Site icon ilakkiyainfo

வவுனியா புளியங்குள விபத்தில் சிறுவன் படுகாயம்

வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

யாழிலிருந்து பதுளை நோக்கி சென்ற இ.போ.ச பஸ் புளியங்குளம் சந்திக்கு அண்மித்த பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் வீதிக்கு ஏறமுற்பட்ட போது பஸ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு பேருந்தினையும், சாரதியையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இதன் போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த 13வயது சிறுவன் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை புளியங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Exit mobile version