news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சமஷ்டித் தீர்வை காண்­ப­தற்கு இந்­தி­யாவை எதிர்­பார்த்தல்

18 Jul, 2026


இலங்­கையில் சமஷ்டி ஆட்­சி­மு­றைக்­காக எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க முதன் முத­லாகக்  குரல் கொடுத்து இந்த வரு­டத்­துடன் சரி­யாக ஒரு நூற்­றாண்டு நிறைவு பெறு­கி­றது. தனது யோச­னைக்கு வடக்குத் தமி­ழர்­களின் ஆத­ரவை பெறு­வ­தற்கு அன்று  அவர் எடுத்த  முயற்சி பயன் தர­வில்லை. 

அவ­ரது கோரிக்­கைக்கு அன்று  இனத்­துவ அர­சியல்  பரி­மாணம் ஒன்று  இருக்­க­வில்லை. அன்­றைய தமிழ் தலை­வர்கள் பண்­டா­ர­நா­யக்­க­வுடன் ஒத்­து­ழைத்து சமஷ்டிக் கோரிக்­கைக்­காக பாடு­பட்­டி­ருந்தால்  சில­வேளை இலங்­கையின் அர­சியல் வர­லாறு  நிச்­ச­ய­மாக வேறு­பட்­ட­தாக இருந்­தி­ருக்கும்.

அதே­வேளை,  துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, டொனமூர் அர­சி­ய­ல­மைப்­புக்கு பிறகு  பெரும்­பான்மை இனத்­த­வர்­களின் வாக்­கு­களைப் பெற்று அதி­கா­ரத்­துக்கு வரு­வ­தற்­காக, இனங்­க­ளுக்கு இடை­யி­லான உற­வுகள்  படு­மோ­ச­மாக சீர்­கு­லை­வ­தற்கு வழி­வ­குத்த தீவி­ர­மான  இன­வாத கொள்­கை­களை   பண்­டா­ர­நா­யக்க கடைப்­பி­டிக்­காமல் இருந்­தி­ருந்­தாலும்  இலங்­கையின் அர­சியல் வர­லாறு வேறு வித­மா­கவே இருந்­தி­ருக்கும்.

இலங்­கையில் சமஷ்டி ஆட்­சி­முறை தொடர்­பான விவாதம் ஒரு நூற்­றாண்டு வர­லாற்றைக் கொண்­ட­தாக இருக்­கின்ற அதே­வேளை, சமஷ்டி முறையின் அடிப்­ப­டையில் தங்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும் என்ற தமி­ழர்­களின்  கோரிக்கை முக்கால் நூற்­றாண்­டுக்கும் அதி­க­மான கால­மாக நீடிக்­கி­றது.

எஸ்.ஜே.வி. செல்­வ­நா­யகம் தலை­மை­யி­லான இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சி சமஷ்டி ஆட்­சி­முறைக் கோரிக்­கையை முன்­வைத்த போதிலும், கடந்த நூற்­றாண்டின் நடுப்­ப­கு­தியில் இரு வேறு அர­சாங்­கங்­க­ளுடன்  சமஷ்டி முறைக்கு  குறை­வான தீர்­வு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட ஒப்­பந்­தங்­களைச் செய்து கொண்­டது. 

செல்­வ­நா­ய­கத்­துடன் அந்த ஒப்­பந்­தங்­களில்  கைச்­சாத்­திட்ட  இரு  பிர­த­மர்கள்  தென்­னி­லங்­கையின் சிங்­கள இன­வாத சக்­தி­களின் எதிர்ப்­புக்கு மத்­தியில், கன­வான்­க­ளாக அர­சியல்  துணி­வாற்­றலை வெளிக்­காட்ட முடி­யா­த­வர்­க­ளாக நம்­பிக்கைத் துரோகம் செய்­தார்கள்.

