news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அமெ­ரிக்க - ஈரான் சமா­தான ஒப்­பந்­தத்தால் அமெ­ரிக்கா - இஸ்ரேல் இடையே பிளவு

05 Jul, 2026
அமெ­ரிக்­கா­வுக்கும் ஈரா­னுக்கும் இடையில் ஒரு சமா­தான ஒப்­பந்தம், ஈரா­னுக்கு 300 பில்­லியன் டொலர்­களை வழங்க அமெ­ரிக்கா ஒப்புக் கொள்­வது என்­பன, இந்த ஆண்டின் தொடக்­கத்தில் நினைத்துப் பார்க்கக் கூட முடி­யாத ஒன்­றாக இருந்­தது. அதேபோல் அமெ­ரிக்கா இல்­லாமல் இஸ்ரேல் நிலைத்­தி­ருக்க முடி­யாது என்று அமெ­ரிக்க அதிபர் கூறி­யுள்ள நிலையில் அமெ­ரிக்­கா­வுக்கும் இஸ்­ரே­லுக்கும் இடை­யி­லான பிளவு என்­ப­தையும் நம்­ப­மு­டி­யாது. எனினும் இது நடந்­துள்­ளது.

 அமெ­ரிக்கா, 2026 பெப்­ர­வரி 28 ஆம் திகதி ஈரான் மீது இரா­ணுவத் தாக்­கு­தல்­களை தொடங்­கி­யது. இந்த மோதல்­களை முடிவு காணும் நோக்கில் 60 நாட்­க­ளுக்குள் போரை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் ஒன்று கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது.

இந்த சமா­தான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் குறித்து கருத்து தெரி­வித்த பிர­பல அமெ­ரிக்க அர­சியல் விஞ்­ஞா­னியும் சர்­வ­தேச உற­வுகள் அறி­ஞ­ரு­மான பேரா­சி­ரியர் ஜான் மியர்­ஷைமர்,  "இந்தப் போரில் வெற்றி பெற்­றுள்ள ஈரான், அதன் ஒவ்­வொரு கோரிக்­கை­யையும் ஒப்புக் கொள்­ளும்­படி அமெ­ரிக்­காவை வற்­பு­றுத்தி   உள்­ளது என்­பதில் எந்த சந்­தே­கமும் இல்லை.

 இதற்­கான காரணம் எளி­தா­னது. போர் தொடர்ந்தால், அடுத்த ஓரிரு மாதங்­களில் சர்­வ­தேசப் பொரு­ளா­தாரம் மிகப் பெரிய சரிவைச் சந்­திக்க நேரிடும். 

ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் கட்­டுப்­பாடு உலகப் பொரு­ளா­தா­ரத்தின்   கழுத்தை நெரித்­தது. நாங்கள் ஒரு "பொரு­ளா­தார பேர­ழிவை" பார்க்­கின்றோம் என்றும், 1930 களின் பெரும் மந்­த­நி­லை­யுடன் எப்­போதும் அடை­யாளம் காட்­டப்­பட்டு பேசப்­படும் ஹெர்பர்ட் ஹூவரின், இரண்­டா­வது வரு­கை­யாக தான் நினைவு கூறப்­ப­டு­வதை ஒரு­போதும் விரும்­ப­வில்லை என்றும் ஜனா­தி­பதி ட்ரம்ப் வெளிப்­ப­டை­யாக கூறி உள்ளார். 

ஈரா­னுக்கு மிகவும் சாத­க­மான நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில் ட்ரம்ப் இந்தப் போரை முடி­வுக்குக் கொண்டு வந்­தமை குறித்து, இஸ்­ரே­லிய தலை­வர்­களும் இஸ்­ரே­லிய ஆத­ரவு பிர­சார சக்­தி­களும் கோபம் அடைந்­துள்­ளனர்” எனத் தெரி­வித்­துள்ளார்.


எது எப்­ப­டியோ அமெ­ரிக்­க-­ ஈரான் ஒப்­பந்தம் இஸ்­ரேலை சர்­வ­தேச அரங்கில் தனி­மைப்­ப­டுத்­து­கின்­றது. மேலும் நெதன்­யா­ஹுவை அம்­ப­லப்­ப­டுத்­து­கின்­றது என்று கட்­டு­ரை­யாளர் மெரோன் ராபோர்ட் டெல் அவிவ்வில் வைத்து தெரி­வித்­துள்ளார். 

