31 பேர் பலி: இலங்கை சிறையில் கலவரம் வெடித்தது எப்படி? பின்னணியும் நெகிழ வைக்கும் சோகக் கதையும்
27 Jul, 2026
''எங்களால் கறி, முட்டை வாங்க முடியவில்லை. ஏனெனில், அதன் விலை 6 மடங்கு உயர்ந்துவிட்டது. பேருந்து கட்டணம் அதிகமாக உள்ளதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதும் சிரமமாக உள்ளது’’ என்கிறார் நதிகா.
கேஸ் மற்றும் மின்சார விலை விரைவில் குறைய வேண்டும் என அவர் பிரார்த்திக்கிறார்.
தற்போது இலங்கையில் பணவீக்கம் கணிசமான அளவு குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் 54 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஜூன் மாதத்தில் 12 சதவீதமாக குறைந்துள்ளது. எனினும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு தடுமாறிவருகிறது.
கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு கூடுதல் சிரமம்
கொழும்புவிற்கு தெற்கே 160 கிமீ தூரத்தில் ரப்பர் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது ரத்தினபுரி.
இங்கு தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக கருப்பையா தென்னை மரம் ஏறுகிறார். மரம் ஏறினால் இலங்கை மதிப்பில் அவருக்கு 200 ரூபாய் சம்பளம் கிடைக்கும்.
’’பணவீக்கம் அதிகமாக உள்ளது. என் குழந்தையின் கல்வியையும் நான் பார்த்துகொள்ள வேண்டும். எனவே குறைந்த பணமே உணவு வாங்க என்னிடம் எஞ்சியுள்ளது'' என்கிறார் கருப்பையா.
தன்னுடைய வேலையில் உள்ள ஆபத்துகள் குறித்து விவரித்த கருப்பையா, குடும்பத்தை கவனிக்க வேண்டிய பொறுப்பு உள்ளதால் மழை பெய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் மரம் ஏறச் செல்வதாகக் கூறுகிறார்.
ரத்தினபுரிக்கு அருகே பலெண்டா என்ற கிராமம் உள்ளது. இங்கு 150 குடும்பங்கள்வரை வசிக்கின்றனர். பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் கூலிகள்.
அங்குள்ள அரசு தொடக்க பள்ளியின் முதல்வர் மற்றும் சில ஆசிரியர்கள் மாணவர்களின் எடையை கண்காணித்து வருகின்றனர்.
"இங்குள்ள பெரும்பாலான குழந்தைகள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அதனால் வாரந்தோறும் இரண்டு முட்டைகள் உட்பட அவர்களுக்கு உணவு கொடுக்க ஆரம்பித்தோம்'' என்கிறார் பள்ளி முதல்வர் வாசிர் ஜாஹீர்.
ஆனால், தற்போது விலைவாசி மீண்டும் அதிகரித்துள்ளதால் அதை வாரம் ஒரு முட்டை எனக் குறைத்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
பெரும்பாலான குழந்தைகள் குறைவான எடை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
குறைவான எடை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு
நாட்டில் 22 மில்லியன் மக்கள் இலவச மருத்துவ சேவையைப் பெறுகின்றனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 22 மில்லியன் மக்கள் இலவச மருத்துவ சேவையைப் பெறுகின்றனர். தன் நாட்டிற்குத் தேவையான 85 சதவீத மருந்துகளை இலங்கை இறக்குமதி செய்கிறது.
எனவே நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது அரசு கையிருப்பு பணம் குறைந்ததால் மருத்துவ பொருட்களிலும் பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்பட்டது.
இந்தப் பொருளாதார நெருக்கடி, கண்டியைச் சேர்ந்த 75 வயது உயர்மட்ட அரசியல் விஞ்ஞானி மோவா டி சொய்சாவை வெகுவாக பாதித்தது.
நுரையீரல் நோயான 'ஃபைப்ரோஸிஸ்' சிகிச்சைக்காக இந்தியாவிலிருந்து மருந்துகளை வாங்க அவர் மிகவும் சிரமப்பட்டார். இந்தச் சூழலில், ஒன்பது மாதங்களுக்கு முன் மோவா டி சொய்சா உயிரிழந்துவிட்டார்.
நோயாளிகள் அவதி
''நோயால் அவர் கடும் அவதிப்பட்டார். எனினும், தொடர்ந்து தன் புத்தகத்தை எழுதினார். உடல்நிலை தேறாததால் நாம் இறக்கப் போகிறோம் என நினைத்தார்'' என்கிறார் அவரது மனைவி மாலினி டி சொய்சா.
அவர் மரணத்திற்குப் பிறகு கடனை அடைக்க மிகவும் சிரமப்பட்டதாகவும் மாலினி கூறுகிறார்.
மாலினி டி சொய்சா.
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை கொழும்புவில் உள்ள கேன்சர் சிறப்பு மருத்துவமனைக்கு உள்ளேயும் பார்க்க முடிகிறது. மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் 48 வயதான ரமணி அசோகாவும், அவரது கணவரும் அடுத்த கீமோதெரபி சிகிச்சை குறித்து கவலை கொண்டுள்ளனர்.
'’தற்போதுவரை மருத்துவமனையில் மருந்துகள் இலவசமாக கிடைத்தன. இந்த மருத்துவமனைக்கு பயணித்து வருவதே செலவுமிக்கதாக உள்ளது. இங்கு மருந்து கையிருப்பில் இல்லாததால் இனி அதையும் பணம் கொடுத்து வெளியே வாங்க வேண்டும்’’ என்கிறார் ரமணி அசோகா.
மருந்து விலை உயர்வு மற்றும் அதன் பற்றாக்குறை குறித்து தான் அறிந்திருப்பதாகக் கூறும் இலங்கை சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்லா, இந்தப் பிரச்னையை உடனடியாக முற்றிலும் களைய முடியாது என்கிறார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!