news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்­தி­யாவில் 'கரப்பான் பூச்­சி­களின்' கிளர்ச்சி

26 Jul, 2026
இந்­திய தலை­ந­கரில்  ' ஜந்தர் மந்தர் ' (18 ஆம் நூற்­றாண்டில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க வானிலை அவ­தான நிலையம் ) வளா­கத்தில், 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'  கடந்த பல நாட்­க­ளாக முன்­னெ­டுத்­து­வரும் போராட்­டங்­க­ளுக்கு புது­டில்­லிக்கும் அப்பால் பல மாநி­லங்­க­ளிலும் மாண­வர்கள், சிவில் சமூகச் செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும் அர­சியல் கட்­சி­களின் ஆத­ரவு பெரு­கி­வ­ரு­கி­றது.Politics

இந்த போராட்­டங்கள்  இலங்­கையின் 2022  'அரக­லய' போராட்டம்,  பங்­க­ளா­தேஷின் 2024 மாணவர் கிளர்ச்சி மற்றும் நேபா­ளத்தின் 2025 இளம் தலை­மு­றை­யி­னரின் (Gen Z) கிளர்ச்­சியை   நினை­வூட்­டு­கின்­றன.

மூன்று தெற்­கா­சிய நாடு­க­ளிலும் அர­சாங்­கங்­களை தூக்­கி­யெ­றிந்த அந்த கிளர்ச்­சி­களின் ஆரம்­பக்­கட்டத்  தோற்­றத்தைக் கொண்­ட­தாக புது­டில்லி போராட்­டங்கள் இருக்­கின்ற போதிலும், இந்­தி­யாவின் பரப்­ப­ளவு மற்றும் பன்­மு­கத்­தன்­மையை கருத்தில் கொள்ளும் போது அது போன்ற ஒரு சாத்­தி­யப்­பாடு பிராந்­தி­யத்தின் மிகப்­பெ­ரிய  நாட்டில் நடப்­பது அரிது என்­பதே பெரும்­பா­லான அர­சியல் அவ­தா­னி­களின் அபிப்­பி­ரா­ய­மாக இருக்­கி­றது.

இலங்கை, பங்­க­ளாதேஷ், நேபா­ளத்தில் ஆட்­சி­களை தூக்­கி­யெ­றி­வதே போராட்­டங்­களின் நோக்­க­மாக இருந்­தது.  போராட்­டக்­கா­ரர்கள் வன்­மு­றையில் ஈடு­பட்­ட­துடன் அரச சொத்­துக்­களைச் சேதப்­ப­டுத்­தினர். ஜந்தர் மந்தர் போராட்­டக்­கா­ரர்கள், இந்­திய அர­சாங்கம் பதவி வில­க­வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைக்­க­வில்லை; பாரா­ளு­மன்றம் உட்­பட அரச நிறு­வ­னங்கள் மீது தாக்­குதல் தொடுக்­க­வு­மில்லை.

அதனால், இது­வ­ரை­யான நிகழ்­வு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நோக்­கும்­போது புது­டில்லி போராட்­டங்­களை இந்­தி­யாவின்  மூன்று அயல் நாடு­க­ளி­னதும்  கிளர்ச்­சி­க­ளுடன் ஒப்­பி­டு­வது இந்த கட்­டத்தில்  சரி­யா­ன­தல்ல.Beaches & Islands

கரப்பான் பூச்சி ஜனதா கட்­சியின் வழி­ந­டத்­தலில்  மாண­வர்­களும் இளந் தலை­ம­றை­யி­னரும்  ஆயி­ரக்­க­ணக்கில்  அணி­திரண்டு நடத்தி வரும் தற்­போ­தைய போராட்­டங்கள் பல வரு­டங்­க­ளுக்கு பிறகு இந்­தி­யாவில் இடம் பெறும் மிகப்­பெ­ரிய அர­சாங்க எதிர்ப்பு போராட்­டங்­க­ளாகும்.

சமூக வலைத் தளங்­களில் கடந்த மே மாதம் 16 ஆம் திகதி  ஒரு கேலித்­த­ன­மான எதிர்­வி­னை­யாகத் தொடங்­கிய ஓர் இயக்கம் நவீன இந்­திய வர­லாற்றில் மிகவும் பலம்­பொ­ருந்­திய இளந்­த­லை­முறை எழுச்­சி­யாக மாறி­யி­ருக்­கி­றது.


