94 வயது முன்னாள் அதிபர் மீது கொலைக் குற்றச்சாட்டு - கியூபா மீது பிடியை இருக்கும் அமெரிக்கா!
21 May, 2026
ஆனால், இதுவரை மொஜ்தபா காமேனி, இஸ்ரேல் - அமெரிக்கா தேடும் மற்ற ஈரானிய தலைவர்களோ யாருமே சிக்கவில்லை.
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதலில் மொஜ்தபா காமேனி காயமடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின, டொனால்ட் டிரம்ப் கூட அதையே கூறினார்.
அப்படியிருக்க, அவர் சிகிச்சைக்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ரஷ்யாவுக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளிவந்தன.
லீக் செய்யப்பட்ட ஆடியோ
இஸ்ரேல் - அமெரிக்கா உச்சபட்ச தலைவரின் குடியிருப்பு வளாகத்தில் நடத்திய தாக்குதலில் அயாத்துல்லா அலி காமேனி, அவரது மனைவி, மகள், மருமகன், பேத்தி மற்றும் மொஜ்தபாவின் மனைவி, ஈரானிய உயர் அதிகாரிகள் என இத்தனை பேரும் உயிரிழந்த நிலையில் மொஜ்தபா எப்படி உயிருடன் தப்பித்தார்? என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருந்தது. இதுகுறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதை விரிவாக இங்கு காணலாம்.
உயர் மட்ட கூட்டத்தில் ஈரானிய அதிகாரிகள் பேசும் ஆடியோ தற்போது லீக் ஆகியிருப்பதாக என The Telegraph தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது, வேண்டுமென்றே அந்த ஆடியோவை ஈரானிய அதிகாரிகள் லீக் செய்திருப்பதாக தெரிகிறது.
அந்த ஆடியோவில், உச்சபட்ச தலைவரின் வளாகத்தில் ஏவுகணை தாக்குதல் நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்தான் மொஜ்தபா அங்கிருந்து வெளியேறியிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leaked audio reveals Iran's new leader Mojtaba Khamenei narrowly evaded
மொஜ்தபா காமேனி தப்பியது எப்படி?
"மொஜ்தபா ஏதோவொன்றை செய்வதற்காக வளாகத்தின் முற்றத்திற்கு வெளியே சென்றுவிட்டு திரும்ப வேண்டும் என்பதே இறைவனின் கட்டளையாக இருந்தது.
ஏவுகணையால் கட்டடத்தை தாக்கியபோது அவர் வெளியே மாடிப் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்தார்" என்று கமேனியின் அலுவலகத்தின் நெறிமுறைத் தலைவர் மஸாஹர் ஹொசைனி, ஈரானிய அதிகாரிகளிடம் தனிப்பட்ட சந்திப்பில் கூறியதாக The Telegraph செய்தி வெளியிட்டுள்ளது.
மொத்தம் மூன்று ஏவுகணை
ஈரானின் முக்கிய வளாகத்தின் மீதான அந்த தாக்குதலில் குறைந்தது மூன்று ஏவுகணைகள் தாக்கியதாக லீக்காகியிருக்கும் ஆடியோவின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
ஒரு ஏவுகணை அலி காமேனி இருந்த பகுதியை தாக்கியதாகவும், மற்றொன்று மேல் தளத்தில் இருக்கும் மொஜ்தபாவின் இல்லத்தை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மொஜ்தபாவும், ஹொசைனியும் காலில் சிறு காயத்துடன் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
ஈரானின் ராணுவத் தளபதி முகமது ஷிராசி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டது குறித்தும் அந்த ஆடியோவில் விவரிக்கப்பட்டிருந்தது.
"அவர் துண்டு துண்டாக சிதறிப்போனார். அவரிடமிருந்து அவர்களால் எதையும் கண்டறிய முடியவில்லை. இறுதியில் அவர்கள் சில கிலோ எடையுள்ள சதையை கண்டுபிடித்து, அதை அவருடைய உடல் என்று அடையாளம் கண்டனர்" என ஆடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவர்புல் ஏவுகணை
மூன்றாவது ஏவுகணை மொஜ்தபாவின் மைத்துனர் மிஸ்பா அல்-ஹுதா பகேரி கானியின் இல்லத்தின் மீது தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஏவுகணை மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால், அது வேகமாக கீழே விழுந்து, அவரின் தலையை பாதியாக வெட்டியது" என்று அதில் ஹொசைனி பேசியிருக்கிறார்.
அயாத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டது மட்டுமின்றி, மொஜ்தபா அலி காமேனி உயிர் தப்பித்தது குறித்தும் இந்த ஆடியோவில் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!