கிளிநொச்சியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 27 வயதான குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.
குறித்த விபத்து இன்று பிற்பகல் 3.30 மணிளவில் இடம்பெற்றுள்ளது.
இராமநாதன்கமம் கோவிந்தன்கடை சந்தி மருதநகர் பகுதியை செர்ந்த செல்லையா பிரபாகரன் என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சியிலிருந்து காக்காகடைசந்தி ஊடாக வட்டகச்சி செல்லும் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் வந்த உழவுஇயந்திரத்தில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் பின்புறமாக பார்த்தவாறு பயணித்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறித்த பகுதியில் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் மொட்டார் சைக்கிளை செலுத்திய நபரே உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மெற்கொண்டு வருகின்றனர்.