நடிகை ராகுல் பிரீத் சிங் செல்வராகவனின் ‘7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படத்தின் கன்னட ரீமேக்கான ‘கில்லி’-இல் அறிமுகமானார். தமிழில் ‘தடையறத் தாக்க’ திரைப்படத்தில் அறிமுகமான இவர், கெளதம் கார்த்திக் உடன் ‘என்னமோ ஏதோ’ படத்திலும் தோன்றினார்.
தமிழில் பெரிய அளவில் புகழ் அடையாவிட்டாலும் தெலுங்கு சினிமாவில் இவரது இரண்டாவது திரைப்படமான ‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்’ வெற்றியைத் தொடர்ந்து டோலிவுட்டின் முக்கிய நாயகி ஆனார்.
தொடர்ச்சியாக இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி அடைந்ததில் ராம்சரண் தேஜா, ரவி தேஜா, என்.டி.ஆர் போன்ற முக்கிய நடிகர்களின் ஜோடி ஆகியுள்ளார்.
டோலிவுட் கொண்டாடிவரும் நாயகி ராகுல் பிரீத் சிங்கை அமெரிக்க கலாச்சார அமைப்பு ஒரு நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தாளியாக அழைத்திருந்தனர்.
அந்த நிகழ்ச்சியில் ராகுல் பிரீத் சிங்குடன் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்புபவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த அறிவிப்பினால் தெலுங்கு சினிமாவின் முக்கிய நாயகி அமெரிக்காவிலும் கொண்டாடப்படுவது தெரியவருகிறது.
ராகுல் பிரீத் சிங் தான் நடிக்கும் படங்களுக்கும் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியின் ஐ போனை உடைத்த அஞ்சலி
அஞ்சலி தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘சகலகலா வல்லவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 31-ந் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், இப்படக்குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குனர் சுராஜ் பேசும்போது, அஞ்சலி பற்றிய ரகசியங்கள் அவிழ்த்து விட்டார்.
அவர் பேசும்போது, அஞ்சலிக்கு இந்த படத்தில் அமைதியான கதாபாத்திரம். ஆனால், படப்பிடிப்பு முடிந்து 6 மணிக்கு மேல் இவரது அட்டகாசத்தை ஆரம்பித்துவிடுவார்.
அவருக்கென்று ஒரு சில உதவியாளர்கள் வைத்திருப்பார். அவர்களுடன் சேர்ந்து 9 மணி வரை கிரிக்கெட் விளையாடுவார்.
நாளை படப்பிடிப்பு இருக்கிறது, தற்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்றால் கேட்க மாட்டார். ஒருமுறை சூரி, அவரிடம் கோபமாக பேச, அவரது ஐபோனை அஞ்சலி உடைத்துவிட்டார்.
இப்போது அஞ்சலியிடம் அதற்கான பணம் கேட்டு கெஞ்சி வருகிறார் சூரி என்று பேசினார். இதை மேடையிலிருந்தவாறே ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார் அஞ்சலி.