news@ilakkiyainfo.com

பிரிவுகள்

காஸா சமா­தானத் திட்டம்: பலஸ்­தீ­னர்­களின் கல்­லறை மேல் சொந்தப் புகழ் தேடி சிலை அமைக்கும் ட்ரம்பின் முயற்சி

03 Aug, 2026

   

        

சில துளி­களில் யதார்த்தம் (Reality Check)


* உறு­தி­ய­ளிக்­கப்­ப­டு­வது: வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க சமா­தா­னமும் ஸ்திரத்­தன்­மையும்.


* கிடைப்­பது: ஐ.நா.வைப் புறக்­க­ணித்து,


ஐ.சி.சி. தீர்ப்­பு­களை மறைத்து, கடந்­த­கால அட்­டூ­ழி­யங்­களை மூடி மறைக்கும் தீர்வு.


* முதன்மை நோக்கம்: ஈரான் யுத்தம் மற்றும் போர்க் குற்­றங்­க­ளி­லி­ருந்து உலக நாடு­களின் கவ­னத்தைத் திசை­தி­ருப்­புதல்.

இன்­னு­மொரு 'சமா­தானத் திட்டம்' பற்­றிய அறி­வித்தல் வெளி­யா­கி­யுள்­ளது.


இது டொனால்ட் ட்ரம்ப்பின் 'கருணை'யில் காஸா மக்­க­ளுக்கு விமோ­சனம் தேடிக் கொடுத்தல் பற்­றி­யது. இதற்கும் மேலைத்­தேய ஊட­கங்கள் வழக்­கம்­போல அதிக முக்­கி­யத்­துவம் அளித்­துள்­ளன. சிக்­க­லான தொழில்­நுட்ப வார்த்­தை­களைப் பயன்­ப­டுத்தி, காஸாவின் எதிர்­காலம் பற்­றிய ஒரு அழ­கான பொய் பிம்­பத்தைக் கட்­ட­மைக்க முனை­கின்­றன.


இதே பத்­தியில் இந்தப் போலித்­த­னங்கள் பற்றி நாம் பல முறை பேசி­விட்டோம்.


இன்றும் கூட மேலைத்­தேய ஊட­கங்கள் அமெ­ரிக்­காவின் சமா­தான முன்­மு­யற்­சி­களைப் பற்றிப் பேசு­கையில், அதன் மறை­முக உள்­நோக்கம் என்ன, எந்த உண்­மைகள் திட்­ட­மிட்டு மறைக்­கப்­ப­டு­கின்­றன என்­பதை கவ­ன­மாக ஆராய வேண்­டி­யி­ருக்­கி­றது

.

இன்­றைய சூழ்­நி­லையில் இரண்டு விட­யங்கள் பிர­தா­ன­மாகப் பேசப்­ப­டு­கின்­றன. டொனால்ட் ட்ரம்ப்பின் 'மேலான' சிந்­த­னையில் உதித்த 'சமா­தான சபை' (Board of Peace) பற்­றிய திட்டம் மற்றும் அத­னூ­டாக காஸாவில் அமை­தியை நிலை­நாட்­டு­வ­தற்­காக வகுக்­கப்­பட்ட பாதை வரை­படம் (Roadmap). இந்த வரை­ப­டங்­களில் ஆயுதக் களைவு பற்­றிய அட்­ட­வ­ணைகள் இருக்­கின்­றன. 


எந்­தெந்த இலக்­கு­களை எப்­போது அடைய வேண்டும் என்ற கால வரை­ய­றைகள் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்­ளன. காஸா நிலப்­ப­ரப்பு எப்­ப­டி­யெல்லாம் நிர்­வ­கிக்­கப்­படும், ஆட்சி செய்­யப்­படும் என்ற விப­ரங்கள் எழு­தப்­பட்­டுள்­ளன. மேலோட்­ட­மாகப் பார்த்தால், இது கவ­ன­மாக வடி­வ­மைக்­கப்­பட்ட ஆக்­க­பூர்­வ­மான திட்டம் போன்­ற­தொரு தோற்­றப்­பாட்டை ஏற்­ப­டுத்தும். ஆனால், சில அடிப்­படை கேள்­வி­களை எழுப்­பினால் அது முற்­று­மு­ழுதும் ஒரு மாயை என்­பதைப் புரிந்து கொள்ள முடியும்.



