இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி கொழு ம்பு வரு­வ­தற்கு ஓரிரு நாட்கள் முன்­ன­தாக, முன்னாள் ஜனாதி­பதி மஹிந்த ராஜபக் ஷ அளித்­தி­ருந்த பேட்­டியில், தன்னைப் பத­வியில் இருந்து அகற்­று­வதில், இந்­தியப் புல­னாய்வுப் பிரி­வான றோ முக்­கிய பங்­காற்­றி­ய­தாகத் தெரி­வித்­தி­ருந்தார்.

மஹிந்த ராஜ­பக் ஷ மிகவும், சரி­யான நேரம் கணித்து இந்தப் பேட்­டியைக் கொடுத்­தி­ருந் தார்.

‘றோ‘வைக் குற்­றம்­சாட்டும் மஹிந்த  ராஜபக்ஷவின் பேட்டி, முதலில் வெளி­யா­னது, அவ­ருக்கு நெருக்க­மான சீனாவின் கட்­டுப்­பாட்டில் உள்ள ஹொங்­கொங்கில் இருந்து வெளி­யாகும் ‘சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்’ நாளி­தழில் தான்.

சீனா­வுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் உள்ள நெருக்­கத்தை விப­ரித்துக் கொண்­டி­ருக்கத் தேவை­யில்லை.

அதை­ய­டு த்து, மோடியின் வரு­கைக்கு முதல்நாள், அவ­ரது பேட்டி இந்­தி­யாவின் ‘தி ஹிந்து’ நாளி­தழில் வெளி­யா­னது.

மஹிந்த ராஜபக் ஷவுக்கும், தி ஹிந்­து­வுக்கும் நெருக்கம் அதிகம் என்­ப­தையும் இங்கு கூற வேண்டியதில்லை.

தி ஹிந்­துவின் ஆசி­ரியர் என்.ராம் பல­முறை மஹிந்த ராஜபக் ஷவுக்கு சாத­க­மான வகையில் பேட்டிகளை எடுத்­தி­ருந்­தவர்.

ஆனால், இம்­முறை, ‘தி ஹிந்து’ சார்பில் அவரைப் பேட்டி கண்­டது, சுகா­சினி ஹைதர்.

இவர், பா.ஜ.க.வின் பிர­மு­கர்­களில் ஒரு­வரும், தமி­ழக அர­சி­யலில் கோமாளி என்று வர்ணிக்கப்படுபவரு­மான சுப்­பி­ர­ம­ணியன் சுவா­மியின் மக­ளு­மாவார்.

சுப்­பி­ர­ம­ணியன் சுவா­மிக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடை­யிலும் நெருக்­க­மான உறவு இருந்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

மோடியின் வரு­கையை ஒட்­டி­ய­தாக- இந்­தியப் புல­னாய்வுத் துறை­யான றோவை குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்தும் வகையில், பேட்­டி­களை வழங்­கி­யுள்ளார் மஹிந்த ராஜபக் ஷ.

இந்த இரண்டு பேட்­டி­களும் வெளி­வந்த காலம் மற்றும், பேட்டி காணப்­பட்ட ஊட­கங்­களை வைத்து நோக்கும் போது, மஹிந்த ராஜ­பக்ஷ நேரத்தைக் கணித்து வீசிய கல்­லா­கவே தோன்­று­கி­றது.

சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்­டுக்கு வழங்­கிய பேட்­டியில், அமெ­ரிக்­காவும், மேற்­கு­லக நாடு­களும், இந்­திய புல­னாய்வுத் துறையும் தனக்கு எதி­ராக செயற்­பட்­ட­தி­னா­லேயே தோல்­வி­ய­டைந்­த­தாக குறிப்பிட்­டி­ருந்தார்.

அமெ­ரிக்கா மற்றும் நோர்வே போன்ற நாடு­களின் கொழும்­பி­லுள்ள தூத­ர­கங்கள் தனக்கு எதி­ராக பகிரங்­க­மாக செயற்­பட்­ட­தா­கவும், பதவி கவிழ்க்க திட்­ட­மிட்­ட­தா­கவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.