இந்­திய உச்ச நீதி­மன்­றத்தில் மே 15 ஆம் திகதி வழக்கு விசா­ரணை ஒன்றின் போது பிர­தம நீதி­ய­ரசர் சூர்ய காந்த்,  வேலை­யில்­லாமல் திண்­டாடும் இளை­ஞர்­க­ளையும் மாணவ ஆர்­வ­லர்­க­ளையும் 'சமூ­கத்தின் கரப்பான் பூச்­சிகள்' என்றும் 'ஒட்­டுண்­ணிகள்' என்றும்  ஒப்­பிட்டுப் பேசி­யதைத்   தொடர்ந்து மறு­நாளே  உரு­வா­னதே இந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்­சி­யாகும்.

அமெ­ரிக்­காவின் பொஸ்டன் பல்­க­லைக்­க­ழ­கத்தில்  முது­கலைப் பட்டம் பெற்ற  30 வய­தான அபிஜித் தீப்கே என்ற மகா­ராஷ்­டிரா மாநி­லத்தின் சத்­ர­பதி சம்­பா­ஜி­ந­கரைச் (முன்னர் அவு­ரங்­கபாத்) சேர்ந்த  மாணவர்  இணை­யத்தில் தொடங்­கிய இந்த  கட்சி, ஒரு கேலித்­த­ன­மான  இயக்­கத்­தி­லி­ருந்து பலம்­பொ­ருந்­திய அர­சியல் சக்­தி­யாக உரு­வெ­டுத்­தி­ருக்­கி­றது. தீப்கே, முன்னர் அர­விந்த கெஜ்­ரிவால் தலை­மை­யி­லான ஆம் ஆத்மி கட்­சியின் சமூக ஊடகக் குழுவில் பணி­யாற்­றி­யவர்.

'கரப்பான் பூச்­சிகள்' என்ற அந்த இழி­வான சொல்லைக் கேட்டுப் பின்­வாங்­கு­வ­தற்குப் பதி­லாக, இந்­திய இளை­ஞர்கள் அதை தங்­க­ளது எதிர்­கால வாழ்க்கைப் போராட்­டத்­துக்­கான அடை­யா­ள­மா­கவே ஏற்­றுக்­கொண்­டனர். எத்­த­கைய சூழ­லிலும் அழி­யாமல் வாழும் திறன்­கொண்ட கரப்பான் பூச்­சியை இந்த இளை­ஞர்கள் கஷ்­டங்­களைத் தாங்­கிக்­கொண்டு  மீண்­டெழும் ஆற்­றலின் அடை­யா­ள­மாக மாற்­றி­யி­ருக்­கி­றார்கள்.

 அர­சாங்­கத்­தினால் கைவி­டப்­பட்­ட­வர்­க­ளாக தங்­களை உணர்ந்த இந்­தியா பூரா­வு­முள்ள  இலட்­சக்­க­ணக்­கான இளை­ஞர்­களை இந்த இயக்கம் ஒன்று திரட்­டி­யி­ருக்­கி­றது.

வேலை­யற்ற இளை­ஞர்­களை கரப்பான் பூச்­சிகள் என்று பிர­தம நீதி­ய­ரசர் அழைத்தவுட­ன­்,  சமூக வலைத்­த­ளத்தில் பகி­டி­யாக பதி­வொன்றைச்  செய்த தீப்கே, "அனைத்து கரப்பான் பூச்­சி­களும் ஒன்­று­சேர்ந்து வந்தால் என்­னவாகும்" என்று கேள்­வி­யெ­ழுப்­பினார்.

அந்த கேள்­விக்­கான  பதி­லாக  தற்­போது கரப்பான் பூச்­சிகள் புது­டில்­லிக்கு படை­யெ­டுத்து மோடி அர­சாங்­கத்­துக்கு பாரிய சவாலைத் தோற்­று­வித்­தி­ருக்­கின்­றன. ஆளும்  பார­திய ஜனதா கட்­சியை நையாண்டி செய்யும் நோக்­கு­ட­னேயே தீப்கே தனது இணை­யத்­தளக் கட்­சிக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரைச் சூட்­டினார். 'சமூகக் கட்­ட­மைப்பு  கணக்கில் எடுக்­கத்­த­வ­றிய மக்­க­ளுக்­கான ஒரு கட்சி' என்­பதே அதன் சுலோ­க­மாகும்.

இந்த கட்சி தொடங்கி இரு வாரங்­க­ளுக்கு உள்­ளா­கவே  அதன்  இன்ஸ்­டாகிராம் பக்­கத்தில் 2 கோடியே 20 இலட்­சத்­துக்கும் அதி­க­மான  பின்­தொ­டர்­பா­ளர்கள் இணைந்து கொண்­டார்கள். பார­திய ஜனதா கட்­சியின் இன்ஸ்­டாகிராம் பக்­கத்தின் பின்­தொ­டர்­பா­ளர்­களின் எண்­ணிக்­கையை விடவும் இது அதி­க­மாகும்.

