news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் நான்கு கடற்தொழிலாளர்கள் காணாமல் போனது – தேடுதல் நடவடிக்கை தீவிரம்

29 May, 2026

யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து கடந்த 27ஆம் தேதி இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள் இன்னும் கரை திரும்பவில்லை.

காணாமல் போனவர்கள் பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த கதிர்காமம் சோதிலிங்கம் (52), சுமியோம்பிள்ளை சுஜிக்குமார் (37), கற்கோவளம் பகுதியை சேர்ந்த பாலச்சந்திரமூர்த்தி இராமகிருஷ்ணன் (54) மற்றும் அவரது மகன் இராமகிருஷ்ணன் ரவிராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடலுக்கு சென்ற பின்னர் தொடர்பு இழந்த நிலையில், தற்போது கடற்படை மற்றும் மீட்பு குழுக்கள் இணைந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கடுமையான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக படகுகள் திசை மாறியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!