கொழும்பு அர­சாங்­கங்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி, தேசிய இனப் பிரச்­சி­னைக்கு இணக்­க­பூர்­வ­மான அர­சியல் தீர்வைக்  காண்­பது இனி­மேலும் சாத்­தி­ய­மில்லை என்ற ஒரு கட்டம் வந்­ததும் தனி­நாட்டுக் கோரிக்கை பிறந்­தது. சமஷ்டி கோரிக்­கையை முன்­வைத்­த­போது தமிழ் மித­வாத அர­சியல் தலை­வர்­க­ளிடம் அதை அடை­வ­தற்கு நடை­முறைச் சாத்­தி­ய­மான  வழி­வரை படம் ஒன்று இருக்­க­வில்லை. அதைப் போன்றே தனி­நாட்டுக் கோரிக்­கையை  வென்­றெ­டுப்­ப­தற்­கான எந்­த­வொரு  திட்­டமும் அவர்­க­ளிடம்  இருக்­க­வில்லை.Geographic Reference


இறு­தியில்,  தனி­நாட்டை அடை­வ­தற்­காக தமிழ் இளை­ஞர்­க­ளினால்  முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆயு­தப்­போ­ராட்டம் உள்­நாட்டுப் போராக மாறி­யதும் அதன் விளை­வான பெரு­ம­ளவு  உயி­ரி­ழப்­பு­களும்  அழி­வு­களும் அண்­மைக்­கால வர­லாறு. வட்­டுக்­கோட்டை (1976 மே 14)  தீர்­மா­னத்­துக்கு பிறகு மூன்று தசாப்­தங்­க­ளுக்கும் அதி­க­மான கால­மாக தமிழர் அர­சி­யலில் 'மறக்­கப்­பட்­ட­தாக' இருந்த சமஷ்டித் தீர்வுக் கோரிக்கை போரின் முடி­வுக்குப் பின்­ன­ரான காலப் பகு­தியில்  மீண்டும்  மேலெ­ழுந்­தி­ருக்­கி­றது.

தேசிய இனப் பிரச்­சி­னைக்கு சமஷ்டி முறையின்  அடிப்­ப­டையில் நிலை­பே­றான அர­சியல்  தீர்வைக் காண வேண்டும் என்­பதே இன்று  சகல இலங்கை தமிழ் தேசி­ய­வாத அர­சியல் கட்­சி­க­ளி­னதும் பிர­தான கோரிக்­கை­யாக  இருக்­கி­றது. கோரிக்கை ஒன்­றாக இருக்­கின்ற போதிலும்,  இந்த கட்­சி­க­ளினால் தமிழ் மக்கள் சார்பில் ஒரு­மித்த நிலைப்­பாட்டை முன்­வைப்­ப­தற்கு  இணக்­கப்­பாட்­டுக்கு வர­மு­டி­ய­வில்லை.

நோர்­வேயின் அனு­ச­ர­ணை­யுடன் இந்த நூற்­றாண்டின் தொடக்­கத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சமா­தானச் செயன் முறை­யின்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிரு­வா­கத்­துக்கும் விடு­தலை புலி­க­ளுக்கும் இடையில் வெளி­நா­டு­களில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின் ஒரு கட்­டத்தில் சமஷ்டி முறையின் அடிப்­ப­டையில் அர­சியல் தீர்வைக்  காண்­பது குறித்து ஆராயத்  தயா­ராக இருப்­ப­தாக கூறப்­பட்­டதை தவிர, கொழும்பு அர­சாங்­கங்கள் ஒரு­போ­துமே தமிழ் அர­சியல்  தலை­மைத்­து­வத்­துடன் சமஷ்டித் தீர்வு குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தில்லை.

பிர­தமர் சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க தலை­மை­யி­லான ஐக்­கிய முன்­னணி அர­சாங்கம் முத­லா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பை வரை­வ­தற்­காக அமைத்த அர­சியல் நிரு­ணய சபை­யிடம் தமி­ழ­ரசு கட்சி சமர்ப்­பித்த சமஷ்­டி­முறை யோசனை அடி­யோடு  நிரா­க­ரிக்­கப்­பட்­டது. 1972 மே 22 முதல்  நடை­மு­றைக்கு வந்த அந்த அர­சி­ய­ல­மைப்­புத்தான் இலங்­கையை ஒரு ஒற்­றை­யாட்சி அரசு என்று பிர­க­டனம் செய்­தது.

ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­தன தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்கம் கொண்டு வந்த இரண்­டா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பு ( 1978) நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­துடன்  ஒற்­றை­யாட்சி முறையை மேலும் வலுப்­ப­டுத்­தி­யது.Psychology

1987 ஜூலை இந்­திய-இலங்கை சமா­தான உடன்­படிக்­கையின் விளை­வாக கொண்டு வரப்­பட்ட மாகா­ண­சபை முறை­மை­யு­ட­னான தமி­ழர்­களின் 38 வரு­ட­கால  அனு­பவம் ஒற்­றை­யாட்­சியின் கீழ் பய­னு­று­தி­யு­டைய அதி­கா­ரப்­ப­கிர்வு சாத்­தி­ய­மில்லை என்­பதை தெளி­வாக நிரூ­பித்­தி­ருக்­கி­றது.

இத்­த­கைய பின்­பு­லத்தில், ஒற்­றை­யாட்சி முறையை மாற்றி,  சமஷ்டி முறையின் அடிப்­ப­டை­யி­லான அர­சி­ய­ல­மைப்பு ஒன்றைக் கொண்டு வரு­வது  மாத்­தி­ரமே இலங்­கையின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நிலை­பே­றான தீர்­வாக அமை­ய­மு­டியும்  என்­பதே சகல தமிழ் தேசி­ய­வாத அர­சியல் கட்­சி­க­ளி­னதும் உறு­தி­யான நிலைப்­பா­டாக இன்று இருக்­கி­றது. ஆனால், இந்த கட்­சிகள் தங்­க­ளது கோரிக்­கையை வெறு­மனே வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னவே தவிர, உள்­நாட்டில்  அதை வென்­றெ­டுப்­ப­தற்­கான  அர­சியல் வேலைத் திட்டம் எதையும் கொண்­டி­ருப்­ப­தாக தெரி­ய­வில்லை.

இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியும்  ஜன­நா­யக தமிழ்த் தேசிய கூட்­ட­ணியும்  தற்­போது நடை­மு­றையில் இருக்கும் மாகாண சபை­களை அவற்றின் குறை­பா­டு­க­ளுக்கு  மத்­தி­யிலும், பாது­காத்துப் பயன்­ப­டுத்திக் கொண்டு நீண்­ட­கால நோக்கில் சமஷ்­டித்­தீர்வை  நோக்கிப் பய­ணிக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டைக் கொண்­ட­வை­யாக இருக்­கின்­றன.

தே­வேளை, தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணி­யையும் வேறு சில குழுக்­க­ளையும் உள்­ள­டக்­கிய தமிழ்த் தேசியப் பேரவை,   அதி­காரப் பகிர்வு விட­யத்தில் மாகாண சபைகள் முறை­மையை  தொடக்­கப்­புள்­ளி­யாகக் கூட கரு­த­மு­டி­யாது என்றும் ஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்பு முறை ஒழிக்­கப்­பட்டு தமிழ் (தேசத்தின்)  மக்­களின் இறை­மை­யையும் சுய­நிர்­ணய உரி­மை­யையும்  அங்­கீ­க­ரிக்­கக்­கூ­டிய சமஷ்டி முறை மாத்­தி­ரமே இனப் பிரச்­சி­னைக்கு   அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்கு ஒரே வழி என்ற நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்­றது.

போர்க் காலத்தில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும்  போர்க்­குற்­றங்­க­ளுக்கு சர்­வ­தேச சமூ­கத்தின் நெருக்­கு­தலின் மூல­மாக இலங்கை அரசைப் பொறுப்­புக்­கூற வைக்­கலாம் என்ற நம்­பிக்­கையில் கடைப்­பி­டித்த அதே அணு­கு­மு­றை­யையே  தமிழ் கட்­சிகள் அர­சியல் தீர்வு விட­யத்­திலும் தற்­போது கடைப்­பி­டிக்­கின்­றன. குறிப்­பாக, இந்­தி­யாவைக் கொண்டு நெருக்­கு­தலைக் கொடுப்­பதன் மூல­மாக தாங்கள் விரும்பும் அர­சியல் தீர்வை அடை­யலாம் என்று அவை நம்­பு­கின்­றன.Astrology & Divination

