தான் கிண்டலுக்காகவே மிஸ்டர் பிரபாகரன் என்று சொன்னதாகவும் “மிஸ்டர்” என்பதற்கு திரு என்பது மட்டும் அர்த்தம் இல்லை’ என்றும் கூறியிருக்கிறார் சந்திரிக்கா.
மிஸ்டர் என்பதற்கு ‘திரு’ என்பது மட்டும் அர்த்தம் இல்லை என்றால் வேறு என்ன அர்த்தத்தில் மிஸ்டர் பிரபாகரன் என அழைத்திருப்பார்??
பிரபாகரன் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது ‘திரு’ ‘திரு’ என முழிப்பதை பார்த்து திரு. பிரபாகரன் என அழைத்திருப்பாரோ?
சந்திரிக்கா படுகொலை செய்ய முனைந்து, அவரின் ஒரு கண்ணை பறித்த பிரபாகரனை மரியாதை செய்து ‘திரு’ என்று அழைத்திருக்கமாட்டார். கட்டாயமாக கிண்டலாகவே இப்படி கூறியிருப்பார். (எந்தவொரு பதவிகளிலும் இல்லாதவர்களை “மிஸ்டர்” என்றே அழைக்கிறார்கள்)
பிரபாகரனின் பெயரை மூன்று முறையே உச்சரித்துள்ளேன்; சந்திரிகா
பிரபாகரனின் பெயரை மூன்று முறையே உச்சரித்துள்ளேன். இந்நிலையில் மிஸ்டர் பிரபாகரன் என்று கூறியமையை தேசத்துரோகச் செயலென எடுத்துக் காட்டுகின்றனர்.
இது முட்டாள்தனமான செயலாகும். ஆணையும் பெண்ணையும் வேறுபடுத்தி காட்டவே மிஸ்டர் என்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகின்றது.
மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆங்கில மொழி தெரியாத குறையையே இது எடுத்துக்காட்டுகின்றது. எனவே இது தொடர்பில் தேர்தல் முடிவடைந்த பிற்பாடு நீதிமன்றம் செல்வேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
மேலும் எனது ஆட்சியின் போது நாட்டை பிளவுபடுத்தவோ பயங்கரவாதத்தை போஷிக்கவோ இல்லை. இதன்பிறகும் நாட்டை பிளவுபடுத்த மாட்டேன். எனது பக்கம் தேசத்தை காப்பாற்றியவர்களே உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
எம் மீது பலவகை தேசத்துரோக சாயம் பூசுகின்றனர். எனது ஆட்சியின் போது நாட்டை பிளவுபடுத்தும் வகையில் ஒருபோதும் செயற்பட்டது கிடையாது.
எனது ஆட்சியின் போது யுத்தத்திற்கு உரிய முக்கியத்துவம் அளித்து இராணுவம் பலப்படுத்தப்பட்டது. இதற்கமையவே யாழ்ப்பாணத்தை நாம் வெற்றி கொண்டோம்.
எனவே, நாட்டை பிளவுபடுத்தும் தேவை எமக்கு கிடையாது. நாங்கள் பயங்கரவாதத்தை போஷிக்கக் கூடியவர்கள் அல்ல. பயங்கரவாதத்தினால் நாமே அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகிறோம். ஆகவே, நாட்டை பிளவுபடுத்தும் நோக்கம் எமக்கும் இல்லை.
நாம் செய்த சேவைகளை மக்கள் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும். இந்த நாட்டை காட்டிக்கொடுத்தது யார்? என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும்.
இதேவேளை, தற்போது பரவலாக என் மீது ஒரு வார்த்தை கொண்டு தேசத்துரோக பட்டம் சுமத்துகின்றனர். நான் யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற வேளை மிஸ்டர் பிரபாகரன் என்று கூறியமையே நாட்டை பிளவுபடுத்தும் செயலென கூறுகின்றனர்.
மிஸ்டர் என்ற வார்த்தையை பிரயோகிப்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பாகுபட்டினை காண்பிப்பதற்காகும். ஆங்கிலம் தெரியாதவர்கள் முட்டாள்தனமான செயலில் களமிறங்கியுள்ளனர்.
நான் மூன்று தடவை பிரபாகரனின் ??????? திட்டி தீர்க்கும் வார்த்தைகளையே பிரயோகித்தேன். இதேவேளை நான் கட்சியில் இருக்கும் போது ஒருபோதும் மிஸ்டர் பிரபாகரன் என அழைத்தது கிடையாது.
எனினும் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சி பீடமேறிய உடன் மிஸ்டர் பிரபாகரன் என்ற வார்த்தையை பிரயோகம் செய்தார். எனவே, மிஸ்டர் பிரபாகரன் என்று முதலில் கூறியவர் மஹிந்த ராஜபக் ஷவாகும்.
– See more at: http://www.tamilmirror.lk/137040#sthash.2AxRGWxZ.dpuf
பிரபாகரன் என்ற சொல்லை நான் எனது உரையில் மூன்று முறை பயன்படுத்தினேன். முதன்முறை அச்சொல்லைக் கூறும்போதே மிஸ்டர் என்ற சொல்லையும் இணைத்துக்கொண்டேன்.
அப்போது கூட நான் அந்த சொல்லை கிண்டலாகவே சொன்னேன். மிஸ்டர் என்பதற்கு திரு என்பது மட்டும் அர்த்தம் இல்லை’ என்றார். மிஸ்டர் என்பதற்கு திரு என்பது மட்டும் அர்த்தம் இல்லை’ என்றார்.