'நாளைக்கு வா என்றவர்; நாய் கூண்டில்'
25 Mar, 2026
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பாடசாலை சீருடைகள் விநியோகம்
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜீ.எஸ். நாலக களுவெவ தெரிவித்தார். நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான சீருடைகள் தற்போது போதுமான அளவில் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், புதிய கல்வி சீர்திருத்தங்களின் அடிப்படையில் பாடசாலைகளில் முதலாம் கட்ட வகுப்புகள் 29ஆம் திகதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய கல்வி சீர்திருத்தங்களின்படி முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு முறையான கற்பித்தல் நடவடிக்கைகள் 21ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Leave a Reply
Write the comments...............