இந்­திய தலை­வர்­களை குறிப்­பாக வெளி­யு­றவு அமைச்சர் ஜெய்­சங்கர் போன்ற இரா­ஜ­தந்­தி­ரி­களைச் சந்­திக்­கின்ற வேளை­களில் எல்லாம் தமிழ்க் கட்­சி­களின் தலை­வர்கள்  மாகா­ண­சபை தேர்­தல்­களை மேலும் காலந்­தாழ்த்­தாமல் நடத்­து­வ­தற்கும் அர­சி­ய­ல­மைப்­புக்­கான 13 ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தவும்  இலங்கை அர­சாங்­கத்­துக்கு நெருக்­கு­தலைக் கொடுக்க வேண்டும் என்று கேட்­ப­துடன் நின்­று­வி­டு­வ­தில்லை. சமஷ்டித் தீர்­வொன்றைக் காண்­ப­தற்கு கொழும்பை வலி­யு­றுத்த வேண்டும் என்றும் அவர்கள் இந்­தி­யா­விடம் வேண்­டுகோள் விடுக்கத் தவ­று­வ­தில்லை.Biographies & Quotations

சமா­தான உடன்­ப­டிக்­கையைத் தொடர்ந்து மாகாண சபை­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­காக கொண்­டு­வ­ரப்­பட்ட 13 ஆவது திருத்­தத்தைக் கூட மூன்று தசாப்­தங்­க­ளுக்கும் அதி­க­மான  காலம் கடந்த நிலை­யிலும், முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தாமல் இருந்­து­வரும் இலங்கை அர­சாங்­கங்­க­ளிடம் சமஷ்டி முறையின் அடிப்­ப­டையில் தீர்வைக் காண்­பது குறித்து எவ்­வாறு பேச­மு­டியும் என்று ஜெய்­சங்கர் கொழும்பில் தமிழ்க் கட்­சி­களின் தலை­வர்­களைச் சந்­தித்த ஒரு சந்­தர்ப்­பத்தில் வெளிப்­ப­டை­யாக கேள்­வி­யெ­ழுப்­பினார்.

இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­காக உள்­நாட்டில் முன்­னெ­டுக்­கப்­பட்ட எந்­த­வொரு முயற்­சியும் வெற்­றி­பெ­ற­வில்லை. இந்­தி­யாவின் நேரடித் தலை­யீடு இல்­லை­யென்றால் மாகா­ண­ச­பைகள் மூல­மான அதி­காரப் பகிர்வு ஏற்­பாடு கூட வந்­தி­ருக்­காது. அவ்­வா­றி­ருந்தும்,  இது­நாள்­வரை மாகா­ண­ச­பை­களை பய­னு­று­தி­யு­டைய முறையில் இலங்கை அர­சாங்­கங்­களைக் கொண்டு இயங்­க­வைக்க  இந்­தி­யா­வினால் முடி­ய­வில்லை என்­பதே யதார்த்த நிலை­யாகும். இந்த இலட்­ச­ணத்­தில்  சமஷ்டித் தீர்வைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு இந்­தி­யா­வினால் என்ன செய்ய முடியும்?

ஆனால், அண்மைக் கால­மாக தமிழ்த் தேசியப் பேரவை தமிழ்­நாடு மாநி­லத்தின் ஊடாக புது­டில்­லிக்கு நெருக்­கு­தலைக் கொடுத்து கொழும்பை வழிக்­குக்­கொண்­டு­வர முடியும் என்ற நம்­பிக்­கையில் நட­வ­டிக்­கை­களில் இறங்­கி­யி­ருக்­கி­றது.Politics

2025 டிசம்­பரில் அன்­றைய தமிழ்­நாடு முத­ல­மைச்சர் மு.க. ஸ்டாலி­னையும் மாநி­லத்தின் ஏனைய அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளையும் சந்­தித்த தமிழ்த் தேசியப் பேர­வையின் தூதுக்­குழு இரண்­டா­வது சுற்­றாக கடந்த பல நாட்­க­ளாக  இன்­றைய முத­ல­மைச்சர் ஜோசப் விஜய்­யையும் ஏனைய அர­சியல் தலை­வர்­க­ளையும் சந்­தித்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருக்­கி­றது.