என்­றாலும், அது, றோ மீது நேர­டி­யாக கல்லை வீசு­வ­தற்கு முன்­ன­தாக, ஒத்­திகை பார்க்கும் வகை­யி­லேயே அவர் அவ்­வாறு குறிப்­பிட்­டி­ருந்தார்.

இரண்டு நாட்கள் கழித்து அவர் தி ஹிந்து விடம் அளித்த பேட்­டியில், வெளிப்­ப­டை­யா­கவே ‘றோ‘ மீதும், அமெ­ரிக்கப் புல­னாய்வு அமைப்­பான சி.ஐ.ஏ. மீதும், பிரித்­தா­னி­யா வின் எம்16 மீதும், குற்­றச்­சாட்­டு­களை கூறி­யிருந்தார்.

இந்­தியப் பிர­தமர் மோடி வர­வுள்ள சூழ லில், ஒட்­டு­மொத்த இந்­திய மற்றும் உலக ஊட ­கங்­களின் கவனமும், இலங்கை மீது குவிந்­தி­ருந்த சூழலில் தான், மஹிந்த ராஜ­பக் ஷவின் இந்தப் பேட்டி வெளியா­னது.

இதன் மூலம் இந்­திய அர­சாங்­கத்தின் கவ­னத்தை மட்டும் அவர் தன் மீது திருப்ப எத்­த­னிக்­க­வில்லை, ஒட்­டு­மொத்த இந்­திய மக்­க­ளினது கவ­னத்­தையும், உலக மக்­களின் கவ­னத்தை யும் திருப்ப எத்தனித்தார்.

இந்தப் பேட்­டியில், அவர், எதி­ர­ணியைப் பலப்­ப­டுத்­து­வதில், இந்­தியப் புல­னாய்வு அமைப்பு முக்­கிய பங்காற்­றி­யி­ருந்­த­தாக, சற்று விரி­வா­கவே கூறி­யி­ருந்தார்.

அதா­வது எதி­ர­ணியின் பொது வேட்­பா­ள­ராக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை முன்­நி­றுத்­து­வதில், ‘றோ‘ முக்­கிய பங்­காற்­றி­யி­ருந்­தது.

றோவின் கொழும்பு அதி­கா­ரி­யாக இருந்த இளங்கோ, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் நெருக்­க­மான உறவை வைத்­தி­ருந்தார்.

இதையே காரணம் காட்டி, ‘றோ’ அதி­காரி இளங்­கோவை திருப்பி அழைக்­கு­மாறு,  இலங்கை அரசாங்கம் கேட்­டி­ருந்­தது.

கடந்த ஆண்டு நவம்­பரில் இந்­திய தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் அஜித் டோவல் கொழும்பு வந்­தி­ருந்த போது, பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜபக்ஷ இந்தக் கோரிக்­கையை விடுத்­தி­ருந்தார்.

இதை­ய­டு த்து, உட­ன­டி­யா­கவே றோ அதி­காரி இளங்­கோவை புது­டில்­லிக்குத் திருப்பி அழைக்க இந்­திய அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தது.

அந்தச் செய்தி ஊட­கங்­களில் வெளி­யான போது அதனை இந்­தியா நிரா­க­ரித்­தி­ருந்­தது. ஜனா­தி­பதி தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ தோல்­வி­ய­டைந்த பின்னர், மஹிந்­தவைப் பதவி கவிழ்ப்­பதில் ‘றோ’ முக்­கிய பங்கு வகித்த­தாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறு­வனம் தெரி­வித்­தி­ருந்­தது.

அப்­போது, இந்­திய அர­சாங்­கத்தின் சார்பில், வெளி­வி­வ­கார அமைச்சின் பேச்­சாளர் சையத் அக்­ப­ருதீன் அதனை நிரா­க­ரித்­தி­ருந்­துடன், ‘றோ’ அதி­கா­ரியின் இட­மாற்றம் வழ­மையானது, என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இப்­போது றோ மீது குற்­றம்­சாட்­டி­யுள்ள   மஹிந்த ராஜபக் ஷ கூட ரொய்ட்டர்ஸ் செய்தி நிறு­வனம் இதுகு­றித்து கேட்டபோது, தனக்­கெ­தி­ராக வெளி­நாட்டு நிறு­வ­னங்கள் செயற்­பட்­டி­ருக்கும் என்றுநம்பவில்லை எனக் கூறி­யி­ருந்தார்.

ஆனால், இப்­போது அவரே, றோ மீது மட்­டு­மன்றி, சி.ஐ.ஏ., எம் 16மீதும் குற்­றச்­சாட்­டு­களை கூறியிருக்கிறார்.

இந்­தியா முன்னர் இதனை நிரா­க­ரித்­துள்­ளதே என்று கேட்­ட­போது, றோ அதி­கா­ரியை திருப்பி அழைக்குமாறு தானே கேட்­ட­தா­கவும், இந்­தி­யா­வி­டமே கேட்டுப் பார்க்­கும்­ப­டியும் மஹிந்த ராஜபக் ஷ குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

முன்­ன­தாக, இந்­தி­யா­வுடன் இணைந்து, இதனை நிரா­க­ரித்­தவர் இப்­போது, அவ்­வாறு குற்­றம்­சாட்ட முனைந்­துள்ளார் என்றால் அத ற்குப் பின்­புலம் ஒன்று இருக்­கவே செய்யும்.

இந்­திய அரசின் அதி­கா­ர­பூர்வ பேச்­சா­ளர் கள் மட்­டு­மன்றி, றோ அதி­கா­ரியை இலங்கை திருப்பி அழைக்கு­மாறு கோரி­யி­ருக்க முடி­யாது என்றும் அத்­த­கை­ய­தொரு நிலை ஏற்­பட்­டி­ருந்தால் அது இராஜதந்­திர ரீதி­யாக நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் என்றும் கேர்ணல் ஹரி­கரன் போன்ற ஆய்வா­ளர்­களும் கூறி­யி­ருந்­தனர்.

மஹிந்த ராஜபக் ஷவின் பேட்டி, அந்தக் கணிப்­பு­க­ளை­யெல்லாம் பொய்­யாக்கி விட்­டு ள்­ளது.

இந்­தி­யாவின் றோ மீது நேர­டி­யா­கவே கல் வீசும் துணிச்சல் மஹிந்த ராஜபக் ஷவுக்கு எவ்­வாறு வந்தது?- அதுவும், ஆட்­சியில் இல்­லாத போது இந்த தைரியம் அவ­ருக்கு வந்­தி­ருக்­கி­றது என்­பது ஆச்சரி­ய­மா­னதே.

ஏனென்றால், இந்­தி­யாவின் நலன்­க­ளுக்கு எதி­ராகச் செயற்­பட்­டதே, மஹிந்த ராஜபக்ஷ வின் வீழ்ச்­சிக்கு கார­ண­மா­கி­யது என்­பது உறு­தி­யாகி விட்ட நிலையில், அவர் ‘றோ’வுடன் தொடர்ந்து பகை­மையை வளர்க்க முனைந்­துள்ளது ஏன்? என்ற கேள்வி எழுந்­திருக்­கி­றது.

மஹிந்த ராஜபக்ஷ வடக்கு, கிழக்கு வாக்­குகளை தவ­றாக கணித்து விட்­ட­தாக கூறி­யி­ருந் தார். அதுவே தனது தோல்­விக்கு காரணம் என்றும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

ஆனால், கடந்த ஜன­வரி மாதம் நடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் இழந்து போன அதி­கா­ரத்தை, அடுத்த பொதுத்­தேர்­தலில் எப்­ப­டி­யா­வது பிடித்து விட வேண்டும் என்று கங்­கணம் கட்­டி­யுள்ளார் போலவே தோன்­று­கி­றது.

அவர் இப்­போது வெளி­யிடும் கருத்­துகள், செவ்­விகள் அனைத்தும், அவ­ரது மீள் அர­சி யல் பிர­வே­சத்தை வலு­வூட்­டு­வ­தா­கவே தெரி­கிறது.

மஹிந்த ராஜபக் ஷ மட்­டு­மன்றி, கோத்­தா­பய ராஜ­பக்­ஷவும் கூட தாம் அர­சி­ய­லுக்குள் பிர­வே­சிப்­பது குறித்து ஆலோ­சிப்­ப­தாக வெ ளிப்­ப­டை­யாகக் கூறி­யி­ருக்­கிறார்.

மஹிந்த  ராஜ­ப­க்ஷ­வுக்கு தாம் அதி­கா­ரத்தில் இல்­லா­விட்டால், அமுக்­கப்­பட்டு விடு வோம் என்­பது நன்றா­கவே தெரியும்.

 

எனவே, அவர் மீண்டும் அர­சி­யலில் பிர­வே­சித்து அதி­கா­ரத்தைக் கையில் எடுத்து தன்னை யும், தனது குடும்­பத்­தி­ன­ரையும், தன்னைச் சுற்­றி­யி­ருப்­ப­வர்­க­ளையும் தற்­காத்துக் கொள்ளத் திட்­ட­மி­டு­கிறார்.

அதற்கு அவ­ருக்குக் கைகொ­டுக்கும் வகையில் விரை­வி­லேயே பாரா­ளு­மன்றத் தேர்­தலும் அறிவிக்கப்படும் வாய்ப்­புகள் உள்­ளன.

அதை­விட, அவர் மீண்டும் அர­சி­ய­லுக்கு வரு­வ­தற்கு புறச்­சக்­தி­களின் தூண்­டு­தல்­களும் கார­ண­மாக இருக்­கலாம்.

குறிப்­பாக, சீனா இதற்கு பின்­புல ஆத­ரவைக்கொடுக்க முன்­வந்­தி­ருந்­தாலும் ஆச்­சரியமில்லை. ஏனென்றால், மஹிந்த ராஜபக்ஷவுக் குப் பிந்­திய இலங்கை அர­சாங்கம், சீனாவுக்கு சற்றும் சாதகமானதொன்­றாக இருக்­க­வில்லை.

இந்­த­நி­லையில், சீனா தனது நலன்­களை உறு­ திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு, எப்­ப­டியும் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வர­வேண்டும் என்றே விருப்பம் கொள்ளும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

இந்­த­நி­லையில், தான் றோ மற்றும் சி.ஐ.ஏ. உள்­ளிட்ட சர்­வ­தேச புல­னாய்வு அமைப்­பு­க ளின் மீதானமஹிந்த ராஜபக் ஷவின் பாய்ச்சல் வெளிப்­பட்­டுள்­ளது.

இன்­னொரு ஆட்­சி­ய­தி­கா­ரத்­துக்­காக முயற்­சிக்கும் மஹிந்த ராஜபக்ஷ, சர்­வ­தேச புல­னாய்வு அமைப்புகளுடன் முரண்­பா­டு­களை வளர்த்துக் கொள்­வது புத்­தி­சா­லித்­த­ன­மா­னதா என்ற கேள்வி எழலாம்.

ஆனால், மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஒரு விடயம் நன்­றா­கவே தெரியும், அதா­வது, சிங்­களமக்­களில் பெரும்­பான்­மை­யி­ன­ருக்கு தன் மீது அனு­தாபம் உள்­ளது என்­பதை அவர் அறிவார்.

அவர்­க­ளி­னது ஆத­ரவைப் பெறு­வ­தற்கு இது­போன்ற வெளி­நாட்டுச் சதி என்ற விவ­காரம், மீள அதிகாரத்தைக் கைப்­பற்­று­வ­தற்கு மிகச்­சி­றந்த கரு­வி­யா­கவே பயன்­படக் கூடும்.

சிங்­கள மக்­களில் அநேகர் வெளி­நாட்டுத் தலை­யீ­டு­களை விரும்­பா­த­வர்கள் என்ற வகையில், றோ, சி.ஐ.ஏ.யின் சதி என்ற கதை அவர்கள் முன் நன்­றா­கவே எடு­படக் கூடும்.

அதனைக் கருத்தில் கொண்டு தான் ‘றோ’ மீதான கல்லை வீசி­யி­ருக்­கிறார் மஹிந்த. ′றோ’ மீது கல்லை வீசினால், இந்­தியா கோபம் கொள்­ளாதா- அதுவும் இந்­தியப் பிர­த மர் வரும் போது இவ்­வாறு கூறுவதால், அவர் கோபம் கொள்­ள­மாட்­டாரா என்ற கேள்­வியும் உள்­ளது.

ஆனால், அவ­ரது பேட்­டி­யி­லேயே மோடி யை இதில் தொடர்பு இல்லை என்று குறிப்­பிட்­டுள்ளார்.

முன்­னைய அர­சாங்­கத்தின் காலத்தில் இருந்து மேற்­கொள்­ளப்­பட்ட சதியே என்றும், மோடி அரசு இப்போது தான் பத­விக்கு வந்­தது என்றும் கூறி­யுள்­ளதன் மூலம், மோடி அர­சாங்­கத்தை பகைத்துக் கொள்­ளாமல் இருக்க முயன்­றி­ருக்­கிறார் மஹிந்த.

என்­றாலும், இதனை மோடி எந்­த­ள­வுக்கு ஏற்றுக் கொள்வார் என்று தெரி­ய­வில்லை.

அடுத்த அர­சியல் பிர­வே­சத்­துக்­கா­கவே, மஹிந்த ராஜபக்ஷ ‘றோ’ மீதும் சி.ஐ.ஏ. மீதும் தாக்­கு­தலைத் தொடுத்­துள்ளார்.

இனி வரும் நாட்­களில் இத்­த­கைய தாக்­கு­தல்­களை, குறிப்­பாக, சிங்­கள மக்­களைத் தனக்கு ஆத­ர­வாகத் திருப்­பி­விடக் கூடிய செவ்­விகளை அவர் கொடுக்கக் கூடும்.

இது அவர் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வ­தற்­கான முதல் முயற்சி. ஆனால் என்ன, மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அதிகாரத்துக்கு வருவதை, றோவும், சி.ஐ.ஏ.யும் விரும்புமா என்பது தான் மிகப் பெரிய சவாலுக்குரிய விடயம்.

மீண்டும் மஹிந்த ராஜபக் ஷ அதிகாரத்துக்கு வருவதை தடுக்க, றோவை விட, சி.ஐ.ஏ. கடுமை யாகவே முயற்சிக்கும். மஹிந்த ராஜபக் ஷ வை ஒரு சர்வாதிகாரி போலவே அமெரிக்கா கருதுகிறது.

அமெரிக்க அதிகாரிகளின் கருத்துகளில் இது வெளிப்படையாகவே கூறப்பட்டுள்ளது.இந்தநிலையில் அவரது மீள்வருகை அமெரிக்க நலன்களுக்கு குந்தகமானது என்று சி.ஐ.ஏ.க்கு நன்றாவே தெரியும்.

அதனால் மஹிந்தவின் மீள்வருகையைத் தடுப்பதற்கு சி.ஐ.ஏ. போன்ற மேற்குலகப் புலனாய்வு அமைப்புகள் முயற்சிக்க வாய்ப்பு கள் உள்ளன.

இந்தநிலையில், இதுவரை வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய இரகசிய புலனாய்வுப் போர் இப்போது வெளிப்படையானதொன்றாக மாறியிருக்கிறது.

இதில், யார் வெற்றி பெறப்போகி றார் என்பதை, தீர்மானிக்கும் களமாக வரும் பாராளுமன்றத் தேர்தல் அமையக்கூடும்.

-ஹரிகரன்-

Share.
Leave A Reply