பெப்­ர­வரி 28 அன்று நெதன்­யாஹு, ஈரா­னுக்கு எதி­ராக போரைத் தொடங்­கிய போது, இஸ்­ரேலின் நோக்­கங்கள் தெளி­வாகத் தெரிந்­தன. 

ஈரானின் அணு­சக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவு­கணைத் திட்­டங்­களை அகற்­று­வது, மற்றும் ஈரா­னிய அர­சாங்­கத்தை வீழ்த்­து­வது என்­ப­னவே அதன் இலக்­கு­க­ளாக இருந்­தன. 

மாதங்கள் பல கழிந்தும், அந்த இலக்­குகள் எது­வுமே எட்­டப்­ப­ட­வில்லை. மாறாக, ஈரான் பெப்­ர­வ­ரியில் இருந்­ததை விட வலு­வான நிலையில் இருப்­ப­தா­கவே தோன்­று­கின்­றது. 

அந்த நாடு தனது அணு­சக்தி மற்றும் சர்ச்­சைக்­கு­ரிய ஏவு­கணைத் திட்­டங்­களை இன்னும் தன்­வசம் தக்க வைத்துக் கொண்­டுள்­ளது. அதே நேரத்தில் உச்ச தலைவர் அலி கமேனி படு­கொலை செய்­யப்­பட்­டமை உட்­பட இஸ்ரேல் நடத்­திய தாக்­கு­தல்கள் கார­ண­மாக ஏற்­பட்ட விளை­வுகள் பல இருந்த போதிலும், ஈரானின் புதிய அதி­உயர் தலைமை வலு­வ­டைந்­துள்­ள­தா­கவேத் தெரி­கின்­றது.

இன்­றைய நிலையில் அரபு வளை­குடா நாடுகள் இஸ்­ரே­லை­விட தெஹ்­ரா­னுடன் மிகவும் நெருக்­க­மாக இணைந்­துள்­ளன. 

அதனால் ஈரானும் பிரம்­மாண்­ட­மான முறையில் ஒரு பிராந்­திய சக்­தி­யாக வளர்ந்து வரு­வ­தாகத் தெரி­கின்­றது. இதற்­கி­டையில், இஸ்ரேல் இதற்கு முன் பல தசாப்­தங்­க­ளாக அனு­ப­விக்­காத ஒரு மோச­மான நிலையில் தன்னைக் காண்­கின்­றது. பல இஸ்­ரே­லி­யர்கள் முன்­னெப்­போ­தையும் விட தாங்கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு விட்­ட­தாக உணர்­கின்­றார்கள்.

காஸாவில் இஸ்­ரேலின் நட­வ­டிக்­கைகள் உல­கெங்­கிலும் உள்ள இஸ்ரேல் ஆத­ரவு சக்­தி­களை புறக்­க­ணிக்க வழி­வ­குத்­ததால், கடந்த இரண்­டரை ஆண்­டு­களில், ஏற்­க­னவே அவர்­க­ளிடம் காணப்­பட்ட தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட உணர்வு, மேலும் அதி­க­ரித்­துள்­ளது.  

இப்­போது இந்த நிலை­மையில் மேலும் ஒரு மாற்றம் தெரி­கின்­றது. இன்­றைய ஒப்­பந்­தத்தைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனக்கு மிகவும் நெருக்­க­மான அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து கூட தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவே  தெரி­கின்­றது. இந்த ஒப்­பந்தம் கார­ண­மாக ஜனா­தி­பதி  ட்ரம்­புக்கும் பிர­தமர் நெதன்­யா­ஹு­வுக்கும் இடையே வளர்ந்து வரும் பிள­வுகள் மற்றும் கருத்து மோதல்­களை அன்­றாடம் அறிக்­கைகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

இஸ்­ரே­லி­யர்­களைப் பொறுத்­த­மட்டில், வொஷிங்­ட­னு­ட­னான தமது நாட்டின் உறவில் ஏற்­படும் எந்­த­வொரு முறிவும், தமது சுய இருப்­புக்­கான அச்­சு­றுத்­த­லா­கவே பார்க்­கப்­ப­டு­கின்­றது. இஸ்­ரேலின் பாது­காப்பு கோட்­பாடு என்­பது எப்­போ­துமே அமெ­ரிக்­கா­வு­ட­னான அதன் கூட்­ட­ணியில் தங்கி இருக்கும் ஒன்­றாகும்.  