இந்த சந்­திப்­பு­களின் போது  இலங்­கையில் தமிழ் மக்கள்  தற்­போது எதிர்­நோக்கும் பல்­வேறு அர­சியல், மனித  உரி­மைகள் பிரச்­சி­னைகள் குறித்து கலந்­து­ரை­யா­டி­ய­துடன் " ஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்பு முறை ஒழிக்­கப்­பட்டு தமிழர் தேசத்தின் இறை­மையை அங்­கீ­க­ரிக்கும் சமஷ்டி அடிப்­ப­டை­லான அர­சியல் தீர்வின் அவ­சியம் " குறித்து வலி­யு­றுத்­தி­ய­தா­கவும்  தமிழ் தேசிய பேர­வையின் அறிக்­கையில் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

தமிழ்­நாடு எதிர்க்­கட்சி தலைவர் உத­ய­நிதி ஸ்டாலினைச் சந்­தித்த அவர்கள், மாநி­லத்தில் உள்ள அர­சியல் கட்­சி­களை உள்­ள­டக்­கிய பிர­தி­நி­தித்­து­வக்­குழு ஒன்றை அமைத்து இலங்கை இனப் பிரச்­சினை தொடர்பில் ஒரு­மித்த நிலைப்­பாட்டை எடுக்க வேண்டும் என்றும் சர்­வ­கட்சி மகா­நா­டொன்றைக் கூட்ட வேண்டும் என்றும் வேண்­டு­கோளை முன்­வைத்­தார்கள்.

 இலங்­கையில் தமிழ்க் கட்­சிகள் தமிழ் மக்கள் சார்பில் ஒரு­மித்த நிலைப்­பாட்டை முன்­வைக்க இணக்­கத்­துக்கு வர­மு­டி­யாமல் இருக்­கின்ற நிலையில், தமிழ்­நாட்டுக் கட்­சி­க­ளிடம் இவ்­வாறு கேட்­பதில் உள்ள பொருந்­தாத்­தன்­மையை தமிழ்த் தேசியப் பேரவை முதலில் சிந்­தித்துப் பார்க்க வேண்டும்.

இது இவ்­வா­றி­ருக்க, தமிழ்­நாட்டில் இலங்கைத் தமிழர் பிரச்­சினை தொடர்­பி­லான  உணர்­வு­நிலை பல்­வேறு கார­ணி­களின் விளை­வாக " தணிந்து போயி­ருக்­கின்ற " இன்­றைய கால­கட்­டத்தில் மீண்டும் அவர்­களை " தட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு " தமிழ் தேசிய பேரவை முன்­னெ­டுக்­கின்ற முயற்­சிகள் எந்­த­ள­வுக்கு பயன்­தரும் என்­பதும் பிர­தமர் நரேந்­திர மோடியின் அர­சாங்­கத்­துக்கு நெருக்­கு­தலைக் கொடுக்­கக்­கூ­டி­ய­தாக முத­ல­மைச்சர் ஜோசப் விஜய் உட்­பட மாநில அர­சியல் சக்­திகள் இயக்கம் ஒன்றை முன்­னெ­டுக்க அக்­கறை காட்­டுமா என்­பதும் முக்­கி­ய­மான கேள்­விகள்.Language Resources

தங்­க­ளது  கோரிக்­கைகள் தொடர்பில்  உள்­நாட்டில் ஜன­நா­யக ரீதி­யான மக்கள் இயக்கம் ஒன்றை முன்­னெ­டுக்­கா­மலும்   முதலில் அர­சாங்­கத்தை அணு­கா­மலும் தமிழ்­நாட்டில் ஆத­ரவைத் திரட்­டு­வதில் உள்ள பொருத்­தப்­பாடு குறித்து  தமிழ்த் தேசியப் பேரவை  முதலில் தெளி­வு­ப­டுத்த வேண்டும். வடக்கு,கிழக்கில் எந்­த­வி­த­மான அர­சியல் இயக்­கத்­தையும் முன்­னெ­டுக்­காமல் தமிழ்­நாட்டு அர­சியல் சக்­தி­களின் ஒரு­மைப்­பாட்டை நாடு­வ­தனால் மாத்­திரம் எதைச் சாதிக்க முடியும்?

இலங்கைத் தமிழ்க் கட்­சிகள் இந்­தி­யாவின் உத­வி­யையும் ஆத­ர­வையும் கோரு­வது என்­பது வர­லாற்று ரீதி­யாக ஆழ­மாக வேரூன்­றிய ஒரு தந்­தி­ரோ­பா­ய­மாகும். ஆனால், இன்­றைய சூழ்­நி­லையில் அது சிக்­க­லான புவிசார் அர­சியல் மற்றும் உள்­நாட்டு வரம்­பு­களைக் கொண்ட ஓர் அணு­கு­மு­றை­யாகும்.