விமர்­ச­னங்­களை சகித்­துக்­கொள்­ளாத சுபா­வ­மு­டைய மோடி அர­சாங்கம், தேசிய பாது­காப்புக் கார­ணங்­களைச் சாட்­டாகக் கூறி, கரப்பான் பூச்­சி­களின் சமூக ஊடகக் கணக்­கு­களை முடக்­கு­வ­தற்கு முயற்­சித்த போதிலும், அதில் வெற்­றி­பெற முடி­ய­வில்லை.

கரப்பான் பூச்சி ஜனதா கட்­சி­யினால் இளைய தலை­மு­றை­யி­னரை அணி­தி­ரட்­டு­வ­தற்கு உட­ன­டி­யாகப் பயன்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருந்­தது உயர்­கல்வி அமைப்பில் நில­விய சீர்­கே­டு­க­ளே­யாகும். குறிப்­பாக, 'நீட் ' (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு -- National Eligibility cum Entrance Test - NEET)  போன்ற உயர்­மட்ட போட்டிப் பரீட்­சை­களில் ஏற்­பட்ட பேர­ழி­வு­க­ர­மான வினாத்தாள் கசிவும் பரீட்சை இரத்­து­களும் இந்­தியா பூராவும் இலட்சக் கணக்­கான மாண­வர்­களின் எதிர்­கா­லத்தைப் பாழாக்­கி­ய­தோடு கவ­லைக்­கு­ரிய வகையில் மாண­வர்கள் பலர்  தற்­கொலை செய்து கொள்­வ­தற்கும்  வழி­வ­குத்­தது.

பரீட்சைக் குள­று­ப­டி­க­ளுக்கு பொறுப்­பேற்­கா­த­மைக்­காக மோடி அர­சாங்­கத்தின் மீது குற்­றச்­சாட்­டப்­பட்­டது. இந்த பிரச்­சி­னையை வைத்து ஆத­ர­வா­ளர்­களை அணி­தி­ரட்டத் தொடங்­கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பரீட்சை வினாத்தாள் கசி­வு­க­ளுக்கு அர­சாங்கம் பொறுப்புக் கூற­வேண்டும் என்றும் மத்­திய கல்வி அமைச்சர் தர்­மேந்­திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்­தது.

இந்த கோரிக்­கையை முன்­வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்­சியின் முத­லா­வது களப் போராட்டம் (Offline protest) ஜூன் முற்­ப­கு­தியில் டில்­லியில் இடம் பெற்­றது. அதை வழி நடத்­து­வ­தற்­காக தீப்கே அமெ­ரிக்­காவில் இருந்து ஜூன் 6 ஆம் திகதி இந்­தியா  திரும்­பினார்.

 இரண்­டா­வது பெரிய போராட்டம் டில்­லியில் ஜூன் பிற்­ப­கு­தியில் இடம்­பெற்­றது. இந்த தடவை போராட்­டக்­கா­ரர்கள் பிரதான் பத­வியில் இருந்து வில­கும்­வரை அங்­கி­ருந்து வெளி­யே­று­வ­தில்லை என்று சூளு­ரைத்­தனர்.

இந்­தி­யாவின் இளந் தலை­மு­றை­யி­னரைப் பொறுத்­த­வரை, நெருக்­க­டிக்கு உள்­ளா­கி­யி­ருக்கும் கல்வி முறை­மைக்கு எதி­ராக --  தங்­க­ளுக்கு தவ­றி­ழைத்­து­வரும் தொழிற்­சந்தை தொடர்­பாக நிலவும் பரந்­த­ள­வி­லான விரக்­திக்­காக --  குரல் கொடுக்கும் ஒரு இயக்­க­மாக கரப்பான் பூச்சி ஜனதா கட்­சியைப் பார்க்­கி­றார்கள்.

