news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாரைத் துரத்­து­கி­றது விசா­ரணை?

23 Jun, 2026
பயங்­க­ர­வாத தடைச் சட்டம் இப்­போது ராஜபக் ஷ குடும்­பத்­தையும்  துரத்தத் தொடங்கி விட்­டது.

அது துரத்­து­கி­றதோ இல்­லையோ, அவர்கள் ஓடத் தொடங்கி விட்­டார்கள்.

முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜபக்ஷ ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்­குதல் தொடர்­பாக, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தம்மை கைது செய்­வதை தடுத்து உத்­த­ரவு பிறப்­பிக்க  கோரி மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் மனுத் தாக்கல் செய்­தி­ருக்­கிறார். அவர் கைது செய்­யப்­படக் கூடும் என தக­வல்கள் பரவி வரு­கின்ற நிலை­யிலே, அவர் இந்த மனுவை தாக்கல் செய்­தி­ருக்­கிறார்.

ஆனால், அவரை கைது செய்­ய­வுள்­ள­தாக கூறப்­ப­டு­வ­தெல்லாம் வெறும் வதந்தி தான் என்றும்,  குற்றப் புல­னாய்வுப் பிரிவு முறை­யான சாட்­சி­யங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே ஒரு­வரைக் கைது செய்­வதா என்­பதை தீர்­மா­னிக்கும்  என்றும் அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் நளிந்த ஜய­திஸ்ஸ கூறி­யி­ருக்­கிறார்.

கோட்­டா­பாய ராஜபக் ஷ தனக்குத் தானே தொப்­பியை போட்டுக் கொண்டு, நீதி­மன்­றத்தை நோக்கி ஓடி­யி­ருக்­கி­றாரோ தெரி­ய­வில்லை.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­கு­தலின் மூளை­யாக செயற்­பட்­டவர் சுரேஷ் சலே தான் என, அசாத் மௌலா­னாவின் சாட்­சி­யத்தில் கூறப்­பட்­டுள்­ள­தாக, அண்­மையில் நீதி­மன்­றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்­பித்­தி­ருந்தார் பிரதி சொலி­சிற்றர்  ஜெனரல் திலீப பீரிஸ்.

அவரைவிட சூத்­தி­ர­தாரி அல்­லது சூத்­தி­ர­தா­ரிகள் இருப்­ப­தாக கரு­தப்­ப­டு­கின்ற சூழலில், கோட்­டா­பய ராஜபக் ஷ தன்னைக் கைது செய்­யக்­கூ­டாது என உத்­த­ர­விடக் கோரி, நீதி­மன்­றத்தை நாடி­யி­ருக்­கிறார்.

இதற்கு முன்னர் இரா­ணுவப் புல­னாய்வு பிரிவை சேர்ந்த முன்னாள் அதி­காரி கேணல் கெலும் மத்­து­மகே  மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜய­சுந்­தர ஆகி­யோரும் இவ்­வா­றான மனுக்­களை தாக்கல் செய்­தி­ருந்­தனர்.

வருண ஜய­சுந்­த­ரவின் ரிட் மனுவை  நீதி­மன்றம் விசா­ரித்த போது,  அவரை கைது செய்யும் எந்த திட்­டமும் இல்லை என சட்­ட மா அதிபர் தரப்பு கூறி­யதை அடுத்து அந்த வழக்கு முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டது.

கேணல் கெலும் மத்­து­ம­கேயின் மனு 22ஆம் திகதி விசா­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.

அர­ச­ப­ல­னாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே கைது செய்­யப்­பட்ட பின் னர், பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் அவர் நான்கு மாதங்­க­ளுக்கு மேலாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

அவரை வெளியே கொண்டு வரு­வ­தற்கு பல்­வேறு முயற்­சிகள், பிர­சா­ரங்கள், போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தாலும், பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழான தடுப்­புக்­காவல் உத்­த­ரவு அவரை விடு­விக்க முடி­யாத நிலைக்கு தள்­ளி­யி­ருக்­கி­றது.

