தென் அமெரிக்க நாடான சிலியில் உணவகம் ஒன்றில் கத்தியுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்களை, ஊழியர்கள் சேர்களால் அடித்து விரட்டிய சம்பவம் நடந்திருக்கிறது.
சிலியின் சாண்டியாகோ நகரில் உள்ள எல் மேசன் டி கிகி (El Meson de Kike) உணவகத்தில் திருடும் நோக்கத்துடன் 4 முகமூடிக் கொள்ளையர்கள் புகுந்திருக்கின்றனர்.
கையில் கத்தியுடன் உணவக ஊழியர்களை அவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். 4 பேரின் மிரட்டலுக்கு அஞ்சாத அந்த உணவக ஊழியர்கள், தைரியமுடன் முகமூடிக் கொள்ளையர்களை எதிர்த்துப் போரிடத் தொடங்கியிருக்கின்றனர்.
Nothing teaches people not to steal like a chair to the face! Restaurant employees fight of robbers in #Chile pic.twitter.com/XyLya6ejhD
— RT (@RT_com) 10 août 2019
உணவகத்தின் சேர்களை எடுத்து அவர்களைத் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதில், பயந்துபோன அந்தத் திருடர்கள் வேகவேகமாக உணவகத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கின்றன. அதில், முகமூடி அணிந்த 4 நபர்களை உணவக ஊழியர்கள் சிலர் சேர்கள் கொண்டு தாக்குகிறார்கள். கொள்ளையர்களை நோக்கி ஊழியர்கள் சேர்களை வீசுகிறார்கள்.
அதில், சில சேர்கள் கொள்ளையர்களைத் தாக்கவும் செய்கின்றன. மரத்தால் செய்யப்பட்ட அந்த சேர்களால் தாக்கப்படும் கொள்ளையர்கள் உணவகத்தை விட்டு ஓடுகிறார்கள்.
அவர்களைத் துரத்திச் செல்லும் ஊழியர்கள், தொடர்ந்து சேர்களை வீசுகிறார்கள். இறுதியில், வெளியில் தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் ஏறி, கொள்ளையர்கள் தப்பிச் செல்வதுபோல் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
”போலீஸாருக்குத் தகவல் கொடுத்தும், அவர்கள் 4 மணிநேரம் கழித்துதான் வந்தார்கள்” –ஜோக்யூன் அபார்கா – உணவக உரிமையாளர்
இந்தச் சம்பவம் குறித்து பேசிய உணவக உரிமையாளர் ஜோக்யூன் அபார்கா (Joaquin Abarca), `முகமூடி அணிந்த 4 பேர் உணவகத்தைக் கொள்ளையடிக்க முயன்றார்கள். ஆனால், இதுதொடர்பாக உடனடியாகப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துவிட்டோம்.
ஆனால், அவர்கள் சம்பவம் நடந்து 4 மணி நேரம் கடந்தே வந்து சேர்ந்தார்கள்” என்று கூறியிருக்கிறார்.
கத்தியுடன் நுழைந்த கொள்ளையர்களுடன் சேர்களுடன் தீரத்துடன் போராடிய உணவக ஊழியர்களை நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.