news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஈரானால் தவி­டு­பொ­டி­யாக்­கப்­பட்ட அகண்ட இஸ்ரேல் இராஜ்­ஜி­யத்­துக்­கான வடி­வ­மைப்பு

01 Jun, 2026

இஸ்­ரே­லிய செய்­தித்தாளான "தி ஜெரு­சலேம் போஸ்ட்" 2026 மார்ச் 14 ஆம் திகதி வெளி­யிட்­டுள்ள ஒரு தக­வலின் படி சுமார் ஒரு நூற்­றாண்­டுக்கு முன்னர் 1918 ஆம் ஆண்டில் டேவிட் பென் கியூ­ரியன் "நமது நிலம் மற்றும் அதன் பிராந்­தி­யத்தின் எல்­லைகள்" என்ற தலைப்பில் ஒரு கட்­டு­ரையை எழுதி இருந்தார். இவர் பிற்­கா­லத்தில் இஸ்­ரேலின் முத­லா­வது பிர­த­ம­ராக பதவி வகித்தார்.

அந்த கட்­டுரை வெளி­யான காலப்­பகுதி துருக்கி பேர­ரசு வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருந்த நிலையில், பிரிட்டன் மற்றும் பிரான்ஸால் நவீன மத்­திய கிழக்கு செதுக்­கப்­பட்டுக் கொண்­டி­ருந்த கால­மாகும். இஸ்ரேல் என்ற ஒரு நாடோ அல்­லது அரசோ ஸ்தாபிக்­கப்­ப­டாத ஒரு காலப்­ப­குதி  என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

முன்­மொ­ழி­யப்­படும் இஸ்­ரேலின் எல்­லைகள் என்­பது, மேற்கில் மத்­தி­ய­தரைக் கடல், கிழக்கில் சிரிய பாலை­வனம், தெற்கில் சினாய் மற்றும் அரே­பியா பாலை­வ­னங்கள், மற்றும் வடக்கில் லெபனான் மற்றும் ஹெர்மோன் மலைகள் ஆகி­ய­வற்றால் சூழப்­பட்ட ஓர் இயற்­கை­யான புவி­யியல் அலகு என்று அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.  

மேலும் மிக முக்­கி­ய­மாக  இஸ்­ரேலின் தரை­வ­ழி­யான இயற்­கை­யான வடக்கு எல்லை, தெற்கு லெப­னானில் உள்ள லிட்­டானி ஆறு என்றும் அவர் முடிவு செய்­தி­ருந்தார்.




தற்போது பிர­தமர் நெதன்­யா­ஹுவின் இஸ்­ரே­லிய அர­சாங்கம், இந்த திட்­டத்தின் ஒரு பகு­தி­யா­கவே பலஸ்­தீ­னர்­களை வெளி­யேற்றி, மேற்குக் கரையை கைப்­பற்றி, தெற்கு லெப­னானை லிட்­டானி நதி வரை இணைக்கும் வகையில், யூதர்­க­ளுக்கு மட்­டு­மே­யான குடி­யேற்­றங்­களை உரு­வாக்கி வரு­கின்­றது.

 1930 மற்றும் 1940 களில் இஸ்­ரேலை உரு­வாக்கும் வகையில், சியோ­னிச யூத குண்­டர்கள் பலஸ்­தீன நிலங்­களை சூறை­யா­டி­ய­போது, மேற்குக் கரையில் உள்ள பலஸ்­தீ­னர்­களை கட்­டா­யப்­ப­டுத்தி வெளி­யேற்ற வச­தி­யாக வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்து விட்­ட­தோடு, இஸ்­ரே­லிய அர­சாங்கம் அதற்கு தேவை­யான ஆத­ர­வையும்  நிதி உத­வி­யையும் வழங்­கி­யது.

இன்று இஸ்லாம் மற்றும் முஸ்­லிம்­களை கைவிட்டு விட்டு, காஸாவில் பலஸ்­தீ­னர்கள் மீதான இஸ்­ரே­லிய இனப்­ப­டு­கொ­லைக்கு ஆத­ர­வ­ளித்துக் கொண்டு, தங்கள் அதி­காரம், செல்வம், அரண்­ம­னைகள், மற்றும் வச­தி­களைப் பற்றி மட்­டுமே கவ­லைப்­படும் அரபு சர்­வா­தி­கா­ரிகள் கண்­மூ­டித்­த­ன­மாக இருக்கும் நிலையில், அமெ­ரிக்­கா, -­பி­ரிட்டன் மற்றும் ஐரோப்­பாவின் முழு ஆத­ர­வுடன் இது நடக்­கின்­றது.  

