Site icon ilakkiyainfo

வெள்ளவத்தையில், காதலியின் அந்தரங்க புகைப்படங்களை ஒரு லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்த இளைஞன்!!

காதலியின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ஒரு லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 6ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை பிரதான நீதவான் மொஹமட் பிஹாயிம் உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.ஹம்பாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த தற்போது வெள்ளவத்தையில் வசிக்கும் பெண் ஒருவரே குறித்த நபர் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

வெள்ளவத்தை பொலிஸாரிடம் அவர் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி பேஸ்புக் பக்கத்தில் குறித்த இளைஞரை இந்த பெண் அடையாளம் கண்டுள்ளார்.

பின்னர் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது.சந்தேக நபரின் மனைவி சிங்கப்பூரில் உயிரிழந்துள்ளதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். பின்னர் அந்த நபருடன் ஏற்பட்ட காதல் காரணமாக அவரை திருமணம் செய்வதற்கு இந்த பெண் இணங்கியுள்ளார்.

எனவே சந்தேக நபரின் கோரிக்கைக்கமைய அவரது புகைப்படங்கள் மின்னஞ்சல் ஊடாக சந்தேக நபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

எனினும் சந்தேகநபர் அந்த புகைப்படத்தில் திருப்தி அடையாமையினால் அந்தரங்க புகைப்படங்களை வழங்குமாறு கோரியுள்ளார். அதனையும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.

சில நாட்களின் பின்னர் சந்தேகநபர் அவருடனான காதல் தொடர்பை முறித்து கொண்டமையினால் காதலியின் புகைப்படங்களை வேறு ஒருவரிடம் வழங்கி ஒரு லட்சம் ரூபாய் பெற்று கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version