1. கவ­னத்தைத் திசை­தி­ருப்பும் ராஜ­தந்­திரம்


இந்த நேரத்தில், இப்­ப­டி­யொரு திட்டம் ஏன் தேவை என்­ப­துதான் மிக முக்­கி­ய­மான கேள்வி. இதற்குப் பின்னால் உள்ள அப்­பட்­ட­மான உண்மை: உலகின் கவ­னத்தைத் திசை­தி­ருப்­பு­வது.

அமெ­ரிக்­கா­வுக்கு இரண்டு பிர­தான விட­யங்­க­ளி­லி­ருந்து உல­கத்தின் பார்­வையைத் திருப்ப வேண்­டிய கட்­டாயம் இருக்­கி­றது. முத­லா­வது, ஈரா­னுக்கு எதி­ரான யுத்தம் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்ற மோச­மான விளை­வுகள். 

இரண்­டா­வது, சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் (ஐ.சி.சி.) இஸ்­ரே­லிய தலை­வர்­க­ளுக்கு எதி­ராகத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள இனச்­சுத்­தி­க­ரிப்பு மற்றும் போர்க் குற்­றச்­சாட்­டுகள். காஸாவின் எதிர்­கால ஆட்சி நிர்­வாகக் கட்­ட­மைப்பு மீது ஊட­கங்கள் வாயி­லாகக் கவ­னத்தைக் குவிப்­பதன் மூலம், கடந்த காலத்தில் நிகழ்த்­தப்­பட்ட அட்­டூ­ழி­யங்­களை அமெ­ரிக்கா மறக்­க­டிக்கப் பார்க்­கி­றது. இஸ்­ரே­லுடன் கூட்­டாகக் கட்­ட­விழ்த்­து­விட்ட குற்­றச்­செ­யல்­களைத் திரை­ம­றை­வுக்குக் கொண்­டு­செல்ல முயல்­கி­றது.


காஸா மக்­களைக் குண்­டு­போட்டுக் கொன்­றொ­ழித்த அட்­டூ­ழி­யங்கள் ஒரு­பு­ற­மி­ருக்­கட்டும்; உணவுப் பொருட்­களும் மனி­தா­பி­மான உத­வி­களும் கிடைப்­பதைத் தடுத்து, ஒரு சமூ­கத்­தையே பட்­டினி போட்டுக் கொல்­வது சர்­வ­தேச சட்­டங்­களை (ஜெனிவா பிர­க­ட­னத்தின் 54ஆவது ஷரத்தை) மீறும் அப்­பட்­ட­மான போர்க் குற்­ற­மாகும். காஸாவின் கடந்­த­கால அநீ­தி­க­ளுக்குப் பதில் கூறாமல், எதிர்­காலம் பற்­றிய பசப்பு வார்த்­தை­களைப் பேசும் இந்த விவ­ர­ணைக்குள் 'பொறுப்புக் கூறல்' என்­பது மாயமாய் மறைந்­து­போ­கி­றது.



2. ஐ.நா.வைப் புறக்­க­ணிக்கும் தனி­நபர்


சுய­நலம்


ட்ரம்பின் 'சமா­தான சபை' என்­பது எவ்­வ­ளவு அபத்­த­மா­னது என்­பதை அதன் அமைப்பை வைத்தே புரிந்து கொள்ள முடியும்:

ஆயுட்­காலத் தலைவர்: இந்த அமைப்பின் ஆயுட்­காலத் தலை­வ­ராக டொனால்ட் ட்ரம்ப் கட­மை­யாற்­றுவார்.


கட்­டண உறுப்­பினர்: இதில் அங்­கத்­துவம் வகிக்க விரும்பும் நாடுகள் பெருந்­தொகை பணத்தைச் சந்­தா­வாகச் செலுத்த வேண்டும்.

சட்­டத்­திற்கு அப்­பாற்­பட்­டது: இச்­ச­மா­தான சபை­யா­னது ஐக்­கிய நாடு­களின் கட்­ட­மைப்­பிற்குள் வராது; சர்­வ­தேச சட்­டங்­க­ளுக்கும் கட்­டுப்­பட்டு நடக்­காது.