அவர் ஆபத்­தான நிலையில் உள்ளார், விரைவில் தற்­கொலை செய்து கூடிய நிலையில் இருக்­கிறார், உண்­ணா­வி­ரதம் இருப்­பதால் அவ­ரது உடல் சோர்ந்து கொண்­டி­ருக்­கி­றது, விரைவில் உயி­ரி­ழந்து விடுவேன் என்­பதால்,  கண்ணை தானம் செய்­வ­தற்கும்,  சொத்­துக்கள் தொடர்­பான உயிலை எழுதி வைப்­ப­தற்கும், சட்­டத்­த­ர­ணியை சந்­திக்க கோரி­யி­ருக்­கிறார் என்­றெல்லாம் பிர­சா­ரங்கள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

இவை அனைத்தும் பயங்­க­ர­வாத தடைச் சட்டம் மோச­மாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்­பதை தாண்டி, அவ­ருக்கு எதி­ராக அர­சியல் பழி­வாங்கல் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது,  யாரையோ இலக்கு வைத்து விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்­ப­தையே மையப்­ப­டுத்­தி­யி­ருந்­தன.


சுரேஷ் சலேயை வாய் திறக்க வைப்­பதன் மூல­மாக, கோட்­டா­பய ராஜபக் ஷவை இந்த வழக்கில் சிக்க வைப்­ப­தற்கு, அரச தரப்பு அல்­லது குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு முயற்­சிப்­ப­தாக ராஜபக் ஷவினர் நம்­பு­கி­றார்கள்.

அதன் உச்­சக்­கட்­ட­மா­கவே இப்­போது கோட்­டா­பய ராஜபக் ஷ தன்னை கைது செய்யக் கூடாது என உத்­த­ர­விடக் கோரி, மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தை அணு­கி­யி­ருக்­கிறார். ஏற்­கெ­னவே அவர் வெளி­நாடு செல்­வ­தற்கு நீதி­மன்­றத்­தினால் தடை விதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த தடை விதிக்­கப்­பட்ட பின்னர் தான், சுரேஷ் சலே விவ­காரம் இன்­னமும் தீவிரம் பெற்­றது. இப்­போது அடுத்த கட்­டத்­திற்கு சென்று, ராஜபக் ஷவினர் தங்­களை நீதி­மன்­றத்தின் ஊடாக தற்­காத்துக் கொள்ள முற்­ப­டு­கி­றார்கள்.

இது ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்­குதல் தொடர்­பான விவ­கா­ரத்தில், இவர்­களின் தொடர்­புகள் குறித்த பல்­வேறு ஊகங்­க­ளுக்கு வழி­வ­குத்­தி­ருக்­கி­றது.

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ், கைது செய்­யப்­பட்டால், தடுப்­புக்­காவல் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டால், நீண்ட காலம் வெளியே வர முடி­யாத நிலை ஏற்­படும். பிணையில் வெளி­வர முடி­யாத சூழலும் உரு­வாகும் என்­பது ராஜபக் ஷ வின­ருக்கு நன்­றாகத் தெரியும்.

இந்த சட்­டத்தை பயன்­ப­டுத்தி, பல நூறு பேரை அவர்கள் சிறைக்குள் அடைத்து வைத்­தி­ருந்­தி­ருக்­கி­றார்கள்.

கோட்­டா­பய ராஜபக் ஷ பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்த கால­கட்­டத்­திலும், ஜனா­தி­ப­தி­யாக இருந்த போதும், பெரும் எண்­ணிக்­கை­யான தமிழ் இளை­ஞர்கள் இந்தச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­ப­டு­வ­தற்­கான, தடுப்பு காவல் உத்­த­ரவில் கையெ­ழுத்­திட்­டவர். அதே சட்­டத்தின் கீழ் தனக்கு எதி­ராக தடுப்­புக்­காவல் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­படக் கூடிய சூழல் உரு­வா­கலாம் என்ற அச்சம் அவ­ருக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

அதனால் தான் அதி­லி­ருந்து தப்­பிப்­ப­தற்­கான எல்லா வழி­க­ளையும் அவர்கள் நாடத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

அதே­வேளை,  பயங்­க­ர­வாத தடைச் சட்டம் தவ­றாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது, சட்­டத்தின் ஆட்சி நடக்­க­வில்லை என்று பிர­சா­ரப்­ப­டுத்­தப்­படும் போக்கும் தீவி­ர­ம­டைந்­தி­ருக்­கி­றது.

