news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அமெ­ரிக்க-ஈரான் போரும் அணு ஆயு­தங்­களும்

26 Jun, 2026
மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்தை ஸ்திர­மற்ற நிலைக்கு ஆளாக்கும் வகையில் பலஸ்­தீ­னர்­களை படு­கொ­லைகள் மற்றும் இனப்படு­கொ­லைகள் மூலம் அழித்தும், அவர்­களின் சொத்­துக்­களை கொள்­ளை­ய­டித்தும் பலஸ்­தீன நிலங்­களில் நிறு­வப்­பட்ட செயற்கை அர­சான இஸ்ரேல், மற்றும் குருட்டுத் தன­மாக அதை  ஆத­ரிக்கும் அமெ­ரிக்க, பிரித்­தா­னிய, ஐரோப்­பிய ஆத­ர­வா­ளர்கள் என எவ­ருமே எந்த ஒரு முஸ்லிம் நாடும் அணு ஆயு­தங்­களை வைத்­தி­ருப்­பதை விரும்­ப­வில்லை. விரும்பப் போவதும் இல்லை.

அணு ஆயு­தங்­களை வைத்­தி­ருக்கும் உலகின் ஒரே முஸ்லிம் நாடு பாகிஸ்தான் மட்­டுமே ஆகும்.  எவ்­வா­றா­யினும், பாகிஸ்தான் அதன் வர­லாற்றில் நீண்ட கால­மாக அமெ­ரிக்க சார்பு சர்­வா­தி­கா­ரி­களால் தான் மறை­மு­க­மாக ஆளப்­பட்டு வரு­கின்­றது. ஒரு­வேளை, பாகிஸ்தான் விட­யத்தில் மேற்­கத்­திய நாடுகள் கண்­மூ­டித்­த­ன­மா­கவும் சகிப்புத் தன்­மை­யு­டனும் இருப்­ப­தற்கு இதுவே கார­ண­மா­கவும் இருக்­கலாம்.

முஸ்லிம் உலகில் தனது அணு­சக்தி திட்­டத்தை தொடங்­கி­யுள்ள   அடுத்த நாடு ஈரான் இஸ்­லா­மிய குடி­ய­ரசு ஆகும். ஈரான்,  மத்­திய கிழக்கில் அமெ­ரிக்­க-­, இங்­கி­லாந்­து-­, ஐ­ரோப்­பிய மற்றும் இஸ்­ரே­லிய தீய வடி­வ­மைப்­பு­களை துணிச்­ச­லா­கவும், வெளிப்­ப­டை­யா­கவும் எதிர்க்கும்   சுதந்­திர போக்­குள்ள நாடாகும்.

உண்­மையில் எந்த ஓர் அரபு நாடும் அணு­சக்தி வச­தி­களை உரு­வாக்க முயற்­சிக்­க­வில்லை. அது பற்றி யோசிக்கும் துணிச்சல் கூட அவர்­க­ளிடம் இல்லை. இஸ்­ரேலும் அதன் போர் வெறி கொண்ட அமெ­ரிக்­க, -­ஐ­ரோப்­பிய குழுவும், 1979 இல் ஈரானிய இஸ்­லா­மிய குடி­ய­ரசு நிறு­வப்­பட்ட காலத்­தி­லி­ருந்து, இஸ்­லா­மிய ஆட்­சியை கவிழ்க்­கவும், அதன் அணு­சக்தி திட்­டத்தை நிறுத்­தவும் பெரும் முட்டுக் கட்­டை­களை ஏற்­ப­டுத்­தின.

ஈரானின் அணு­சக்தி திட்­டத்தை அகற்­று­வ­தற்­கா­கவே, இஸ்ரேல் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பை அச்­சு­றுத்தி, ஏமாற்றி, 2026 பெப்­ர­வரி 28 அன்று ஈரான் மீது போரைத் தொடங்கும் அள­வுக்கு இழுத்துச் சென்­றது. ஆனால், ஈரா­னையும் அதன் அணு­சக்தி திட்­டத்­தையும் அழிப்­ப­தற்குப் பதி­லாக, அமெ­ரிக்­க, -­இஸ்­ரே­ல் தரப்­புக்கு பேர­ழி­வா­கவே அமைந்­தது.

