மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முச்­சக்­கர வண்டி செலுத்தி வரு­மா­னத்தை ஈட்­டி­வ­ரு­பவர் மட்­டக்­க­ளப்பு மண்­முனை வடக்கு பிர­தேச செய­லகப்­ப­ிரி­விற்குள் அடங்கும் மாமாங்கம் கிரா­மத்தில் வசிக்கும் எஸ்.றொமீலா (வயது 35) என்ற இருபிள்ளைகளின் தாயாராவார்.

கடங்த மூன்று வரு­டங்­க­ளாக முச்­சக்­கர வண்டி சார­தி­யாக செயற்­படும் இவர் இதன் மூலமே வரு­மா­னத்தை தேடிவருகின்றார்.

கடை­களில் வேலை பார்ப்­பதை விட, வெளிநாடு செல்­வதை விட இத்­தொழில் சுய­கௌ­ர­வத்­துடன் உழைக்­கக்­கூ­டி­ய­தா­கவும் பெண்­க­ளாலும் முடியும் என்­பதை காட்­டு­வ­தா­கவும் இருப்­ப­தா­கவும் அவர் தெரிவிக்­கிறார்.

தன்­னைப்­போல மட்­டக்­க­ளர்பு பிர­தே­சத்­தில் 15 பெண்கள் முச்­சக்­கர வண்டி செலுத்தும் பயிற்­சியை முடித்­துள்­ள­தா­கவும் தங்க­ளுக்­காக முச்­சக்­கர வண்டி பெண்கள் அமைப்­பொன்றை உரு­வாக்கி தங்­க­ளுக்­கான தரிப்­பி­டத்­தையும் உருவாக்கி தருமாறு சர்வதேச பெண்கள் தினத்தில் வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித் தார்.

விபத்தில் மாணவி பலியானதால் வான் தீக்கிரையானது!

theeeமட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அதன்போது ஆத்திரமடைந்த பொதுமக்கள் விபத்தினை வானை தீயிட்டு கொழுத்தியதினால் அப்பகுதியில் பதற்ற நிலையேற்பட்டதாகவும் அவை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் நி.ஜசோ (12வயது) பாடசாலை வீதி, மாவடிவேம்பு பகுதியில் உள்ள மாணவியே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று இருந்து குருணாகலுக்கு சென்றுக்கொண்டிருந்த வான் தனியார் வகுப்பு சென்றுவிட்டு துவிச்சக்கர வண்டியில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த மாணவி மீது மோதியுள்ளது.

இதன்போது குறித்த மாணவி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் இதனால் ஆத்திரமுற்ற பிரதேச மக்கள் வான் சாரதியை தாக்கியதுடன் வானையும் தீயிட்டு கொழுத்தியுள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்துக்கு விரைந்த ஏறாவூர் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சாரதியை கைதுசெய்ததுடன் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

உயிரிழந்த மாணவியின் சடலம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
1895311998fire2

Share.
Leave A Reply