யாழ். சாவகச்சேரி, மீசாலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் நேற்று (06) மாலை இவ்விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த வீதி வழியாக கொடிகாமத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியும், எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றும் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
28 வயதுடைய பளையைச் சேர்ந்த சுப்பிரமணியம் ரஜிகரன் என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தை தொடர்ந்து குறித்த தனியார் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான விசாரணையை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.