தமிழ் மக்கள் தங்கள் அர­சியல் போராட்ட வர­லாற்றில் தவ­றிய சந்­தர்ப்­பங்கள், இழக்­கப்­பட்ட வாய்ப்­புக்கள் அதி­க­மா­னவை. தீர்க்­க­மற்ற கொள்­கைகள் யதார்த்­த­மற்ற   நடத்­தைகள் தூர­நோக்­கற்ற முடி­வுகள் என்­ப­வையே இவ்­வ­கை­யான    இழப்­புக்­க­ளுக்கும் தோல்­வி­க­ளுக்கும் அடிப்­ப­டை­யான காரணங்களாக  இருந்­தன என்­பது சில விமர்­சன ரீதி­யான அபிப்­பி­ரா­யங்­க­ளாகும்.

அவ்­வ­கை­யான ஒரு நல்ல சந்­தர்ப்­பத்­தையே வட­மா­காண முதலமைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் இழந்­துள்ளார் என்று கடு­மை­யாக விமர்­சிப்­பதை கேட்டுக் கொண்­டி­ருக்­கின்றோம்.

இந்த விமர்­ச­னங்­களும் கண்­ட­னங்­களும் எதை நோக்கி வந்து கொண்­டி­ருக்­கின்­றன என்­பது நாம் அறிய முடி­யாத ஒரு சிதம்­பர இரக­சி­ய­மல்ல.

இந்­தி­யாவின் 14 ஆவது பிர­த­ம­ராக பத­வி­யேற்­றுள்ள   நரேந்­திர மோடியின் பத­வி­யேற்பு வைப­வத்­திற்கு  இலங்கை சார்பில் தனது தலை­மையில் செல்லும் குழு­வுடன் இணைந்து கொள்­ளும்­படி ஜனா­தி­பதி விடுத்த அழைப்பை வட­மா­காண முதல மைச்சர் நிரா­க­ரித்­தமை தவறு.

கிடைக்­கப்­பெற்ற வாய்ப்பை வட மாகாண  முதலமைச்சர்   தவ­ற­விட்டு விட்டார் என பல திசை­க­ளி­லி­ருந்தும் விமர்­ச­னக் ­க­ணைகள் வீசப்­ப­டு­கின்­றன.

தான் ஏன்? ஜனா­தி­ப­தியின் அழைப்பை நிரா­க­ரித்தேன் என்­ப­தற்கு முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் பின்­வ­ரு­மாறு பதில் அளித்­தி­ருந்தார்.

தங்கள் அழைப்பை நான் ஏற்றுக் கொண்டால் மத்­திய அர­சாங்­கத்­துக்கும் மாகாண அர­சுக்­கு­மி­டையில் மிக வலு­வான ஐக்­கியம் இருப்­ப­தாக இது எடுத்துக்காட்டும் இந்த நிலை உண்மை நிலையை மறைப்­ப­தாக அமைந்­து­விடும் என்று வட­மா­காண முதலமைச்சர் விக்­னேஸ்­வரன் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரி­ஸுக்கு அனுப்­பிய கடி­தத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.

sampanthanவிக்­னேஸ்­வ­ர­னுக்கு ஜனா­தி­ப­தியால் விடுக்­கப்­பட்ட அழைப்புப் பற்றி கருத்துத் தெரி­வித்த தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் பின்­வ­ரு­மாறு கூறி­யி­ருந்தார்.

வட மாகாண முதலமைச்சர் விக்­னேஸ்­வ­ரனை முத­ல­மைச்சர் போல் அர­சாங்கம் இது­வரை நடத்­த­வில்லை. அவரை தொடர்ந்தும் உதா­சீனம் செய்தே வரு­கி­றது.

இந்த நிலையில் தமது குழுவில் இணைந்து இந்­தி­யா­வுக்கு வரு­மாறு முத­ல­மைச்­ச­ருக்கு அழைப்பு விடுக்க ஜனா­தி­ப­திக்கோ அர­சாங்­கத்­துக்கோ   எந்­த­வித உரி­மையோ அரு­க­தையோ இல்­லை­யென்று வெட்­டொன்று துண்டு இரண்­டாக கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் கூறி­யி­ருந்தார்.

thineskunavarthanaஇதே­வேளை விக்­னேஸ்­வரன் அழைப்பை நிரா­க­ரித்­தமை தொடர்­பாக ஆளும் கட்­சியின் பிர­தம கொற­டாவும் அமைச்­ச­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன இவ்­வாறு தெரி­வித்­தி­ருந்தார் நரேந்­தி­ர­மோ­டியின் பத­வி­யேற்பு வைப­வத்தில் கலந்து கொள்­வ­தற்­கான ஜனா­தி­ப­தியின் அழைப்பை வட­மா­காண முதலமைச்சர்  நிரா­க­ரித்­ததன் ஊடாக கூட்­ட­மைப்பின்   உண்­மை­யான குணத்தை இந்­தியா புரிந்து கொண்­டி­ருக்­கு­மென மறை­மு­க­மாக சாடி­யி­ருந்தார்.