இதற்­காக மனித உரி­மைகள் ஆணைக்­குழு போன்ற அமைப்­பு­க­ளையும் கூட அவர்கள் தங்­களின் வச­திக்­கேற்ப பயன்­ப­டுத்த முற்­ப­டு­கி­றார்கள்.

பயங்­க­ர­வாத தடைச் சட்டம் தவ­றான நோக்கில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்­பதில் சந்­தேகம் இல்லை. அந்தச் சட்­டமே தவ­றா­னது என்னும் போது, அது எவ்­வாறு சரி­யாக செயற்­ப­டுத்­தப்­படும்?


அதே­வேளை, ராஜபக் ஷ முகாம் கூறு­வது போல, சட்­டத்தின் ஆட்­சியும் இங்கு நடக்­க­வில்லை. சட்டம் சமத்­து­வ­மான முறையில் பயன்­ப­டுத்­தப்­ப­டவும் இல்லை.

சுரேஷ் சலே பயங்­க­ர­வாத தடுப்பு சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கின்ற ஒரு சந்­தேக நபர்.

அவர் குற்றப் புல­னாய்வு பிரிவில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த போது, வழங்­கப்­பட்­டி­ருந்த பல வச­திகள் ஏனை­ய­வர்­க­ளுக்கு கிடைத்­தி­ருக்­கமாட்டா.

இதனை முன்னாள் இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சேகா வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

சுரேஷ் சலேயை தினமும் சந்­திக்க, அவ­ரது மனை­விக்கும் மக­னுக்கும் மக­ளுக்கும் வாய்ப்பு வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், ஆனால், தனது மனைவி தன்னை பார்­வை­யி­டு­வ­தற்கு பல வாரங்கள் போரா­டியே அனு­ம­தியை பெற முடிந்­த­தா­கவும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

அதே­வேளை, தமிழ் இளை­ஞர்கள் வரு­டக்­க­ணக்­காக போராடி கூட, தமது உற­வி­னர்­களை சந்­திக்க முடி­யாத நிலை இருந்­தது.


எங்கு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­பதைக்  கண்­ட­றிய உற­வி­னர்கள், பல ஆண்­டுகள் அங்­கு­மிங்­கு­மாக அலைய நேரிட்­டது.

அதே­வேளை, சுரேஷ் சலேயை அவ­ரது சட்­டத்­த­ரணி தினமும் சந்­திப்­ப­தற்கு அனு­மதி வழங்க வேண்டும் என, குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரிக்கு சுரேஷ் சலேயின் மனைவி கடிதம் அனுப்­பி­யி­ருந்தார்.

தடுப்­பி­லுள்ள ஒரு­வரை சட்­டத்­த­ரணி தினமும் பார்­வை­யிட வேண்­டிய அவ­சியம் இல்லை, அதுவும் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கின்ற போது, வழக்குத் தொடர்­பாக கலந்­து­ரை­யாடும் தேவை இல்லை என்று அந்தக் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

சுரேஷ் சலே தற்­போது கொழும்பு தேசிய மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.Travel Guides & Travelogues

கடந்த காலங்­களில் வெலிக்­கடை சிறைச்­சாலை மருத்­து­வ­ம­னையும் கொழும்பு தேசிய மருத்­து­வ­ம­னையும் கூட, கைது செய்­யப்­பட்ட முக்­கிய பிர­முகர்கள் வச­தி­யாக தங்­கு­வ­தற்­கான இடங்­க­ளாகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

தற்­போ­தைய ஆட்­சி­யிலும் கூட அந்த நிலை நீடிக்­கி­றதா?

