இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மாஸ்க் அணிவிக்க வேண்டாம் என்றும், மாஸ்க் அணிவதால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம் என்றும் ஜப்பான் குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் கூறியுள்ளது.
குழந்தைகளின் மூச்சுக்குழாய் மிக மெல்லியதாக இருக்கும் என்றும், மாஸ்க் மூலம் மூச்சு விடுவதன் மூலம் அவர்களின் இதயம் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகும் என்றும் அந்த மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.
இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகள் மாஸ்க் அணியக்கூடாது என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையமும் கூறியுள்ளது.