இனப்­பி­ரச்­சி­னையில் முறை­யான ஓர் உடன்­ப­டிக்கை அடிப்­ப­டை­யி­லான "அதி­கா­ர­பூர்வத் தகு­தியை" கொண்­டி­ருக்கும் ஒரே­யொரு  வெளி­நாடு இந்­தியா மாத்­திரம் என்­பதே தற்­போது தமிழ்க் கட்­சிகள் புது­டில்­லியை நோக்கிப் பார்ப்­ப­தற்­கான முதன்­மை­யான கார­ணி­யாகும். 1987 ஜூலை சமா­தான உடன்­ப­டிக்கை கார­ண­மாக கொழும்­புக்கு  நெருக்­கு­தலைக் கொடுப்­ப­தற்கு அல்­லது நல்­லெண்­ணத்தைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு இந்­தி­யா­வுக்கு " கடப்­பாடு" இருப்­ப­தாக தமிழ்க் கட்­சிகள் நம்­பு­கின்­றன.Campaigns & Elections

ஆனால், மாகா­ண­சபை தேர்­தல்­களை நடத்­து­வ­துடன் 13 ஆவது திருத்­தத்­தையும் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு அவ்­வப்­போது இலங்கை அர­சாங்­கங்­க­ளிடம் வேண்­டுகோள் விடுப்­பதை தவிர, வேறு எந்­த­வி­த­மா­கவும் அந்த " கடப்­பாட்டை " புது­.டில்லி நோக்­கு­வ­தாக தெரி­ய­வில்லை. அது விட­யத்தில் நெருக்­கு­தலைப் பிர­யோ­கிப்­ப­தற்கு மோடி நிரு­வாகம் முன்­வரும் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

சமா­தான உடன்­ப­டிக்­கைக்கு கொழும்பைப் பொறப்­புக்­கூற வைப்­ப­தற்கு இந்­தி­யாவின் பாத்­தி­ரத்தை முன்­னி­றுத்­து­வது தமிழ்க் கட்­சி­களைப் பொறுத்­த­வரை, இயல்­பான ஒரு தந்­தி­ரோ­பா­ய­மாக இருந்­தாலும் கூட, முழு­மை­யான சமஷ்டிக் கட்­ட­மைப்பை இந்­தியா பெற்­றுத்­தர வேண்டும் என்ற கோரிக்­கையின் நடை­முறைச் சாத்­தியத் தன்மை பற்றி சிந்­திக்க வேண்டும்.

தமிழ்த் தேசி­யத்தின் சுய­நிர்­ணய உரி­மையை அங்­கீ­க­ரிக்கும் ஒரு சமஷ்டி கட்­ட­மைப்பை தமிழ் கட்­சிகள் கோரு­கின்ற போதிலும், இந்­தி­யாவின் வெளி­யு­றவுக் கொள்கைக் கட்­ட­மைப்பு இந்த கோரிக்­கை­யுடன் ஒத்­துப்­போ­க­மு­டி­யாத தெளி­வான வரம்­பு­களைக்  கொண்­டி­ருக்­கி­றது. இந்­தி­யாவே மிகவும் வலு­வான மத்­திய அரசைக் கொண்ட ஓர­ளவு சமஷ்டி மாதி­ரியில்  (மாநி­லங்­களின் ஒன்­றியம்)  இருக்கும் நிலையில்,  தனது சொந்த எல்­லைக்குள் மாநி­லங்­க­ளுக்கு வழங்கத் தயங்கும் தன்­னாட்­சியை அயல்­நாடு ஒன்றில் ஒரு முழு­மை­யான சமஷ்டி அமைப்­பாக வற்­பு­றுத்­து­வ­தற்கு புது­டில்லி முன்­வரும் என்று எவ்­வாறு எதிர்­பார்க்க முடியும்?