இலங்கை தமிழ் மக்­களின் அர­சியல் போராட்­ட­மென்­பது ஆறு தசாப்­தங்­களைக் கடந்து பல்­வேறு பரி­மா­ணங்­களைப் பெற்று ஒவ்­வொரு காலத்­திலும் ஒவ்­வொ­ரு­வி­த­மான முரண்­பா­டு­க­ளுடன் இணைந்து வளர்ச்சி கண்ட விவ­கா­ர­மா­கவே பார்க்­கப்­பட வேண்டும்.

இலங்­கையின் அர­சியல் வர­லாற்றுப் போக்கில் தேசிய முரண்­பாடு என்ற வகையில் சிறு­பான்மை சமூ­க­மான தமிழ் மக்­க­ளுக்கும் பெரும்­பான்மைச் சமூ­க­மென்று அதி­கா­ரத்தால் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற சிங்­கள மக்­க­ளுக்­கு­மி­டை­யி­லான அர­சியல் பொரு­ளா­தார சமூக முரண்­பா­டுகள் உடைப்­பெ­டுத்து ஓடத் தொடங்­கிய 1956ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யி­லி­ருந்து நோக்­கு­வோ­மாயின்…….

இந்த இரு சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான விரி­சல்­களும் அர­சியல் சார்ந்த பரி­ணாமம் பெறு­வ­தற்கு அடிப்­ப­டை­யாக இருந்­தவை சமூக வள பங்­கீட்டுப் பிரச்­சி­னை­யென பொரு­ளா­தார அறி­ஞர்­க­ளாலும் அர­சியல் விற்­பன்­னர்­க­ளாலும் சுட்டிக் காட்­டப்­ப­டு­வது வழக்கம்.

இலங்­கையின் சுதந்­தி­ரத்­துக்­குப்பின் வட கிழக்கு நோக்­கிய திட்­ட­மி­டப்­பட்ட குடி­யேற்­றங்கள் தொழில் வாய்ப்பில் சம­மின்மை மொழி ரீதி­யான திணிப்­புக்கள் கல்வி உயர்­கல்வி ஆகி­ய­வற்றில் ஓரங்­கட்­டி­யமை மதம் சார்ந்த மேலா­திக்கம் போன்ற இன்­னோ­ரன்ன (மூல) கார­ணிகள் தமிழ் மக்­க­ளுக்கும் பேரின சமூகத்­துக்கும் அர­சியல் தலை­மைத்­து­வங்­க­ளுக்­கு­மி­டையில் முரண்­பா­டு­களை ஊட்டி விட்­டன.

இதன் கார­ண­மா­கவே தமிழ்ச் சமூகம் தேசியப் போக்­குடன் ஒட்டிக் கொண்ட சந்­தர்ப்­பங்கள் மிக மிக குறை­வா­கவும் சில வேளை­களில் இல்­லா­மலும் இருந்தி­ருக்­கி­றது.

ஒரு சில காலங்­களில்   ஜி.ஜி.பொன்­னம்­பலம்    மற்றும் இடதுசாரி சிந்­தனை கொண்­ட­வர்கள் தேசிய அர­சி­ய­லோடு கைகோர்த்துக் கொண்டு போக எத்­த­னித்த போதும் அவை­யெல்லாம் ஏமாற்­றப்­ப­தி­வு­க­ளா­கவே இருந்­துள்­ளன.