அந்த கட்­சியின் முழக்கம் பல்­க­லைக்­க­ழக வளா­கங்­க­ளையும் தாண்டி எதி­ரொ­லிக்­கி­றது. காஷ்­மீரில்  லடாக் யூனியன் பிர­தே­சத்தைச் சேர்ந்த  பொறி­யி­ய­லா­ளரும் கல்­வித்­துறைச் செயற்­பாட்­டா­ள­ரு­மான  சோனம் வாங்சுக் தனது  உண்­ணா­வி­ரதப் போராட்டம் மூலம் இந்த மாண­வர்கள் மற்றும் இளை­ஞர்­க­ளுக்கு ஆத­ர­வாகக்  குரல் கொடுத்து உறு­து­ணை­யாக நின்­ற­போது போராட்­டத்தின் வேகம் வெகு­வாக அதி­க­ரித்­தது.  இது மாண­வர்கள், இளந் தொழில் வல்­லு­னர்கள் மற்றும் சிவில் சமூ­கத்­தி­னரை ஜன­நா­ய­கத்­துக்கும் கல்­வி­மு­றையில்  நேர்­மைக்­கு­மான  பொது­வான ஒரு  போராட்­டத்தின் கீழ் ஒன்­றி­ணைத்­தி­ருக்­கி­றது.

ஆரம்பக் கட்­டத்­தி­லேயே போராட்­டக்­கா­ரர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தையை   நடத்தி அவர்­களின் நியா­ய­பூர்­வ­மான கோரிக்­கை­க­ளுக்கு இணங்கி  சுமு­க­மான முறையில் தீர்வைக் காண்­ப­தற்கு பதி­லாக, மோடி அர­சாங்கம் போராட்­டங்­களை ஒடுக்­கு­வ­தற்கு மிகவும் கடு­மை­யான நட­வ­டிக்­கை­க­ளளில் நாட்டம் காட்­டி­யது.


மக்கள் கூடு­வ­தற்கு தடை­வி­திக்கும் வகையில் தடைகள் விதிக்­கப்­பட்­டன. புது­டில்­லியில் மத்­திய மெட்ரோ நிலை­யங்கள் மூடப்­பட்­டன. மொபைல் இணையச் சேவைகள் துண்­டிக்­கப்­பட்­டன. மேலும், பாரா­ளு­மன்­றத்தை நோக்கி கடந்த திங்­கட்­கி­ழமை அமை­தி­யான முறையில் பேர­ணி­யாகச் சென்ற ஆயி­ரக்­க­ணக்­கான இளை­ஞர்கள் மீது கண்­ணீர்ப்­புகைப் பிர­யோ­கமும் கொடூ­ர­மான தடி­ய­டியும் நடத்­தப்­பட்­டது.

அடக்­கு­முறை நட­வ­டிக்­கைகள் எழுச்­சியைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்குப் பதி­லாக, தற்­போது நாடு­த­ழு­விய கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. பல மாநி­லங்­க­ளுக்கும் போராட்டம் பர­வி­யி­ருக்­கி­றது.  பல­வீ­ன­ம­டைந்த நிலையில் வலுக்­கட்­டா­ய­மாக மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட போதிலும்,  வாங்சுக் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை  கைவி­ட­வில்லை.

பொலி­சாரின் அத்­து­மீ­றல்­க­ளுக்கு எதி­ராக நாடு­த­ழு­விய அளவில் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்த போராட்ட இயக்கம் அழைப்பு விடுத்­தி­ருந்த நிலையில், இந்­தி­யாவில் வன்­முறை மூளக்­கூடும் என்ற கவ­லையை அடுத்து சோனம் வாங்சுக் தனது உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தைக் கைவி­டு­வ­தற்கு இணங்­கினார்.

டில்லி மருத்­து­வ­மனை ஒன்றில் மோடி அர­சாங்­கத்தின் இரு அமைச்­சர்­களின் முன்­னி­லையில் அவர் 26 நாள் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு  முடித்­துக்­கொண்டார். தோல்­விக்கு உள்­ளா­கி­யி­ருக்கும் பரீட்சை முறையில் பொறுப்­புக்­கூ­றலை உறு­தி­செய்­வது குறித்து பாரா­ளு­மன்­றத்தில் விவா­திக்­கப்­படும் என்று தனக்கு வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­ட­தாக மருத்­து­வ­மனை  படுக்­கையில் இருந்­த­வாறு வியா­ழக்­கி­ழமை இரவு வெளி­யிட்ட காணொளி ஒன்றில் வாங்சுக் கூறி­யி­ருந்தார்.

முக்­கி­ய­மான பரீட்சை வினாத்தாள் கசிவு கார­ண­மாக தற்­கொலை செய்து கொண்ட மாண­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு போது­மான இழப்­பீ­டுகள் வழங்­கப்­படும் என்றும் போராட்­டங்­களில்  பங்­கேற்ற மாண­வர்கள், இளை­ஞர்கள் மீது எந்­த­வி­த­மான சட்ட நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­மாட்­டாது என்றும் வாங்­சுக்­கிற்கு அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கி­றது.