தங்­க­ளது அதி­கா­ரங்­களை மோடி நிரு­வாகம் பறித்­தெ­டுக்­கி­றது என்ற குற்­றச்­சாட்டை தமிழ்­நாடு உட்­பட பல மாநில அர­சாங்­கங்கள் அண்­மைக்­கா­ல­மாக முன்­வைத்து வரு­வ­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.இலங்கை வணிகம்

1980 களில் செய்­ததைப் போன்ற இரா­ணுவ பலத்­துடன் கூடிய தலை­யீட்டு இரா­ஜ­தந்­திரக் காலம் எப்­போதோ கடந்து விட்­டது. இன்று இலங்­கையைப் பொறுத்­த­வரை, புது­டில்­லியின் முதன்மை நோக்கம் இந்­தி­யாவின் கடல்­சார்­மற்றும் மூலோ­பாய  நலன்­களை மதிக்கும் நிலை­யா­னதும் நட்­பு­ற­வா­ன­து­மான அர­சாங்­கத்தைப் பேணிப் பாது­காப்­ப­தாகும். தமிழர் விவ­கா­ரத்தில் கொழும்பு அர­சாங்­கத்­துக்கு மித­மிஞ்­சிய நெருக்­கு­தலைக் கொடுப்­பது கொழும்பை இந்­தி­யா­வுக்கு விரோ­த­மான வல்­லா­திக்க நாடு­களின் குறிப்­பாக, சீனாவின்  பிடிக்குள் தள்­ளி­விடும் என்று புது­டில்லி நம்­பு­கி­றது.

தென்­னி­லங்கை அர­சியல் சூழலில், "சமஷ்டி " என்ற சொல் நாட்டுப் பிரி­வி­னைக்­கான முதற்­ப­டி­யா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது. அதனால், கடு­மை­யான சிங்கள தேசியவாத எதிர்ப்பைக் கிளப்பி, இராஜதந்திர ரீதியான எந்தவொரு முன்னேற்றத்தையும் முடக்கிவிடக்கூடிய அணுகுமுறையை இந்தியா ஒருபோதும் கடைப்பிடிக்காது என்று நம்பலாம்.

இந்த கருத்துக்களை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தமிழ்நாட்டு அரசியல் சக்திகளினதும் மக்களின் ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் மீண்டும் பெறும் நோக்குடன் தமிழ்த் தேசியப் பேரவை மேற்கொண்டு வருகின்ற  முயற்சிகளை மலினப்படுத்தும் எண்ணத்தில் முன்வைக்கப்படுபவையாக வியாக்கியானம் செய்ய வேண்டியதில்லை. அந்த பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளினதும் குழுக்களினதும் தலைவர்கள் சரியானது என்று தங்களுக்கு தெரிகின்ற தந்திரோபாயத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.

ஆனால், 1983 கறுப்பு ஜூலைக்கு பின்னரான காலப்பகுதியில் இன்று வரை  இனப்பிரச்சினையில் தமிழ்நாட்டு அரசியல் சக்திகளின் ஆதரவினதும்  இந்தியாவின் ஈடுபாட்டினதும் மட்டுப்பாடுகள் பற்றியும் அவற்றினால் அடையக்கூடியதாக இருந்த விளைவுகளைப் பற்றியும் ஒரு தெளிவு இருப்பது அவசியமாகும்.

இந்தியாவின் முன்னைய ஈடுபாட்டை தமிழர் தரப்பு கையாண்ட முறையின் விளைவாக தோன்றிய நிலைவரம் பற்றியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ் தேசிய பேரவையின் அண்மைக்கால முயற்சிகளுக்கு பிறகு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அரசாங்கமும் மாநில அரசியல் சக்திகளும் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப் போகின்றன என்பது முக்கியமானது. அடுத்துவரும் நாட்களில் அதை அறியக்கூடியதாக இருக்கும்.Geographic Reference

தற்போதைக்கு குறைந்தபட்சம்  இலங்கையில்  மாகாணசபை தேர்தல்களை நடத்தி 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்குமாறு மோடி அரசாங்கத்தை வலியுறுத்துவராக  இருந்தால் அதுவே பெரிய விடயமாக  இருக்கும். நாம் ஒன்றுமே செய்யாமல் எமக்கு எவரும் வாங்கித் தருவதல்ல சமஷ்டி.

வீரகத்தி தனபாலசிங்கம்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!