கிழக்கு ஜெரு­ச­லேமை உள்­ள­டக்­கிய, மேற்குக் கரையின் பலஸ்­தீனப் பகுதி 1967 ஜூன் 7 முதல் இஸ்­ரே­லிய இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பின் கீழ் உள்­ளது. ஆறு நாள் போரின் போது இஸ்­ரே­லிய படைகள் இப்­ப­கு­தியைக் கைப்­பற்றி பின்னர் ஜோர்­டானால் ஆளப்­பட்­டது.  

ஜூன் 1967 முதல் இஸ்ரேல், சர்­வ­தேச சட்­டத்தை மீறி மேற்குக் கரை முழு­வதும் யூதர்­க­ளுக்கு மட்­டு­மே­யான குடி­யேற்­றங்­க­ளையும் நிறுவி உள்­ளது. அமெ­ரிக்­கா-­, இங்­கி­லாந்து மற்றும் ஐரோப்­பாவின் பார­பட்­ச­மான, கண்­மூ­டித்­த­ன­மான ஆத­ரவின் கார­ண­மாக எந்­த­வொரு சர்­வ­தேச தீர்­மா­னத்­தையும் மீறு­வ­தற்கு இஸ்­ரே­லுக்கு சுதந்­திரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. ஐ.நா.வைப் பற்­றியோ அதன் தீர்­மா­னங்கள் பற்­றியோ இஸ்ரேல் கவ­லைப்­பட்­டதே கிடை­யாது.



மேற்குக் கரையில் 2,747,943 பலஸ்­தீ­னர்கள் மற்றும் 670,000 இற்கும் மேற்­பட்ட இஸ்­ரே­லிய குடி­யே­றிகள் இருப்­ப­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது, அவர்­களில் சுமார் 220,000 பேர் கிழக்கு ஜெரு­ச­லேமில் வாழ்­கின்­றனர்.  

இன்று சுமார் 175 உத்­தி­யோ­க­பூர்வ குடி­யேற்­றங்கள் மற்றும் சுமார்  200- அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத புறக்­காவல் நிலை­யங்கள் (கிழக்கு ஜெரு­சலேம் தவிர) என்­பன 470,000 இற்கும் மேற்­பட்ட இஸ்­ரே­லிய குடி­யேற்ற வாசி­களைக் கொண்­டுள்­ளன. குறிப்­பி­டத்­தக்க விரி­வாக்கம் மேலும் தொடர்­கின்­றது. இதில் புதிய குடி­யேற்­றங்கள் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு மேலும் பல புறக்­காவல் நிலை­யங்­களை சட்­டப்­பூர்­வ­மாக்­கு­வ­தற்­கான முயற்­சி­களும் அடங்கி உள்­ளன.

இந்த மோத­லா­னது ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்குக் கரையை இணைக்­கவும், வடக்கு காஸாவை தனி­மைப்­ப­டுத்­தவும், இஸ்­ரேலின் பாது­காப்­புக்­கான ஒரு மண்­ட­ல­மாக செயல்­ப­டவும், காஸாவில் பல பில்­லியன் டொலர் மதிப்­புள்ள கடல் இயற்கை எரி­வாயு வளங்­களைக் கைப்­பற்றி, பின்னர் அதை அபி­வி­ருத்தி செய்து, காஸா வழி­யாக "பென் கியு­ரியன் கால்வாய் திட்­டத்தை" நிறு­வவும் எடுக்­கப்­ப­டு­கின்ற ஒரு முயற்­சி­யாகும்.

 இந்த கால்வாய் எகிப்து வழி­யாக செல்லும் சூயஸ் கால்­வாய்க்கு போட்­டி­யாக, அகபா வளை­கு­டாவை மத்­தி­ய­தரைக் கட­லுடன் இணைக்கும் திட்­ட­மாகும் என்று கட்டுரையாளர் மனுவல் ஹசா­சியன் குறிப்­பிட்­டுள்ளார்.

1967 ஆம் ஆண்டில் மேற்குக் கரையை ஆக்­கி­ர­மித்­தது முதல்,   மேற்குக் கரை முழு­வதும் இரண்டு மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான டுனாம் நிலங்­களை (சுமார் 200,000 ஹெக்டேர்) இஸ்ரேல் தவ­றாகப் பயன்­ப­டுத்­தி­யுள்­ளது. 

