புத்தளம், வென்னப்புவ பகுதியில் அமைந்துள்ள குறுக்கு வீதியொன்றில், யுவதி ஒருவரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோட முயன்ற இளைஞர் ஒருவர் அப்பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் சனிக்கிழமை (07) அன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த யுவதி ஒருவரை, பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், வீதியின் வளைவு ஒன்றில் வைத்து குறித்த பெண்ணை முந்திக்கொண்டு சென்று வழி மறித்துள்ளார்.
இதன் போது, பெண் நிலைதடுமாறி கீழே விழுந்ததையடுத்து, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல அந்த நபர் முயன்றுள்ளார். எனினும், அவர் வந்த மோட்டார் சைக்கிள் அந்த நேரத்தில் இயங்கவில்லை.
அச்சமயம் அங்கு வந்த பிறிதொரு இளைஞர், சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட நபரை மடக்கிப் பிடித்ததோடு, அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர்.
பொதுமக்களால் தாக்கப்பட்ட குறித்த சந்தேக நபர், பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Leave a Reply
Write the comments...............