவரிக்கு தபால் வாயிலாக மட்டும் விண்ணப்பித்து கொள்ளவேண்டும் .
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் | நசியனுர் பேரூராட்சி, ஈரோடு (Erode Town Panchayat Office) |
வேலை வகை | தமிழக அரசு |
வேலையின் பெயர் | தூய்மை பணியாளர் (Sanitary Worker) |
காலிப்பணி இடங்கள் | 02 |
பணியிடம் | ஈரோடு |
தேர்ந்தெடுக்கும் முறை | நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். |
வயது | 21 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.09.2021 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | No fees |
சம்பள விவரம் | ரூ.15700/- |
விண்ணப்ப முறை | மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 15.09.2021 தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். |
கல்வி தகுதி | தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 5ம், 8ம், 10ம், 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
|
அதிகாரபூர்வ அறிவிப்பு
நிபந்தனைகள்
விண்ணப்பங்கள் பதிவஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
நேரில் அளிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு குறித்த விவரம் பதிவஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும்.
தூய்மை பணியாளர் (Sanitary Worker) வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து விவரங்களை காண்க.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் விவரங்களை நிரப்பிடவும்.
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும். நேரில் அளிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.