காரணம் தேசிய அர­சி­ய­லுக்கோ கட்­சிக்கோ தலைமை தாங்கிக் கொண்ட பேரின அர­சியல் தலை­வர்கள் பருவ காலத்­துக்கு ஏற்ற முறையில் தமிழ் சமூகத்தையும்  அது சார்ந்த தலை­மைத்­து­வத்­தையும் இணைத்துக் கொள்­வோ­மென போக்­குக்­காட்டி தமது ஆட்­சியை தக்க வைத்தோ அல்­லது அலங்கரித்­தார்­களே    தவிர   தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­க­ளையோ சுய­நிர்­ணய உரி­மை­க­ளையோ தமிழ்த் தேசி­யத்­தையோ ஏற்றுக்கொண்டவர்களாகவோ அங்­கீ­க­ரித்­த­வர்­க­ளா­கவோ காணப்­ப­ட­வில்லை.

SirponramanathanSir Ponnambalam Ramanathan 

சுதந்­திரப் போராட்ட காலத்தில் சுதந்­தி­ரத்தைக் கூடிப் பெற சேர் பொன் இராம­நாதன், சேர்.பொன்.அரு­ணா­சலம் என்ற மூத்த தலை­வர்கள் உடன்­பாட்டுப் போக்குக் கொண்­ட­வர்­க­ளா­கவே காணப்­பட்­டனர்.

இலங்கை தேசிய காங்­கிரஸ் உரு­வாக்­கப்­பட்ட காலத்­தி­லி­ருந்து (19.11.1919) மறு­சீ­ர­மைப்­புக்­கான தமி­ழர்­களும் சிங்­க­ள­வர்­களும் இணைந்து முன்­வைத்தனர்.

இத்­தே­சிய காங்­கிரஸ் அமைக்­கப்­பட்டு இரண்டு வரு­டங்கள் முடி­வ­தற்கு முன்­னமே சிங்­கள தமிழ் உறுப்­பி­னர்­க­ளுக்கு இடையே பிளவு ஏற்­பட்­டது. இதன் கார­ண­மாக 1921 ஆம் ஆண்டில் சேர் பொன் அரு­ணா­ச­லமும்    பல தமிழ்த்­த­லை­வர்­களும் அதி­லி­ருந்து வெளி­யே­றி­னார்கள்.

இவ்­வாறு ஆரம்ப கால­மி­ருக்க இலங்­கையின் முத­லா­வது நாடா­ளு­மன்­றத்தில் அமைச்­ச­ர­வையில் தமி­ழர்­களின் சார்பில் வவு­னியா சி.சுந்­த­ர­லிங்கம் மன்னார் சி.சிற்­றம்­பலம்  ஆகியோர் அமைச்­சர்­க­ளாக இருந்து செயற்­பட ஆரம்­பித்த போதும் தேசிய அர­சி­யலில் உடன்­பாடு காண­மு­டி­யாத சந்­தர்ப்பங்களும்   இந்­திய பாகிஸ்­தா­னிய பிரஜா உரிமைச் சட்டம் 10.12.1948 நாடாளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்டு வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்­ட­போது….

தேசிய அர­சி­ய­லுடன் உடன்­பட்­டுப்­போக வேண்­டு­மென்ற ஒரே கார­ணத்­துக்­காக ஜி.ஜி.பொன்­னம்­பலம் ராம­லிங்கம் மற்றும் கன­க­ரத்­தினம் ஆகிய மூவரும் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­மைக்­காக   வாங்­கிய வசை மொழி­க­ளெல்லாம்  தோற்றுப் போன    சந்­தர்ப்­பங்­க­ளையே சுட்டிக் காட்­டு­வ­ன­வாக அமை­கின்­றன.

இது போலவே    ஈழத்­த­மி­ழர்­களின் இரண் டாம்  கட்ட அர­சி­ய­லான 1956 ஆம் ஆண்­டுக்குப் பின்­னைய அர­சி­யலில் பண்டா– செல்வா உடன்­ப­டிக்கை 27.7.1957 டட்லி– செல்வா உடன்­ப­டிக்கை (24.03.1965) வெற்றி காணப்­ப­டாத ஒப்­பந்­தங்­க­ளா­கவும்…,

1965 ஆம் ஆண்டு டட்லி சேன­நா­யக்க தலை­மையில் அமைக்­கப்­பட்ட   ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்தில் தமிழ் அரசுக்­கட்­சி­யினை பிரதிநிதித்துவப்படுத்தி    திருச்­செல்வம் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பத­வியை ஏற்றுக் கொண்டு   உடன்­பட்டுப் போன­வை­யெல்லாம்  இழக்­கப்­பட்ட சந்­தர்ப்­பங்­க­ளாக பார்க்­கப்­ப­டு­கி­றதா அல்­லது ஏமாற்­றப்­பட்ட சந்­தர்ப்­பங்­க­ளாக கணிக்­கப்­படுகிறதா என்­ப­தெல்லாம் வாச­கர்­களே தீர்­மா­னிக்க வேண்டும்.