சமா­தான சபையின் ஊடாக ஐ.நா. கட்­ட­மைப்பை வலி­மை­யற்­ற­தாக்க முனை­வது ஏன்? பதில் எளி­மை­யா­னது. சர்­வ­தேச சட்டம் பலஸ்­தீ­னத்தின் இறை­யாண்­மையை அங்­கீ­க­ரிக்­கி­றது; போர்க் குற்­றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை எதிர்­பார்க்­கி­றது.


எதற்­குமே கட்­டுப்­ப­டாமல் தனி­யாக இயங்க முனையும் 'சமா­தான சபை'யானது, நோபல் சமா­தானப் பரிசின் மீது அதீத மோகம் கொண்ட டொனால்ட் ட்ரம்பைத் தவிர வேறு யாருக்கும் பதில் சொல்ல வேண்­டிய அவ­சி­ய­மில்­லாத ஒரு தனியார் ‘கிளப்’ போன்­றது.


3. சமா­தா­னமா? அல்­லது சர­ண­டைவா?

சமா­தான சபை முன்­மொ­ழியும் இத்­திட்டம், காஸா பலஸ்­தீ­னர்­க­ளுக்கு வைக்­கப்­பட்ட பொறியே தவிர வேறொன்றும் கிடை­யாது.

வர­லாற்று ரீதி­யான தவ­று­களைக் சற்றே ஒதுக்கி வைத்­து­விட்டு, கடந்த ஆண்டு ஒக்­டோபர் மாதம் அறி­விக்­கப்­பட்ட 'போர் நிறுத்­தத்தை' மட்டும் நினை­வு­கூர்வோம். அன்­றி­லி­ருந்து இன்று வரை 1,100 இற்கும்    மேற்­பட்ட பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளார்கள். உத­விகள் முடக்­கப்­ப­டு­கின்றன் இரா­ணுவக் காவ­ல­ரண்கள் விஸ்­த­ரிக்­கப்­ப­டு­கின்­றன.


இஸ்­ரேலின் இரா­ணுவ அடக்­கு­முறை நீக்­கப்­படும் என்ற எந்­த­வொரு உத்­த­ர­வா­தமும் இல்­லாத சூழலில், சமா­தானத் திட்­டத்­திற்கு அடி­ப­ணிய வேண்டும் என்று பலஸ்­தீ­னர்­களைக் கேட்­பது எந்த வகையில் நியா­ய­மாகும்? இது இரா­ஜ­தந்­தி­ரமா அல்­லது பலஸ்­தீ­னர்­களைப் பணயக் கைதி­க­ளாக மாற்றும் அடா­வ­டித்­த­னமா?


உண்ண உண­வின்றி, சொந்த வீடு­களை விட்டு இடம்­பெ­யர்ந்து, எதிர்­காலம் கேள்விக் குறி­யாக நிற்கும் ஒரு சமூகத்தை, சுயநிர்ணய உரிமையுள்ள மனிதர்களாக நோக்காமல், ஆளப்பட வேண்டிய 'மந்தைக் கூட்டமாக' மட்டுமே இச்சமாதானத் திட்டம் அணுகுகிறது. மேலைத்தேய ஊடகங்கள் கட்டமைக்கும் பசப்பு வார்த்தைகளைத் தாண்டி ஆராய் கையில் ஒரு கசப்பான உண்மை வெளிப் படுகிறது:


ட்ரம்பின் சமாதான சபையோ அல்லது இந்த காஸா சமாதானத் திட்டமோ, திறந்தவெளிச் சிறைக்கூடமாக மாற்றப்பட்டுள்ள ஒரு நிலப்பரப்பிற்கு நீதி நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. மாறாக, தனிப் பட்ட முறையில் புகழ் தேடும் ஒரு மனிதர், ஒடுக்கப்பட்ட மனிதர்களின் கல்லறைக்கு மேல் தனக்கான புகழ்கோபுரத்தை எழுப்புவ தற்காக ஆடப்படும் ஆபத்தான நாடகமாகும்.


சதீஷ் கிருஷ்­ண­பிள்ளை 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!