நகைக் கடையில் திருட்டு – சி.சி.ரிவியில் சிக்கிய தாய், மகள் உள்பட மூவர் கைது!

வவுனியாவில் அமைந்துள்ள பிரபல நகை கடை ஒன்றில் இருந்து நான்கு இலட்சம் பெறுமதியான நகைகளை சூட்சுமமான முறையில் திருடிய தாய், மகள் மற்றும் மகளின் காதலன் உள்ளிட்ட மூவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதுபற்றி தெரியவருவதாவது,
வவுனியாவில் அமைந்துள்ள பிரபல நகை கடையில் கடந்த 13.11.2020 அன்று நகை வாங்குவதற்காக தாய், மகள் மற்றும் மகளின் காதலன் ஆகியோர் சென்றுள்ளனர்.
இதன் போது கடை ஊழியரினால் அவர்கள் கேட்கும் நகைகளை காட்டியுள்ளார். இவ்வாறு பல நகைகளை பார்த்த குறித்த நபர்கள் கடை ஊழியர் சற்றே அசந்த நேரத்தில் சில நகைகளை எடுத்து மறைத்துள்ளனர்.
பின்னர் தமக்கு பிடித்தமாதிரி நகை இல்லை என தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளர்.
13.11.2020 மாலை நகைகளின் இருப்பு எடுக்கும் பொழுது குறிப்பிட்ட சில நகைகள் இல்லாமையினால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு தலைமையின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் உபபொலிஸ் அதிகாரி உள்ளிட்ட குழுவினர் சி.சி.ரிவி. காட்சிகளுக்கு அமைய அம்பாந்தோட்டை மற்றும் கலாவ பகுதியை சேர்ந்த தாய், மகள் மற்றும் மகளின் காதலன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட முதற் கட்ட விசாரணையின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான திருட்டுக்களை மேற்கொண்டிருந்ததுடன் திருடப்பட்ட நகைகளை அடகு வைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment