Site icon ilakkiyainfo

ராஜீவ் கொலை குற்­ற­வா­ளி­களின் மரண தண்­ட­னையை இரத்து செய்­தது சரியே மத்­திய அரசின் மனுவை தள்­ளு­படி செய்­தது உச்ச நீதி­மன்றம்

முன்னாள் பிர­தமர் ராஜீவ் காந்தி கொலை­செய்­யப்­பட்ட வழக்கில் குற்­றம்­சாட்­டப்­பட்ட பேர­றி­வாளன், சாந்தன், முரு­கனின் மரண தண்­ட­னையை ரத்து செய்­தது சரியே என உச்­ச­நீ­தி­மன்றம் தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது.

அவர்­களின் மரண தண்­ட­னையை இரத்து செய்து வழங்­கிய தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்­திய அரசின் மனுவை உச்­ச­நீ­தி­மன்றம் தள்­ளு­படி செய்­தது.

தலைமை நீதி­பதி தத்து தலை­மை­யி­லான அர­சியல் சாசன அமர்வு மேற்­கண்ட மனுவை தள்­ளு­படி செய்து உத்­த­ர­விட்­டுள்­ளது.

சென்னை உயர்­நீ­தி­மன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு பெப்­ர­வரி 18ஆம் திக­தி­பே­ர­றி­வாளன் உட்­பட 3 பேரின் தூக்கு தண்­ட­னையை இரத்து செய்து தீர்ப்பு வழங்­கி­யது .

நீதி­பதி சதா­சிவம் தலை­மை­யி­லான உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ப­தி­களின் அமர்வு இத் தீர்ப்­பினை வழங்­கி­யி­ருந்­தனர்.

அதா­வது ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்­டப்­பட்­டி­ருந்த பேர­றி­வாளன் உள்­ளிட்­டோ­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த தூக்கு தண்­ட­னையை இரத்து செய்து ஆயுள் தண்­ட­னை­யாக குறைத்து நீதி­ப­திகள் அமர்வு தீர்ப்பு வழங்­கி­யது.

தீர்ப்பை மறு­ஆய்வு செய்யக் கோரிய மத்­திய அரசின் மனுவை 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி தள்­ளு­படி செய்­தது. நீதி­பதி சதா­சிவம் வழங்­கிய தீர்ப்பில் திருத்தம் கோரி மத்­திய அரசு 2014 ஆம்ஆண்டு மே மாதம் மனு தாக்கல் செய்­தது.

இவ் வழக்கை நேற்று விசா­ரணை செய்த உச்­ச­நீ­தி­மன்றம் திருத்தம் கோரும் மத்­திய அரசின் மனு விசா­ர­ணைக்கு உகந்­தது அல்ல என்று கூறி தலைமை நீதி­பதி எச்.எல்.தத்து தலை­மை­யி­லான அர­சியல் சாசன அமர்வு தள்ளுபடி செய்தது.

Exit mobile version