மேற்கு துருக்கியில் நிலக்கரிச் சுரங்கமொன்றில் இடம்பெற்ற வெடிப்பில் குறைந்தது 230 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த சுரங்கத்துக்குள் எவராவது உயிருடன் சிக்கியிருப்பின் அவர்களுக்கு உதவும் முகமாக அந்த சுரங்கத்துக்குள் ஒட்சிசன் வாயு உட்செலுத்தப்பட்டு வருகின்றது.
மின்சார ஒழுக்கு காரணமாக மின் துண்டிக்கப்பட்டதால் சுரங்கத்திலுள்ள மின்னுயர்த்தி உபகரணங்களை பயன்படுத்த முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி தொழிலாளர்கள் சுரங்க நுழைவாயிலிருந்து 4 கிலோ மீற்றர் தூரத்தில் மேற்பரப்பிலிருந்து 2 கிலோமீற்றர் ஆழத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சுரங்க விபத்து தொடர்பாக பிரதமர் றிசெப் தாயிற் எர்டோகன் அல்பேனியாவுக்கான விஜயத்தை இரத்து செய்து சுரங்க வெடிப்பு இடம்பெற்ற சோமா நகருக்கு விஜயம் செய்யவுள்ளதாக அவரது அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
உயர் பாதுகாப்பு செயற்பாடுகளும் கட்டுப்பாடுகளும் பின்பற்றப்பட்டு வந்த மேற்படி சோமா கோமுர் இஸ்லெட்மெலேரி சுரங்கத்தில் இடம்பெற்ற அனர்த்தம் குறித்து விசாரணையொன்றை முன்னெடுத்துள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
1992 ஆம் ஆண்டு துருக்கியின் கருங்கடல் பிராந்திய நகரான லொங்குல்டக்கிற்கு அண்மையில் இடம்பெற்ற சுரங்க அனர்த்தத்தில் 270 சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகியிருந்தனர்.