அகிம்சை வாத அர­சியல் போக்­கி­லி­ருந்து ஆயுதப் போராட்ட வர­லாற்­றுக்கு இலங்கை தமிழர் பிரச்­சினை மாறி­கொண்ட இரண்டாம் கால கட்­ட­மான 1983 ஆம் ஆண்­டி­லி­ருந்து முள்­ளி­வாய்க்கால்  முடிவு வரை    திம்பு பேச்­சு­வார்த்தை (08.07.1985) இலங்கை – இந்­திய ஒப்­பந்தம் (29.07.1987) மற்றும் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை என்ற வட்­டத்­துக்குள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வாக்கம் (27.01.2002) உடன்­ப­டிக்கை கைச்­சாத்து.

(22.02.2002) பிர­பா­கரன் – ஹக்கீம் உடன்­ப­டிக்கை (13.04.2002) தாய்­லாந்து பேச்­சு­வார்த்தை (31.10.2002) (02.11.2002) நோர்வே பேச்­சு­வார்த்தை (24.11.2002) ஐந்தாம் சுற்றுப்   பேச்­சு­வார்த்தை ஜேர்மன் (07.02.2003) ஆறாம்   சுற்று (18.03.2003) ஜப்பான்   இடைக்­கால  அரசு பற்றி ஆலோ­சனை பிரான்ஸ் (20.08.2003) இடைக்­கால   நிர்­வாக யோசனை   நோர்வே ஊடாக அர­சுக்கு கைய­ளிப்பு (31.10.2003) என…….

நீண்ட மெகாத்­தொடர் போன்ற எல்­லாச்­சந்­தர்ப்­பங்­களும்   இழக்­கப்­பட்ட சந்­தர்ப்­பங்­க­ளாக    கருத முடி­யுமா என்­பது விமர்­சன பூர்­வ­மாக நோக்­கப்­பட வேண்டிய நிகழ்­வு­களும்   பதி­வு­களும்   தற்­பொ­ழுது   ஒரு பள்ளிக் கூடச் சிறு­வனைப் போல மூன்றாம்   கால பருவச் சோத­னைக்­காக    தமிழ் மக்கள் தங்களைத் தயார்ப்­ப­டுத்த வேண்­டிய கால வட்­டத்­துக்குள் தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு சார்ந்த போராட்­டங்கள் கொண்டு வரப்­பட்­டி­ருக்­கி­றது என்று கூறப்­ப­டு­கி­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கூறி வரு­வது போல் ராஜ­தந்­திரப் போராட்ட குரு­ஷேத்­தி­ரத்­துக்குள் அணி­வ­குத்து நிற்கும் படை­க­ளாக நாம் ஆக்கப்பட்டிருக்கிறோம்.

இந்த போராட்­டத்தில் யார் வெல்லப் போகி­றார்கள் என்ன வியூகம் வகுக்­கப்­ப­டு­கி­றது என்­ப­தெல்லாம் பரம இரக­சி­யங்­க­ளாக இருக்­கப்­போ­வ­தில்லை. கடந்த காலங்­களில் தவ­ற­வி­டப்­பட்ட சந்­தர்ப்­பங்­களை நிகழ் காலத்தில் நிரப்பிக் கொள்ள கூடிய வாய்ப்­பி­ருக்­கின்­றதா? என ஆராய்ந்து பார்ப்­போ­மானால் அதுவும் பூஜ்­ஜி­ய­மா­கவே தெரி­கி­றது.

முள்­ளி­வாய்க்கால் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­தற்­குப்பின் இலங்­கை­ய­ர­சாங்­க­மா­னது பல்­வேறு வாக்­கு­று­தி­களை அளித்­த­தாக எடுத்துக் காட்டப்ப­டு­கி­றது.

இந்த வாக்­கு­று­தி­களை அளிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ராக சர்­வ­தே­சத்­தையும் குறிப்­பாக இந்­தி­யா­வையும் சுட்டிக் காட்­டப்­ப­டு­கி­றது. அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களில் பிர­தா­ன­மாகச் சொல்­லப்­பட்­டவை அர­சியல் தீர்வு என்ற விட­ய­மாகும்.