சுரேஷ் சலே பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தாலும், அவரை மனைவி தினமும் சந்­திக்க அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இவ்­வா­றான அனு­மதி பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள ஏனை­ய­வர்­க­ளுக்கு கிடைத்­தி­ருக்­கி­றதா? நிச்­ச­ய­மாக இல்லை.

அவர்­க­ளுக்கு  வாரத்தில் ஒரு நாளோ, மாதத்தில் ஒரு நாளோ தான் அதற்­கான வாய்ப்பு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அரச புல­னாய்வு சேவையின் முன்னாள் தலைவர் என்­ப­தற்­காக அவ­ருக்கு இந்த சலு­கைகள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­னவா?

அப்­ப­டி­யானால், பார­பட்சம் காட்­டப்­ப­டு­கி­றது என்­பது தெளி­வா­கி­றது.

சட்­டத்தின் ஆட்­சியோ சமத்­து­வ­மான ஆட்­சியோ நடத்­தப்­ப­ட­வில்லை என்­பது உறு­தி­யா­கி­றது.

சுரேஷ் சலே ஒரு பயங்­க­ர­வாத செயல் ஒன்­றுக்கு மூளை­யாக செயற்­பட்­ட­தா­கவோ, அல்­லது அதற்கு துணை போன­தா­கவோ குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருக்­கிறார்.

பயங்­க­ர­வாத செயல் ஒன்றை செய்­த­தாக குற்­றம்­சாட்­டப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருந்த தமிழ் இளை­ஞர்­க­ளுக்கு இவ்­வா­றான வச­திகள் கிடைத்­தி­ருக்­க­வில்லை.

ஆனால் அரச புல­னாய்வு அமைப்பின் தலை­வ­ராக இருந்து கொண்டே, பயங்­க­ர­வாத செயல் ஒன்­றுக்கு துணை போன­தாக குற்­றம்­சாட்­டப்­ப­டு­கின்ற ஒரு­வ­ருக்கு இவ்­வா­றான வாய்ப்­புகள் கிடைக்­கின்­றன.

பயங்­க­ர­வாத தடைச் சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் விதத்தில் கூட, வேறு­பட்ட கொள்­கைகள் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றன.

சுரேஷ் சலே தனது மடிக்­க­ணினி மற்றும் ஐபோன் கடவுச் சொற்களை வழங்க மறுக்கும் நிலையில் அதனை வெளியிடக்கூடாது என்றும், விடுதலை புலிகள் தொடர்பான பல இரகசியத்  தகவல்களை கொண்டிருக்கின்ற சுரேஷ் சலே அவற்றை வெளிப்படுத்தக் கூடாது எனவும் முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர்  சரத் வீரசேகர கூறியிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு 17 ஆண்டுகள் முடிந்து விட்டன.

இதற்கு பின்னரும் இரகசியமாக பேண வேண்டிய விடயங்கள் என்ன?

அப்படி இருக்கிறது என்றால், அதனை சுரேஷ் சலே தனித்துவமாக, தனது தனிப்பட்ட பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டியது அவசியம் இல்லை.

அவை அரச இரகசியங்களே தவிர, சுரேஷ் சலேயின் தனிப்பட்ட இரகசியங்கள் அல்ல.

தனிப்பட்ட இரகசியங்களாக பாதுகாக்க முற்படுகின்ற விடயங்களை  சுரேஷ் சலே வெளிப்படுத்தக் கூடாது என ஒரு முன்னாள் படை அதிகாரி – முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார் என்றால் அதன் அர்த்தம் என்ன?

நாட்டின் பொலிஸ் கட்டமைப்பை அவர்கள் நம்பவில்லை. எந்த பொலிஸ் கட்டமைப்புக்கு அமைச்சராக இருந்தாரோ அவரே, அதனை நம்பாத நிலையில் இருக்கிறார்.

இது அந்த கட்டமைப்பின் தோல்வி இல்லையா?

சுபத்ரா

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!