தெமட்டகொடையில் வீடொன்றில் இருந்து 140,000 அமெரிக்க டொலர் உள்ளிட்ட 5 கோடியே 80 இலட்சத்திற்கும் அதிகத் தொகை பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வடக்கு பிராந்திய விசேட வீதித்தடுப்பு பொலிஸ் வீதித்தடை பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் வசமிருந்த 4 கிராம் நிறையுடைய ஹெரோயினும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
55 வயதுடைய சந்தேகநபர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.