மேற்காசியாவில் திடீரென வான்பரப்பு மூடப்பட்டதால் நடுவானில் ஒரு மணித்தியாலம் காத்திருந்த ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானங்கள்
15 Jul, 2026
என்.ஹெச்.எஸ் வைத்தியசாலையில் மருத்துவ உதவியாளரான 47 வயதுடைய பெண்
குழந்தை மீது போர்வை போர்த்தப்பட்டிருந்தது. என்னை பொறுத்தவரை அவள் அப்போதே இறந்துவிட்டாள். அவளை நன்றாக கவனித்த போது, தொண்டையில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
இது பார்க்கும் போது ஒரு அதிர்ச்சியூட்டுவதாகவும் ஒரு காட்டுமிராண்டித்தனமான செயலாகவும் இருந்ததாக கூறியுள்ளார்.
அருகில் வசிக்கும் 55 வயதுடைய மற்றொரு அயலவரான நபர் ஒருவர் கூறுகையில்,
இறந்து கிடந்த சிறுமியின் சடலத்திற்கு சற்று தொலைவில், 12 அங்குலம் கொண்ட கத்தியை அவதானித்தேன்.
முதலில் நான் அவள் தூங்குகிறாள் என்று நினைத்தேன், ஆனால் படுக்கைக்கு அருகில் இரத்தம் தோய்ந்திருந்தது. இதைக் கண்டதால் நாள் முழுவதும் இதை நினைத்து பயத்தால் நடுங்கினேன் என்று கூறியுள்ளார்.
இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள், ஐந்து ஆண்டுகளாக குறித்த குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.
பொலிசார் இந்த சம்பவம் குறித்து கூறுகையில்,
இது தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுதா கருணாநந்தம் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் வேறு யாரையும் சந்தேகத்தில் தேடவில்லை, குடும்பத்தின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தைக்கு பிரேத பரிசோதனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
மகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற சுதா கருணாநந்தம் என்ற தாயாருக்கு ஆண், பெண் என இரண்டு பிள்ளைகள் என்பதால், அழுது கொண்டே ஒடி வந்தது, அவரின் மகனாக இருக்கலாம் என்று என்று கூறப்படுகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!