ஏனை­யவை  அதற்குள் உள்­ள­டங்­கி­ய­வையே. ஆனால் யுத்தம் முடிந்து ஐந்­தா­வது வெற்றி விழா­வையும் கொண்­டா­டிக்­க­ளித்து விட்டோம்.  ஆனால் எதுவுமே நடந்த பாடு­மில்லை நகர்ந்த பாடு­மில்லை.

வாக்­கு­று­தி­களை நம்பிக் கொண்ட சர்­வ­தே­ச­மா­யினும் சரி இந்­தி­யா­வாக  இருப்­பினும்  எல்­லா­வற்­றையும்   கிடப்பில் போட்­டு­விட்டு அந்த விவ­கா­ரங்­களை மறந்து போன­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கி­றார்கள்.

இப்­பொ­ழுது நாம் விட்ட தவ­று­களை ஒப்புக் கொள்­கி­றோ­மென பாவ­வி­மோ­சன பரி­கா­ரங்கள் பேசு­கின்­றார்கள்.

தெரி­வுக்­கு­ழு­வுக்கு வாருங்கள் என அர­சாங்­கமும் தெரி­வுக்­கு­ழு­வுக்கு போங்கள் என சர்­வ­தே­சமும் ???????? வந்து விடும் என்ற தோர­ணையில் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுத்­தார்கள்.

கூட்­ட­மைப்­பினர் 14 தட­வை­க­ளுக்கு மேலாக சென்றும் வந்து விட்­டார்கள். எதுவும்   ஈடே­றிய பாட்டைக் காண­வில்­லை­யென்­பதே அவர்­களின் அங்கலாய்ப்­பாக இருக்­கின்­றது.

மீண்டும்  மீண்டும்   ஒரு புள்­ளியைத் தொடு­வதைப் போன்றே   கடந்த 60 வரு­டங்கள்  பேச்­சு­வார்த்தை ஒப்­பந்தம் தீர்வுப் பொதி அர­சியல் தீர்வு என்னும் விட­யங்கள்  செக்­கு­வட்டம் போல்   சுழன்று கொண்­டி­ருக்­கி­றதே தவிர நேர்க்­கோட்டுப் பாதையில் சிறி­து­கூட முன்­னே­றி­யதைக் காண முடி­ய­வில்லை.

இதன் மத்­தியில் தான் வெற்­றி­வி­ழாக்­கொண்­டாட்­டத்தில் பேசிய ஜனா­தி­ப­தி­ய­வர்கள் தெரிவுக் குழு­வுக்கு வர­வில்­லை­யாயின் தீர்வு பற்றி யோசிக்க முடி­யாது என அடித்துக் கூறி­யி­ருக்­கிறார்.

அதே வேளை தெரி­வுக்­கு­ழு­வுக்கு செல்­வ­தனால் எவ்­வித பய­னையும் நாம் அடையப் போவ­தில்லை. அடிப்­ப­டை­யற்­றதும் அடைய முடி­யா­தது பற்­றியும் பேச வரு­கி­றோ­மென  அர­சாங்கம்   உதா­சீனம்  செய்­கி­றது என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் கூறி வரு­கின்­றனர்.

அவ்­வா­றா­ன­தொரு பேச்­சு­வார்த்தை மீண்டும் தொடக்­கப்­பட வேண்­டு­மாயின் சர்­வ­தேச நாடு­களின் அனு­ச­ரணை அல்­லது மேற்­பார்­வையின் கீழே அது நடத்­தப்­பட வேண்டும்.

இதில் அனு­பவம் வாய்ந்த தென்­னா­பி­ரிக்­காவின் உதவி பெறப்­பட வேண்­டு­மெ­னவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் நிபந்­தனை கொண்­டி­ருப்­பதும் கவ­னப்­பா­டு­டைய விட­யங்கள் தான்.

இலங்கை அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை மனந்­தி­றந்­த­வ­கையில் தீர்­வைத்­தரும் இத­ய­சுத்­தி­யோடு அவர்கள் தமிழ்த் தரப்­பி­னரை அழைக்க வேண்டும். பேச்­சுக்கள் ஆரம்­பிக்க  வேண்­டு­மென்ற  பக்க ஞாயமும் வலி­யு­றுத்திக் காட்­டப்­ப­டு­கி­றது.

இன்­றைய மூன்றாம் கட்ட நிலையில் தமிழ் மக்­களால் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிற இறுதி வியூகம் ????? இரண்டு.