லண்­டனை தள­மாகக் கொண்ட மத்­திய கிழக்கு செய்­தி­களின் ஆசி­ரியர் டேவிட் ஹெர்ஸ்ட், "தெஹ்ரான் ஹோர்முஸ் ஜல­சந்தி மீது தனது கட்­டுப்­பாட்டை விரிவு படுத்­தி­யுள்­ளது. அதே­வேளை, அரபு உல­கத்தை அதன் பின்னால் ஒன்­றி­ணைத்து, பிராந்­திய மேலா­திக்கம் பற்­றிய நெதன்­யா­ஹுவின் கன­வு­களை சுக்­கு­நூ­றாக்­கி­யுள்­ளது" என்று குறிப்­பிட்­டுள்ளார்.


""நமது முழு வர­லாற்­றிலும் இது­போன்ற இரா­ஜ­தந்­திர பேர­ழிவு ஒரு போதும் இருந்­த­தில்லை என்று இஸ்­ரேலின் எதிர்க்­கட்சித் தலைவர் யெய்ர் லாப்பிட் தெரி­வித்­துள்ளார். "நமது தேசிய பாது­காப்பின் மையப் பகுதி குறித்து முடி­வுகள் எடுக்­கப்­பட்­ட­போது, இஸ்ரேல் அந்தப் பேச்­சு­வார்த்தை மேசையில் கூட இருக்­க­வில்லை" என்று லாப்பிட் சுட்டிக் காட்­டி­யுள்ளார்.

நெதன்­யா­ஹு­வுக்கு அது இன்னும் தெரி­யாது. தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரி­யா­வையும் கட்­டுப்­ப­டுத்தும் ஒரு அகண்ட இஸ்ரேல் பற்­றிய அவ­ரது தூர­நோக்கு ஈரானில் முட்டி மோதி நொறுங்­கி­யுள்­ளது.  

அகண்ட இஸ்ரேல் என்­பது எந்­த­வொரு அர­பியும் அங்கு வாழ முடியும் என்ற ஓர் உண்மை நிலை அல்ல. மேலும் மிகவும் சுறுங்­கி­விட்ட இஸ்ரேல், விரைவில் அதன் படைகள் ஆக்­கி­ர­மித்­துள்ள அனைத்து சுற்­றுப்­பு­றங்­க­ளிலும் வலு­வி­ழப்­பதைக் காணக் கூடி­ய­தாக இருக்கும்.

தமது சொந்த மக்­களை அடக்கி ஆளு­வ­திலும், தடுத்து நிறுத்­து­வ­திலும் தீவி­ர­மாகச் செயற்­படும் அர­பு­லக சர்­வா­தி­கா­ரி­களின் வலை­ய­௧மைப்பை, இஸ்ரேல் வர­லாற்று ரீதி­யாக நம்­பி­யுள்­ளது. 

இருந்­தாலும் அது நீண்ட காலத்­திற்கு வேலை செய்யும் ஒரு சூத்­தி­ர­மாக இருக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்­பது இப்­போது உண­ரப்­பட்­டுள்­ளது. முழு அர­பு­லக பிராந்­தி­யத்­தி­னதும் அர­சியல் நிலை­மையும், நிறமும் மாறு­வ­தற்கு, இன்னும் ஓர் அரபு சர்­வா­தி­காரம் வீழ்ச்சி அடைந்தால் போதும் என்­பதே இன்­றைய நிலை­யாகும்.