ஈரான் வழங்­கிய பதி­லடி, அமெ­ரிக்கா மற்றும் இஸ்­ரே­லுக்கு எதிர்­பார்க்­காத தடு­மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யது. உல­க­ளவில் பொரு­ளா­தார குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யது. அமெ­ரிக்கா மற்றும் இஸ்­ரே­லுக்கு எதி­ரான எதிர்ப்பு, அவர்­க­ளது சொந்த நாடு­க­ளிலும் உல­கெங்­கிலும் தீவி­ர­ம­டைந்து வரு­வதால், “தற்­போது போர் இல்லை அமைதி” என்ற நிலைமை தொட­ரு­கின்­றது. இதற்­கி­டையில் ஈரான் தான் அணு ஆயுதம் வைத்­தி­ருக்கப் போவ­தில்லை என்­பதை ஒப்புக் கொண்­டுள்­ள­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்  ஜூன் 2 ஆம் திகதி கூறினார்.

இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யாஹு, ஈரா­னி­லி­ருந்து செறி­வூட்­டப்­பட்ட யுரே­னியம் அகற்­றப்­படும் வரை போர் நிறுத்தம் குறித்து தான் கருத்தில் கொள்ளப் போவ­தில்லை என்று கூறி­யுள்ளார்.

எவ்­வா­றா­யினும், ஈரானின் அதி உச்ச தலைவர் ஆய­துல்லா மொஜ்­தபா கமேனி தனது நாட்டில் உள்ள ஆயுத உற்­பத்தி தரம் கொண்ட யுரே­னி­யத்தை வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்பக் கூடாது என்று ஓர் உத்­த­ரவை பிறப்­பித்­துள்ளார். இதன் மூலம் சமா­தானப் பேச்­சுக்­களில் அமெ­ரிக்கா விதித்­துள்ள முக்­கிய நிபந்­த­னை­களில் ஒன்றின் மீதான தெஹ்­ரானின் நிலைப்­பாட்டை அவர் கடு­மை­யாக்கி உள்ளார்.

இந்த உத்­த­ரவு ஜனா­தி­பதி ட்ரம்பை மேலும் விரக்­தி­ய­டையச் செய்து, ஈரான் மீதான அமெ­ரிக்க,- இஸ்ரேல் யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­கான பேச்­சுக்­களை சிக்­க­லாக்கி உள்­ளது. யுரே­னிய இருப்­புக்­களை  வெளி­நா­டு­க­ளிடம் ஒப்­ப­டைப்­பது, எதிர்­கா­லத்தில் அமெ­ரிக்கா மற்றும் இஸ்­ரேலின் தாக்­கு­தல்­க­ளுக்கு ஈரானை மிக இல­கு­வான ஒரு இலக்­காக ஆக்­கி­விடும் என்று ஈரானின் உயர்­மட்ட அதி­கா­ரிகள் நம்­பு­கின்­றனர். எவ்­வா­றா­யினும், மிக முக்­கி­ய­மான அரச விட­யங்­களில் இறுதி முடிவு எடுக்கும் அதி­காரம் கமே­னியை சார்ந்­தது.

தற்­போ­தைய போருக்கு முன்னர், ஈரான் தனது 60% செறி­வூட்­டப்­பட்ட யுரே­னிய கையி­ருப்பில் பாதியை வெளியில் அனுப்பி வைப்­ப­தற்­கான ஓர­ளவு சமிக்­ஞையை வெளிப்­ப­டுத்தி இருந்­தது. இது பொது­மக்கள் பயன்­பாட்­டுக்குத் தேவை­யா­னதை விட மிக அதி­க­மாகும். ஆனால், ஈரான் மீதான தாக்­கு­த­லுக்குப் பிறகு அந்த நிலைப்­பாடு மாறி­ய­தாக தகவல் அறிந்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.

