மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் 14 வயது சிறுவன் ஒருவனை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) கைது செய்துள்ளதாகவும் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார தெரிவித்தனர்.
தனது மருமகள் முறையிலான சிறுமியை அதே பிரதேசத்தைச் சோந்த 14 சிறுவன் காதலித்து வந்துள்ளதாகவும் சம்பவதினமான சனிக்கிழமை பகல் 12 மணியளவில்; கிரான்வேம்பு பகுதியிலுள்ள சிறுவனின் சகோதரனின் வீட்டுக்குச் சிறுமியை அழைத்துச் சென்று அங்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது தெரிவித்தனர்
இந்தச் சம்பவம் தொடர்பில் சிறுமி உறவினரிடம் தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த சிறுவனை பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிறுவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்