இன்றைய தினம் 273 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 180 பொலிஸ் அதிகாரிகள் மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இணைக்கப்பட்ட அதிகாரிகள் என பொலிஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 257 ஆகவும், சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 1302 ஆகவும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.