உலகில் ஒன்­பது நாடுகள் அணு ஆயு­தங்­களை வைத்­தி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இதில் அமெ­ரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஐக்­கிய இராச்­சியம், பாகிஸ்தான், இந்­தியா, இஸ்ரேல் மற்றும் வட கொரியா என்­பன அடங்கும். இந்த நாடுகள் சுமார் 12,000 அணு ஆயு­தங்­களை உல­க­ளா­விய கையி­ருப்பில் வைத்­தி­ருக்­கின்­றன. இதில் மொத்­த­மாக சுமார் 90% ரஷ்யா மற்றும் அமெ­ரிக்­கா­விடம் உள்­ளன.

இவற்­றுக்கு மேல­தி­க­மாக இன்னும் நான்கு நாடுகள் அணு சக்தி ஆயு­தங்­களை வைத்­தி­ருப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது அல்­லது இந்த நாடு­க­ளிடம் அணு ஆயு­தங்கள் உள்­ள­தாக பர­வ­லாக நம்­பப்­ப­டு­கின்­றது. ஆனால், அவை அணு ஆயுதம் சம்­பந்­த­மான எந்த ஒப்­பந்­தங்­க­ளிலும் இது­வரை கையெ­ழுத்­தி­ட­வில்லை.

• இந்­தி­யா­விடம் 180 அணு ஆயு­தங்கள் உள்­ள­தாக   மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

• பாகிஸ்­தா­னிடம் 170 அணு ஆயு­தங்கள் உள்­ள­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

• இஸ்ரேல் இந்த விட­யத்தில் மிகவும் தந்­தி­ர­மாக, ஒரு தெளி­வற்ற   கொள்­கையை பேணு­கின்­றது. அணு ஆயு­தங்கள் உள்­ளதை அது இது­வரை அதி­கா­ரப்­பூர்­வ­மாக ஒப்புக் கொண்­ட­தில்லை. இருப்­பினும் இஸ்­ரே­லிடம் 90 அணு ஆயு­தங்கள் உள்­ள­தாகப் பர­வ­லாக நம்­பப்­ப­டு­கின்­றது.


• வட கொரியா பல அணு ஆயு­தங்­களை சோதனை செய்­துள்­ளது. சுமார் 50 அணு ஆயு­தங்கள் அங்கு இருக்­கலாம் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

1950 களின் பிற்­ப­கு­தி­யிலும் 1960 களிலும் பிரான்­ஸி­ட­மி­ருந்து பெற்றுக் கொள்­ளப்­பட்ட இர­க­சிய தொழில்­நுட்ப மற்றும் உட்கட்­ட­மைப்பு உத­வி­க­ளுடன் இஸ்ரேல் தனது அணு­சக்தி வளர்ச்­சியைத் தொடங்­கி­யது. 

அதன் நிலத்­தடி டிமோனா அணு ஆயுத தள வச­தியின் உண்­மை­யான அளவு 1986 ஆம் ஆண்டில் பகி­ரங்­க­மா­னது. முன்னாள் அணு­சக்தி தொழில்­நுட்ப வல்­லுநர் மொர்­டெச்சாய் வனுனு இது சம்­பந்­த­மான புகைப்­ப­டங்­க­ளையும் ஏனைய சில விபரங்­க­ளையும் பிரிட்டிஷ் பத்­தி­ரி­கை­க­ளுக்கு கசிய விட்டார்.  இஸ்ரேல் ஒரு நவீன மய­மான வெப்ப அணு­சக்தி திறனை உரு­வாக்­கி­யுள்­ளது என்­பதை இதன் மூலம் உலகம் தெரிந்து கொண்­டது.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்­பந்­தத்தில் (NPT) இஸ்ரேல் இது­வரை கையெ­ழுத்­தி­ட­வில்லை. இந்த ஒப்­பந்­தத்தில் இஸ்ரேல் ஒரு­போதும் கையெ­ழுத்­தி­டா­ததால், சர்­வ­தேச அணு­சக்தி முகாமை நிலை­யத்தின் (IAEA) சர்­வ­தேச சோத­னைகள் அல்­லது பாது­காப்­பு­க­ளுக்கு இஸ்ரேல் உட்­பட்­டது அல்ல.

இஸ்­ரேலின் அணு ஆயுத கையி­ருப்பின் மதிப்­பீ­டுகள் 90 முதல் 400   வரை உள்­ளன. மேலும் அந்த நாடு ஆகாயம், தரை மற்றும் கடல் வழி­யாக அணு சக்­திக்­கான மூன்று வித­மான விநி­யோக முறை­க­ளையும் கொண்­டுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கின்­றது. இஸ்­ரே­லினால் விநி­யோ­கிக்கக் கூடிய முத­லா­வது அணு ஆயுதம் 1966 ஆம் ஆண்டின் பிற்­ப­கு­தியில் அல்­லது 1967 ஆம் ஆண்டின் முற்­ப­கு­தியில் தயா­ரித்து முடிக்­கப்­பட்­ட­தா­கவும் மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது ஒன்­பது அணு ஆயுத நாடு­களில் ஆறா­வது இடத்தைப் பிடித்­தி­ருக்கும் நிலை­யாகும்.

இஸ்­ரேலின் முத­லா­வது பிர­தமர் டேவிட் பென்-­கூரியன், ஹோலோகோஸ்ட் மீண்டும் நிக­ழாமல் தடுக்க, அணு ஆயு­தங்­களைப் பெறு­வதில் "கிட்­டத்­தட்ட வெறித்­த­ன­மாக" இருந்தார் என்று கூறப்­ப­டு­கின்­றது. "யூதர்­க­ளான ஐன்ஸ்டீன், ஓபன்­ஹைமர் மற்றும் டெல்லர் ஆகிய மூவரும் அமெ­ரிக்­கா­வுக்­காக உரு­வாக்­கி­யதை இஸ்­ரேலில் உள்ள யூத விஞ்­ஞா­னி­களால் தங்கள் சொந்த மக்­க­ளுக்­கா­கவும் உரு­வாக்க முடியும்" என்று அவர் வாதிட்டார்.  

இஸ்ரேல் என்ற அரசை நிறு­விய 1948 அர­பு-­ இஸ்­ரே­லியப் போர் முடி­வ­டை­வ­தற்கு முன்பே, வெளி­நா­டு­களில் இருந்து யூத விஞ்­ஞா­னி­களை இதற்­கென நிய­மிக்க பென்- கூ­ரியன் முடிவு செய்தார். அவரும் மற்றவர்களும், வெயிஸ்மன் அறிவியல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சக விஞ்ஞானி எர்ன்ஸ்ட் டேவிட் பெர்க்மேன் போன்றவர்களும், ஓபன்ஹைமர் மற்றும் டெல்லர் போன்ற யூத விஞ்ஞானிகள் இஸ்ரேலுக்கு உதவுவார்கள் என்று நம்பினர்.

இவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்து நின்ற உலகம், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதைத் தடுக்க மட்டும் பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதே வேளையில், அமெரிக்க-இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா என்பன, இஸ்ரேல் தனது அணு ஆயுதத்தை உருவாக்க பூரண சுதந்திரத்தை வழங்கின.

ஒரு அணு ஆயுதம் பல்லாயிரக்கணக்கான அல்லது இலட்சக் கணக்கான மக்களைக் கொல்லக் கூடும்.  இது நீடித்த மற்றும் பேரழிவுகரமான மனிதாபிமான மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளை ஏற்படுத்தவும் கூடும். அமெரிக்காவின் நியூயோர்க்கில் மட்டும் 1 அணு ஆயுதத்தை வெடிக்கச் செய்தால், அது 583,160 உயிர்களை பறிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

லத்தீப் பாரூக்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!