இஸ்ரேல் இந்த நிலத்தை தனது சொந்த நோக்­கங்­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­து­கின்­றது. இதில் புதிய குடி­யேற்­றங்­களைக் கட்­டுதல், விவ­சாய நிலங்­களைப் பேணுதல், மற்றும் தொழில்­துறை மண்­ட­லங்­களை உரு­வாக்கல், உட்­பட தங்கள் கட்­டுப்­பாட்டில் உள்ள பிராந்­தி­யத்தை விரி­வு­ப­டுத்­துதல் மற்றும் முக்­கி­ய­மாக குடி­யே­றிய மக்­க­ளுக்கு சேவை செய்யும் சாலை­களை அமைத்தல் என்­பன அடங்கும்.

இது தவிர பலஸ்­தீன மக்கள் மீது நடத்­தப்­பட்டு வரும் அடா­வடித் தனங்­களில் வன்­மு­றைகள் மூலம் மக்­களை அடித்து துன்­பு­றுத்­து­வது, அவர்கள் மீது கற்­களை வீசு­வது, மக்­களை அச்­சு­றுத்­து­வது, வயல்­களை எரிப்­பது, மரங்கள் மற்றும் பயிர்­களை அழிப்­பது, பயிர்­களை சூறை­யா­டு­வது, வீடுகள் மற்றும் வாக­னங்­களை சேதப்­ப­டுத்­து­வது, 

வீதி­களில் தடை­களை ஏற்­ப­டுத்­து­வது மற்றும் சில சந்­தர்ப்­பங்­களில் கொலை செய்­வது என்­ப­னவும் அடங்கும். பண்­ணைகள் என்று அழைக்­கப்­படும் பகு­தி­களைச் சேர்ந்த குடி­யேற்­ற­வா­சிகள், பலஸ்­தீன விவ­சா­யி­க­ளையும் மேய்ப்­பர்­க­ளையும் அவர்­க­ளது வயல்­க­ளி­லி­ருந்தும், பல தலை­மு­றை­க­ளாக அவர்கள் பயன்­ப­டுத்தும் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் நீர் ஆதா­ரங்­க­ளி­லி­ருந்தும், வன்­மு­றையை கையாண்டு, துரத்தி வரு­கின்­றார்கள். அவர்கள் தின­சரி வன்­மு­றை­யான மோதல்­களைத் தொடங்­கு­கின்­றார்கள் மற்றும் பலஸ்­தீ­னர்­களின் மந்­தை­களை சித­ற­டிக்க ட்ரோன்­க­ளையும் பயன்­ப­டுத்­து­கின்­றார்கள்.

பலஸ்­தீ­னர்கள் அச்­சத்தில் உள்­ளனர். இரா­ணு­வத்தில் இருந்து  காவல்­து­றையில் வரை மற்றும் ஷின் பெட் உள­வுத்­துறை சேவை என எல்­லாமே அவர்­களை அச்­சு­றுத்­து­கின்­றன. கைதுகள்,  விசா­ர­ணைகள்,   சிறை­யி­லி­ருந்து  சோதனைச் சாவ­டிகள், மற்றும் ரோந்துப் பணிகள் என எல்­லாமே அச்­சு­றுத்­த­லாக மாறி உள்­ளன.

தெற்கு லெப­னானைப் பொறுத்­த­வரை, லிட்­டானி மற்றும் சஹ்­ரானி ஆறுகள் வரைக்­கு­மான பகு­தி­களில் ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்­களைப் பாதிக்கும் கட்­டாய இடப்­பெ­யர்வு உத்­த­ர­வு­களை இஸ்ரேல் வெளி­யிட்­டுள்­ளது. அதுமட்­டு­மன்றி அவ்­வப்­போது சிறப்பு சோத­னை­க­ளையும் அவர்கள் கடக்க வேண்டி உள்­ளது. லிட்­டானி ஆற்றின் தெற்கே அமைந்­துள்ள டசன் கணக்­கான நக­ரங்கள் மற்றும் கிரா­மங்­களில் வசிப்­ப­வர்­க­ளையும் ஆற்றின் வடக்கே உள்ள சில பகு­தி­க­ளையும் சேர்ந்த மக்­களை உட­ன­டி­யாக வெளி­யே­று­மாறு இஸ்­ரே­லிய இரா­ணுவம் பல­முறை அறி­வு­றுத்தல் வழங்­கி­யுள்­ளது.

தற்­போது பலஸ்­தீனப் பகு­தி­யான காஸாவும் இஸ்­ரேலின் கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும், தற்­போது நடந்து வரும் ஈரா­னுக்கு எதி­ரான அமெ­ரிக்க, இஸ்­ரே­லிய போரின் போது, இஸ்ரேல் மீதான ஈரானின் கடு­மை­யான பதில் தாக்­குதல், அகண்ட இஸ்­ரேலை உரு­வாக்கும் நோக்கில், பலஸ்­தீன மற்றும் அரபு நிலங்­களை அப­க­ரிப்­ப­தற்­கான சியோ­னிச கனவை சிதைத்­துள்­ளது. 