2011ஆம் ஆண்டில் இடம்­பெற்ற எகிப்­திய புரட்­சியின் முக்­கிய நபர்­களில் ஒரு­வ­ரான முஹம்­ம­துஎல் பராதே என்­பவர், அரபு வசந்தம் இன்னும் செத்து மடி­ய­வில்லை என்று கூறி உள்ளார். அது செய­லற்ற நிலையில் உள்­ளது. ஆனால், அதே­வேளை வறுமை, அதி­கா­ர­மின்மை, அநீதி மற்றும் ஊழல் ஆகி­ய­வற்றின் நிலை­மைகள் எகிப்தின் முன்னாள் ஜனா­தி­பதி ஹொஸ்­னி­மு­பாரக் கவிழ்க்­கப்­பட்­ட­போது இருந்­ததை விட இன்று மிகவும் அதி­க­ரித்­துள்­ளது. அது வெளிப்­ப­டை­யாகத் தெரி­கின்­றது என்று அவர் மேலும் கூறி­யுள்ளார்.    

ஒரு­வேளை, அரபு வசந்தம் மீண்டும் வெடித்தால், 2013இல் செய்­ததைப் போல் அதை நசுக்­கு­வ­தற்கோ, அல்­லது அதற்கு தேவை­யான நிதி உத­வி­களை வழங்கி ஒழுங்­க­மைப்­ப­தற்கோ, தேவை­யான வலு­வான நிலையில் சவூதி அரே­பி­யாவோ அல்­லது ஐக்­கிய அரபு இராச்­சி­யமோ இன்று இல்லை. 

சிரி­யா­வி­லி­ருந்து யேமன் முதல்  சூடான் வரை இஸ்­லா­மிய உலகம் முழு­வ­தி­லு­மி­ருந்தும் வரும் இஸ்­லா­மிய போரா­ளி­க­ளுக்கு இஸ்­ரேலின் வடக்கு மற்றும் கிழக்கு எல்­லைகள் அன்­றைய நிலையில் பர­வ­லாக திறந்­தி­ருக்­கலாம்.

எனவே, ஈரானை அதன் சிதை­வு­க­ளுக்குள் விட்­டு­வி­டு­வதை ட்ரம்பும் யாஹுவுக்கும் ஒரு­போதும் தங்­க­ளது இரா­ணுவ மகிழ்ச்­சிக்­கு­ரிய தரு­ணங்­க­ளா­கவோ அல்­லது புத்­தி­சா­லித்­த­ன­மான ஒரு விட­ய­மா­கவோ எடுத்துக் கொள்ள முடி­யாது. காரணம் அவர்­களின் வெற்­றியின் ஆயுள் நிச்­ச­ய­மாக குறு­கிய காலமே நீடிக்கும்.


தீப்­பி­ழம்­பு­களின் நடுவில் உள்ள ஒரு பிராந்­தியம் பற்றி யாரோ ஒரு­வ­ரு­டைய அர­சியல் கணிப்­புகள் உறு­தி­யா­கின்­றது என்றால், அது நிச்­ச­ய­மாக ஹமாஸின் முன்னாள் தலை­வ­ரான யஹ்யா சின்­வாரின் கணிப்­பாகத் தான் இருக்கும். அவர் 2023 அக்­டோபர் 7 அன்று இஸ்­ரே­லுக்கு எதி­ரான தாக்­கு­தலைத் தொடங்­கினார். 

அவர் அன்று தொடங்­கி­யது சூதாட்டம் போல் இருந்­தாலும், இப்­போது மிகச் சரி­யாகத் தெரி­கின்­றது. நூற்­றாண்டு கால பழ­மை­யான மோதல்கள் மீண்டும் மீண்டும் ஒரே வித­மாக இருக்­காது என்­பது தான் அந்தக் கணிப்பு.  

லெப­னானில் இருந்து இஸ்ரேல் விலக வேண்டும் என்­பதில் ஈரான் மிகவும் தீவி­ர­மாக உள்­ளது என்றும், இதன் கார­ண­மாக புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் குறித்த பேச்­சு­வார்த்­தை­களைத் தொடங்­கு­வதில் தாமதம் ஏற்­பட்­ட­தா­கவும் கட்­டு­ரை­யாளர் ஜோ லாரியா குறிப்­பிட்­டுள்ளார். இதனால் வொஷிங்­டனில் உள்ள உயர்­மட்ட அமெ­ரிக்க அதி­கா­ரிகள் கிட்­டத்­தட்ட இது­வரை கேள்­விப்­ப­டாத வழி­மு­றை­களில் இறங்க இஸ்­ரேலை நிர்ப்­பந்­தித்து வரு­கின்­றார்கள்.