ஒன்று இந்­தி­யாவின்  புதிய ஆட்­சியை   ஏற்றுக் கொண்­டி­ருக்­கின்ற நரேந்­திர மோடி தலை­மை­யி­லான புதிய அர­சாங்கம் வலு­வான அழுத்­தங்­களை இலங்கை அர­சாங்­கத்தின் மீது  செலுத்­து­வதன்  மூலம்   இலங்கை   இந்­திய ஒப்­பந்­தத்தின்    பிர­காரம் அமுல் படுத்­தப்­பட வேண்­டிய 13 ஆவது திருத்த சட்­டத்­தினை பூர­ண­மாக நிறை­வேற்­று­வதன் மூலம் நீறு­பூத்த நிலை­யி­லுள்ள இலங்கை இனப்­பி­ரச்­சி­னைக்கு சாசு­வ­த­மற்ற ஒரு தீர்­வை­யா­வது பெற்று விட­லா­மென்­பது.

மற்­றது ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட  தீர்­மா­னத்தின் உட்­கு­டை­வாக இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கும் இழப்­புக்­க­ளுக்கும் சர்­வ­தேசம்  சார்ந்த  ஒரு பரி­கா­ரத்தை கண்டு விட முடி­யு­மென்ற  நம்­பிக்­கை­யி­லேயே  தமிழ்த் தரப்­பினர் காத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

015

இதன் ஒரு ஒளிக்­கீற்­றா­கவே அண்­மையில்   பத­வி­யேற்பு வைப­வத்­துக்கு சென்ற இலங்கை ஜனா­தி­ப­தி­யிடம் இந்­தியப் பிர­தமர் 13 ஆவது திருத்த சட்­டத்­தினை அமுல் படுத்தி உரிய தீர்வு காணப்­பட வேண்டும்   வட கிழக்குப் பகு­தி­களில்  புன­ர­மைப்பு பணிகள் துரி­தப்­ப­டுத்த வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­யுள்ளார் எனக் கூறப்­ப­டு­கி­றது.

இது பற்றி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு  திருப்தி தெரி­வித்­தி­ருப்­ப­தையும் நாம் அறிவோம். இதே­வேளை மோடியின் வேண்­டு­கோளை இலங்கை ஜனாதிபதி எவ்­வாறு நிறை­வேற்றப் போகிறார்   என்ற கவ­லையை எதிர்க்­கட்சி தெரி­வித்­தி­ருக்­கி­றது. அத்­துடன் இலங்கை அர­சாங்கம் மிகவும் அவ­தா­ன­மாக இருக்க வேண்­டு­மெ­னவும் அக்­கட்சி எச்­ச­ரித்­துள்­ளது.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் வட­மா­காண முதல் அமைச்சர் ஜனா­தி­ப­தியின் அழைப்பை ஏற்­றி­ருந்தால் அது தீர்­வுக்­கான ஒரு சாத­க­மான சூழ்­நி­லையை உரு­வாக்க உத­வி­யி­ருக்­கா­தென்­பதும்   இலங்­கையின் இன­வாத  அமைப்­புக்­களும் கட்­சி­களும் கண்­கொத்திப் பாம்­புகள் போல் தமி­ழர்­க­ளுக்கு எதை­யுமே கொடுத்து   விடக் கூடாது   என்­பதில் கவனம் காட்டி வரும் போது….

அது    சார்ந்த நிலைப்­பாட்டில் இலங்கை அர­சாங்கம் தொடர்ந்தும் செயற்பட்டு­வரும் நிலையில் மேற்­படி இந்­தியா சென்ற குழுவில் சேர்ந்து சென்­றி­ருந்தால் நல்­ல­தொரு சூழ்­நிலை உரு­வா­கி­யி­ருக்­கு­மென்­பது எவ்­வ­ளவு பொய்­மைத்­த­ன­மான வாதம் என்­பதை புரிந்து கொள்ள முடியும்.

கடந்த 60 வருட கால பேச்­சு­வார்த்­தைகள் ஒப்­பந்­தங்கள் போராட்­டங்கள் மகா­நா­டுகள் உடன்­ப­டிக்­கைகள் தராத சந்­தர்ப்­பத்­தையும் தீர்வையும் விக்னேஸ்வரன் இந்தியா சென்ற குழுவுடன் இணைந்திருந்தால்   தந்திருக்குமென்பது எவ்வளவு கற்பனை நிறைந்தது என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

திரு­மலை நவம்

Share.
Leave A Reply