காஸா மற்றும் ஈரான் மீதான இஸ்­ரேலின் காட்­டு­மி­ராண்­டித்­தனம்,  உலகில் மிகவும் வெறுக்­கப்­படும் நாடான இஸ்­ரே­லுக்கு எதி­ராக கடு­மை­யான உல­க­ளா­விய விரோ­தத்தைத் தூண்டி விட்­டுள்­ளது. 

இந்த மாத தொடக்­கத்தில் நக்பா வரு­டாந்த நினைவு நிகழ்வின் போது, அமெ­ரிக்கா ஐரோப்பா ஆசியா ஆபி­ரிக்கா மற்றும் பல நாடு­களில் ஆர்ப்­பாட்­டங்கள் நடந்­தன. நிச்­ச­ய­மாக அரபு நாடு­களைத் தவிர. சர்­வா­தி­கா­ரிகள் தங்கள் அமெ­ரிக்க மற்றும் இஸ்­ரே­லிய எஜ­மா­னர்­களைப் குஷிப்­ப­டுத்த தங்கள் மக்­களை எந்த நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட முடி­யா­த­வாறு மிரு­கத்­த­ன­மான ஒடுக்கு முறையின் கீழ் வைத்­தி­ருக்­கின்­றனர்.

ஓர் அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ள படி "மேற்­கு­லகின் அன்­புக்கு சொந்­த­மா­ன­வர்கள், ஆனால், உல­க­ளா­விய ரீதியில் தனி­மைப்­ப­டுத்தப் பட்­ட­வர்கள் என்­பதே  இஸ்­ரேலின் உருவம். இன்­றைய உலக சூழலில் இந்த நிலை மேலும் ஆழ­ம­டைந்து வரு­கின்­றது. இதனால் இஸ்­ரேலின் மவுசு உல­க­ளா­விய மட்­டத்தில் வர­லாறு காணாத சரிவை சந்­தித்து விட்­டது. காஸாவில் ஏற்­ப­டுத்­திய பேர­ழிவு, லெபனான் மற்றும் ஈரான் சம்­பந்­தப்­பட்ட மோதல்கள் அதி­க­ரித்து வரு­வதால், இஸ்ரேல் என்ற நாட்டைப் பற்­றிய கருத்து பெரிதும் களங்­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இது உல­க­ளவில் தீவிர இரா­ஜ­தந்­திர மற்றும் பொது ஆய்வை தூண்­டி­யுள்­ளது.

முன்­னொ­ரு­போதும் இல்­லாத வகையில் சர்­வ­தேச தனிமைப்படுத்தல், போர்க்குற்றங்கள் குறித்த பரவலான குற்றச்சாட்டுகள் உலகளவில் இஸ்ரேலுக்கு எதிராக அதிகரித்துள்ள நிலையில், அதன் தலைமை நடைமுறையில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடிவிறாந்து உத்தரவுகளையும் எதிர்கொண்டுள்ளது. வெல்லமுடியாத ஒரு சக்தி என்ற இஸ்ரேலின் மாய பிம்பத்தின் மீது ஈரான் கடுமையான அடியை கொடுத்துள்ளது”.

நிலைமை என்னவென்றால், "இஸ்ரேல் தொடர்ந்து இருக்கக்கூடாது இதை ஒரு யூதனாக நான் சொல்கிறேன்" என்று நோம் சோமோஸ்கி என்பவர் கூறி உள்ளார்.

அரசியல் ஆய்வாளர் நார்மன் பின்கெல்ஸ்டைன் என்பரின் கருத்துப்படி "இஸ்ரேலியர்களுக்கு தங்களது மூட்டை முடிச்சுக்களை கட்டிக் கொண்டு, பலஸ்தீன மண்ணை விட்டு வெளியேறும் உரிமை மட்டுமே எஞ்சி உள்ளது".    Politics

அமெரிக்க பத்திரிகையாளர் அனா காஸ்பரியன் "உலக அமைதிக்கு இஸ்ரேல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இஸ்ரேலுக்கும் அதன் அரசாங்கத்துக்கும் சார்பாக அவர்களின் கூட்டு இனப்படுகொலையின் ஆதரவாளராக இருப்பது முற்றிலும் ஒழுக்கக் கேடானது என்று நான் கருதுகின்றேன்” என்று கூறுகின்றார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!