Site icon ilakkiyainfo

பொய் கூறுவதை நிறுத்துங்கள் மோடியை விமர்சித்த ராகுல்!

அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் ராம் கிஷன் கிரேவால் (வயது 70) ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டம் பிரச்சினைக்கு தீர்வுகான வலியுறுத்தி டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

முன்னாள் ராணுவ வீரர் தற்கொலையை கண்டித்து டெல்லி மாநில காங்கிரஸ் சார்பில் நேற்று மாலை டெல்லியில் மெழுகுவர்த்தி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது ராகுல் காந்தி தடுப்புகாவலில் வைக்கப்பட்டார். முன்னதாக நேற்று முன் தினம் இறந்த முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தினரை சந்திக்க முயன்ற போதும் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டர்.

இந்த விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், இன்று  இன்று காங்கிரஸ் தலைமையகத்தில் முன்னாள் ராணுவ வீரர்களை ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி கூறுகையில்,  பிரதமர் பொய் சொல்வதை நிறுத்தவிட்டு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இந்த திட்டம் பணம் பற்றியது அல்ல. நமது வீரர்களின் மரியாதைக்கு பற்றியது.

ராம்கிஷன் குடும்பத்தினர் தாக்கப்பட்டதற்கு மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். பிரதமர் பேசி வரும் ஒரே பதவி ஒரே ஓய்வுதியம் வீரர்களின் ஓய்வூதியம் பற்றியது. ஒன்ரேங்க் ஒன் திட்டம் பற்றியதல்ல.

இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டதாக பிரதமர் கூறுகிறார். பின்னர் ஏன் வீரர்கள் போராடுகின்றனர். உண்மையில் இந்த திட்டம் அமல்படுத்தவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Exit mobile version