வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் அடையாளம் தெரியாதவர்களினால் கடத்தப்பட்டு காணாமல்போனவர்கள் பலர் இலங்கையின் பல இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இரகசிய தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எமக்கு இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.
பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக புதன்கிழமை (04) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர் முதலமைச்சரைச் சந்தித்து தமது கோரிக்கைகளை முன் முன்வைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் படையினரின் சப்பாத்துக்களை துடைப்பதற்கும், மற்றும் சில இதர வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அறிந்திருக்கின்றோம். இந்த இரகசிய முகாம்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.
இலங்கையின் பல இடங்களில் குறிப்பாக மஹரகம, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை போன்ற இடங்களில் இரகசிய முகாம்கள் உள்ளதாகவும் அவற்றில் காணாமல்போனவர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் எமக்கு சில இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த விடயம் தொடர்பாக நாம் அரசாங்கத்துக்கும், தனிப்பட்ட வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றோம்.
அவ்வாறான முகாம்கள் இருக்கின்றனர் என உங்களுக்கு எவ்வாறு தெரியும் என அவர்கள் எங்களிடம் கேட்டபோது நாம் அதனை அவர்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.
இரகசிய முகாம்களில் உள்ளவர்களை முதலில் அடையாளம் காணவேண்டும். அதன் பின்னர் அவர்களை விடுவிப்பது தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுக்கலாம்.
எனவே ஆக்க பொறுத்த நாம் ஆறபொறுக்கவேண்டும். ஏனெனில் இரகசிய முகாம்கள் என்பதனால் அவை தொடர்பில், நாம் விசாரணைகளை முன்னெடுக்க முடியாமலிருக்கின்றது.
சிறைகளிலும் மற்றும் நலன்புரி முகாம்களிலும் அடையாளம் காணப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை வெசாக் தினமான எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் நாங்கள் கேட்டிருக்கின்றோம்.
அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என நாங்கள் நம்புகின்றோம் என கூறினார் முதலமைச்சர்.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் அரசாங்கத்தின் 100 நாட்கள் செயற்றிட்டத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுங்கள் என முதலமைச்சரிடம் கோரினர்.
அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் அந்த விடயம் தொடர்பாக நாம் பரிசீலிக்கலாம். மேலும் காணாமல்போன பிள்ளைகள் தொடர்பான முழுமையான தகவல்களை எமக்கு கொடுங்கள்.
அவ்வாறு கொடுத்தால் அதனை நானே ஒரு பிரேரணையாக வடிவமைத்து மாகாணசபையில் தீர்மானமாக நிறைவேற்றுவேன்.
நான் முன்னர் குறிப்பிட்டதைப்போன்று இரகசிய முகாம்கள் தொடர்பான அடையாளப்படுத்தல் மற்றும் அங்குள்ளவர்கள் தொடர்பான தகவல்கள் தேவை.
எனவே அதனை முதலில் பெற்றுக் கொண்டு நாம் நடவடிக்கை எடுப்போம். இதேபோன்று காணாமல்போனவர்களின் உறவினர்கள், இங்குவரும் வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்திக்க விரும்பினால் என்னிடம் முதலிலேயே கூறிவையுங்கள்.
அவ்வாறு கூறிவைத்தால் அது தொடர்பில் நான் உரிய நடவடிக்கையை எடுப்பேன். இதேபோன்று நீங்கள் ஜனாதிபதியை சந்திக்க கேட்டிருக்கின்றீர்கள்.
அது தொடர்பிலும் நாம் நடவடிக்கை எடுத்து, ஜனாதிபதியை நீங்கள் சந்திப்பதற்கு ஆவணஞ் செய்து கொடுக்கப்படும் என முதலமைச்சர் காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் அடையாளம் தெரியாதவர்களினால் கடத்தப்பட்டு காணாமல்போனவர்கள் பலர் இலங்கையின் பல இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இரகசிய தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எமக்கு இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.
பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக புதன்கிழமை (04) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர் முதலமைச்சரைச் சந்தித்து தமது கோரிக்கைகளை முன் முன்வைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் படையினரின் சப்பாத்துக்களை துடைப்பதற்கும், மற்றும் சில இதர வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அறிந்திருக்கின்றோம். இந்த இரகசிய முகாம்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.
இலங்கையின் பல இடங்களில் குறிப்பாக மஹரகம, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை போன்ற இடங்களில் இரகசிய முகாம்கள் உள்ளதாகவும் அவற்றில் காணாமல்போனவர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் எமக்கு சில இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த விடயம் தொடர்பாக நாம் அரசாங்கத்துக்கும், தனிப்பட்ட வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றோம். அவ்வாறான முகாம்கள் இருக்கின்றனர் என உங்களுக்கு எவ்வாறு தெரியும் என அவர்கள் எங்களிடம் கேட்டபோது நாம் அதனை அவர்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.
இரகசிய முகாம்களில் உள்ளவர்களை முதலில் அடையாளம் காணவேண்டும். அதன் பின்னர் அவர்களை விடுவிப்பது தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுக்கலாம். எனவே ஆக்க பொறுத்த நாம் ஆறபொறுக்கவேண்டும். ஏனெனில் இரகசிய முகாம்கள் என்பதனால் அவை தொடர்பில், நாம் விசாரணைகளை முன்னெடுக்க முடியாமலிருக்கின்றது.
சிறைகளிலும் மற்றும் நலன்புரி முகாம்களிலும் அடையாளம் காணப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை வெசாக் தினமான எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் நாங்கள் கேட்டிருக்கின்றோம். அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என நாங்கள் நம்புகின்றோம் என கூறினார் முதலமைச்சர்.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் அரசாங்கத்தின் 100 நாட்கள் செயற்றிட்டத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுங்கள் என முதலமைச்சரிடம் கோரினர்.
அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் அந்த விடயம் தொடர்பாக நாம் பரிசீலிக்கலாம். மேலும் காணாமல்போன பிள்ளைகள் தொடர்பான முழுமையான தகவல்களை எமக்கு கொடுங்கள். அவ்வாறு கொடுத்தால் அதனை நானே ஒரு பிரேரணையாக வடிவமைத்து மாகாணசபையில் தீர்மானமாக நிறைவேற்றுவேன்.
நான் முன்னர் குறிப்பிட்டதைப்போன்று இரகசிய முகாம்கள் தொடர்பான அடையாளப்படுத்தல் மற்றும் அங்குள்ளவர்கள் தொடர்பான தகவல்கள் தேவை. எனவே அதனை முதலில் பெற்றுக் கொண்டு நாம் நடவடிக்கை எடுப்போம். இதேபோன்று காணாமல்போனவர்களின் உறவினர்கள், இங்குவரும் வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்திக்க விரும்பினால் என்னிடம் முதலிலேயே கூறிவையுங்கள்.
அவ்வாறு கூறிவைத்தால் அது தொடர்பில் நான் உரிய நடவடிக்கையை எடுப்பேன். இதேபோன்று நீங்கள் ஜனாதிபதியை சந்திக்க கேட்டிருக்கின்றீர்கள். அது தொடர்பிலும் நாம் நடவடிக்கை எடுத்து, ஜனாதிபதியை நீங்கள் சந்திப்பதற்கு ஆவணஞ் செய்து கொடுக்கப்படும் என முதலமைச்சர் காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
– See more at: http://www.tamilmirror.lk/141045#sthash.LTnb6fIS.dpuf