பரீட்சை வினாத்தாள் கசி­வு­க­ளுக்கு பின்னால் உள்­ள­வர்­களை தண்­டிப்­ப­தற்கு விசேட விரைவு நீதி­மன்­றங்கள் நிய­மிக்­கப்­படும் என்று பிர­தமர் மோடி வியா­ழ­னன்று விடுத்த அறி­விப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உட­ன­டி­யா­கவே நிரா­க­ரித்­தது.

" இந்­தி­யாவில் ஒவ்­வொரு பிரச்­சி­னைக்கும் விரைவு நீதி­மன்­றங்கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால், அந்த நீதி­மன்­றங்­க­ளினால் சம்­பந்­தப்­பட்ட பிரச்­சி­னைகள் உண்­மையால் தீர்த்து வைக்­கப்­பட்­ட­னவா? இந்த கேள்­விக்­கான பதில் உங்­க­ளுக்கும் தெரியும், எங்­க­ளுக்கும் தெரியும் ". என்று கரப்பான் பூச்சி கட்­சியின் பேச்­சாளர் மோடிக்கு பதி­ல­ளித்­தி­ருக்­கிறார்.

அதே­வேளை, கல்­வி­ய­மைச்சர் பிரதான் பத­வி­வி­லகும் வரை போராட்­டங்கள் தொடரும் என்றும் சோனம் வாங்­சுக்கின் தியா­கத்தை ஒரு­போதும் வீண­டிக்கப் போவ­தில்லை என்றும் கரப்பான் பூச்சி கட்­சியின் தலைவர் தீப்கே அறி­வித்­தி­ருந்தார்.


இந்த போராட்­டத்­துக்கு ஆத­ர­வாக எதிர்க்­கட்­சிகள் பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கை­களை முடக்­கி­யி­ருந்­தன. எதிர்க்­கட்சி தலைவர் ராகுல் காந்­தியும் சகோ­தரி பிரி­யங்­காவும்  பிர­த­மரின் வாசஸ்­த­லத்தின் முன்­பாக மறியல் போராட்­டத்தை நடத்­தி­ய­தை­ய­டுத்து கைது­செய்­யப்­பட்டு பின்னர் விடு­விக்­கப்­ப­டனர்.

கணக்கில் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தற்­காக கொதித்­தெ­ழுந்த ஒரு தலை­மு­றை­யினர் தங்­களை அடக்­கு­வது மிகவும் கடி­ன­மா­னது என்­பதை நிரூ­பித்து போராட்­டத்தை மேலும் உத்­வே­கத்­துடன் தொடரும் நிலையில் இந்­தியத் தலை­ந­கரின் வீதிகள் கடு­மை­யான போர்க்­க­ள­மாகக் காட்­சி­ய­ளிக்­கின்­றன.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கரப்பான் பூச்சி  ஜனதா கட்சி மத்திய கல்வியமைச்சர் அடுத்த ஓரிரு தினங்களுக்குள் பதவி விலகாவிட்டால் தேசிய போராட்டத்துக்கான இன்னொரு அழைப்பை விடுக்கப்போவதாக வெள்ளிக்கிழமை  அறிவித்திருக்கிறது.

புகழ்பெற்ற எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான அருந்ததி ராய் " கரப்பான் பூச்சி ஜனநாயகம் ; நிராயுதபாணயானதும்்ஆபத்தானதும் "  Cockroach Democracy ; Unarmed and Dangerous ' என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார் ;

" கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தி தொடங்கிய மாணவர்கள் தலைமையிலான இந்த போராட்டம் இந்தியாவின் அரசியல் கட்டமைப்பிற்கே சவால் விடுக்கும் ஒரு விரிவான இயக்கமாக உருவெடுத்திருக்கிறது.

" இந்த இயக்கம் சாதி, மதம் மற்றும் வர்க்கப் பிரிவினைகளைக் கடந்து மக்களை ஒன்று படுத்தியுள்ளதாகவும் வேலைவாய்பின்மை, பணவீக்கம், சுற்றுச்சூழல் தகராறு மற்றும் குடியுரிமை தொடர்பான கொள்கைகளுக்கு எதிரான பரவலான விரக்தியின் வெளிப்பாடாக மாறியிருக்கிறது.

" இந்த இயக்கம் உடனடியாக அரசியல் மாற்றத்துக்கு வழி வகுக்கப்போவதில்லை என்பதை ஒத்துக்கொண்டாலும், இது மக்களின் வளர்ந்துவரும் ஆக்ரோசத்தைப் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் சமகால அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாக அமையக்கூடும்."


வீரகத்தி தனபாலசிங்கம்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!