ஹில்லாரி என் ஆன்ட்டி என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் கள்ளக்காதலி மோனிகா லெவன்ஸ்கீயிடம் கூறியதாக அவரின் நண்பர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் நண்பர் ஆன்டி. பத்திரிக்கையாளர். சீரியல் கொலைகாரர் ஒருவரை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட பிறகு அவர் பாலஸ்தீனத்தில் தலைமறைவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் பில் கிளிண்டனின் ரகிசயங்களை பில்ஸ் புல் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

அப்பாவி மக்களின் உயிர்களை கருத்தில் கொண்டு ஒசாமா பின் லேடனை கொல்லவில்லை என்று கிளிண்டன் கூறியது பொய். அவர் ஒசாமாவின் மிரட்டல்களை கண்டுகொள்ளவே இல்லை.

ஒசாமா வேற்றுகிரக விமானம் போன்ற ஒன்றில் வெள்ளை மாளிகை வளாகத்தில் வந்திறங்கியபோது சிஐஏ அவரை வேற்றுகிரக வாசி என்று நினைத்து அருகில் செல்லவில்லை.

சாமாவின் மிரட்டல்களை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பில் கிளிண்டன் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஒசாமாவால் எதை எல்லாம் செய்ய முடியும் என்று நான் கிளிண்டனிடம் கூறினேன். கில் பில், கில் பில் என்றேன். அவர் கண்டுகொள்ளவே இல்லை.

கிளிண்டன் பற்றி பில்ஸ் புல் என்ற தலைப்பில் புத்தகம் எழுதி அவரின் ரகசியங்களை எல்லாம் உலகிற்கு தெரிவிப்பேன்.

மோனிகா மோகத்தால் கிளிண்டன் என்னவெல்லாம் செய்தார் என்பதை என் புத்தகத்தில் தெரிவிப்பேன். பில் என் வீட்டுக்கு வந்து பெப்ஸி குடித்துவிட்டு போதை ஏறி என்னை பார்த்து பேபி என்று கூறியுள்ளார்.

மோனிகாவிடம் தனது மனைவி ஹில்லாரி தன்னுடைய ஆன்ட்டி என்று தெரிவித்துள்ளார் பில் கிளிண்டன். பாவம் மோனிகாவும், ஹில்லாரியும்.

ஒசாமா விஷயத்தில் பில் பொய் கூறியது தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் அதிபராகக் கூடாது என்பதற்காக என்னை அவர் அரசியலுக்கு வரவிடவில்லை என்றார் ஆன்டி.

Share.
Leave A Reply