லெபனான் மீது தாக்­குதல் நடத்­தி­ய­தற்­காக நெதன்­யா­ஹுவை டொனால்ட் ட்ரம்ப் திட்டி உள்ளார். "நான் இல்­லை­யென்றால் நீங்கள் சிறையில் இருந்­தி­ருப்­பீர்கள்.  நான் உங்கள் ஆச­னத்தை காப்­பாற்றி உள்ளேன். இப்­போது அனை­வரும் உங்­களை வெறுக்­கின்­றார்கள். இதன் கார­ண­மாக அனை­வரும் இஸ்­ரே­லையும் வெறுக்­கின்­றார்கள்” என்று அவர்  கூறி உள்ளார்.

கட்­டு­ரை­யாளர் கிறிஸ் ஹெட்­ஜஸன் என்­ப­வரின் கூற்­றுப்­படி, அமெ­ரிக்கா ஈரா­னுடன் நடத்தி வரும் பேச்­சு­வார்த்­தை­களை, இஸ்ரேல் நாசப்­ப­டுத்­து­கின்­றது. மேலும், லெபனான் மீதான அதன் தாக்­கு­தல்­களை நிறுத்த மறுப்­பதன் மூலமும், தெற்கில் அதன் ஆக்­கி­ர­மிப்பை கைவிட மறுப்­பதன் மூலமும் இஸ்ரேல், அதற்கு கடை­சி­யாக எஞ்­சி­யுள்ள முக்­கி­ய­மான நட்பு நாடு­க­ளையும் அந்­நி­யப்­ப­டுத்­து­கின்­றது.

ஈரான், ஹோர்முஸ் ஜல­சந்­தியை நிரந்­த­ர­மாக மூடி, சர்­வ­தேசப் பொரு­ளா­தா­ரத்தை பூகோள ரீதி­யாக மந்த நிலைக்குள் தள்­ளு­வதைக் காணக் கூடிய ஒரு பிராந்­திய மோதலை, மீண்டும் ஏற்­ப­டுத்­து­வதில் இஸ்ரேல் முனைப்­பாக உள்­ளது. மேலும் அது காஸாவில் அதன் இனப்­ப­டு­கொ­லையைத் தொடர்­வ­திலும் குறி­யாக உள்­ளது.

இஸ்ரேல் இன­வெறி மற்றும் இனப்படு கொலை வன்முறைகளால் மாசடைந்து அசிங்கப்பட்டுள்ளது. ஒருவகையான வெறுக்கத்தக்க மேலாண்மை உணர்வால், கட்டுண்டு கண்மூடித்தனமாகவும் உள்ளது.  

இஸ்ரேலிய நலன்களுக்கு சேவை செய்யும் வகையில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் வளைவுகளை உருவாக்க, தங்கள் செல்வத்தைப் பயன்படுத்தும், அமெரிக்காவில் உள்ள ஊழலில் ஊறிப்போன, சியோனிச பில்லியனர்களின் வர்க்கத்தால் இது கட்டுப்படுத்தப்படுகின்றது. இது அணு ஆயுத வளத்தையும் கொண்டுள்ளது. இஸ்ரேலிய அதிகாரிகள் பலமுறை அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என  அச்சுறுத்தியும் உள்ளனர்.


இஸ்ரேல் இந்தப் பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது.  அது தனக்குத்தானே ஒரு அச்சுறுத்தலாகவும் உள்ளது. மேலும் அது ஓர் அவமானமானத்தின் சின்னமாகவும்  இருக்கின்றது. இந்தப் பின்னணியில் தான் எதிர்ப்பார்க்கப்பட்டது போல், ஏற்கெனவே ஆட்டம் கண்டுள்ள அமெரிக்க – ஈரான் சமாதான புரிந்துணர்வு ஏற்பாடுகள், 2026 ஜூன் 26 இல் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அடுத்து மீண்டும் ஆட்டம் கண்டுள்ளன.

லத்தீப் பாரூக்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!