தசாப்த கால யுத்­தத்தை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்த பின்னர் இலங்கை பல சவால்­க­ளுக்கு முகம் கொடுத்­துள்­ளது. அதில் பிர­தா­ன­மான ஒரு விட­யமே போதைப்­பொருள் விவ­கா­ர­மாகும்.

இலங்­கையின் இளம் சமூ­கத்தை மிக மோச­மாக சாய்த்­து­வரும் இந்த போதைப்­பொருள் பயன்­பாட்டில் ஹெரோயின் எனும் போதைப்­பொருள் பாவனை அல்­லது விற்­ப னை பிர­தான இடத்தைப் பிடிக்­கி­றது.

இந்­நி­லையில் இலங்­கைக்குள் அந்த ஹெரோயின் போதைப்­பொருள் எப்­படி வரு­கி­றது ? யார் எடுத்து வரு­கி­றார்கள்? எங்­கி­ருந்து எடுத்து வரு­கி­றார்கள் என்­ப­தெல்லாம் ரக­சி­ய­மாக இருக்­க­வில்லை.

பொலிஸ் போதைப்­பொருள் தடுப்­புப்­பி­ரிவின் தக­வல்­க­ளின்­படி இலங்­கைக்கு ஹெரோயின் போதைப்­பொ­ருளை கடத்தும் பிர­தான சர்­வ­தேச வர்த்­த­கர்கள் இருவர்.

suthaஒருவர் கம்­பொல விதா­னகே சமந்த குமார என்ற இயற்­பெ­யரை உடைய வெலே­சுதா. மற்­றை­யவர் மொஹம்மட் சித்தீக்.

கடந்த ஜன­வரி மாதம் வெலே­சுதா பாகிஸ்­தானில் வைத்து கைது செய்­யப்­பட்டு இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்ட நிலையில் அவ­னுக்கு எதி­ராக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் விசா­ர­ணைகள் இன்றும் தொடர்­கின்­றன. அது தொடர்பில் கடந்த வாரங்­களில் நாம் தொடர்ச்­சி­யாக எழு­தி­யி­ருந்தோம்.

எனினும் இப்­போது நாம் குறிப்­பி­டு­வது இலங்­கைக்குள் ஹெரோயின் கடத்­திய மிகப் பிர­தா­ன­மான மொஹம்மட் சித்தீக் என்ற கடத்தல் மன்­னனை பற்­றி­ய­தாகும்.

கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி காலை கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க விமான நிலையம் ஊடாக பாகிஸ்­தானில் இருந்து மொஹம்மட் சித்தீக் புல­னாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு­வி­னரால் கைது செய்­யப்­பட்டு நாட்­டுக்கு அழைத்து வரப்­பட்­டி­ருந்தார்.

பாகிஸ்தான் பாது­காப்பு தரப்பும் இலங்­கையில் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவும் இணைந்து முன்­னெ­டுத்த நட­வ­டிக்கை ஊடா­கவே மொஹம்மட் சித்­தீக்கின் கைது சாத்­தி­ய­மா­னது.

கைது செய்­யப்­பட்ட மொஹம்மட் சித்­தீக்கின் சகாவும் பிர­பல சர்­வ­தேச போதைப்­ பொருள் கடத்தல் மன்­ன­னு­மான வெலே­சு­தா­வி­ட­மி­ருந்து விசா­ர­ணை­களில் பெறப்­பட்ட தக­வல்கள், சில புல­னாய்வுத் தக­வல் களை மையப்­ப­டுத்­தியே புல­னாய்வுப் பிரி­வினர் பாகிஸ்தான் பாது­காப்பு தரப்­புடன் இணைந்து மொஹம்மட் சித்­தீக்கை கைது செய்யும் வேட்­டையை முன்­னெ­டுத்­தி­ருந்­த னர்.

கடந்த ஜன­வரி மாதம் ஆகும் போது வெலே­சுதா பாகிஸ்தான் பாது­காப்பு தரப்­பி­னரால் கைது செய்­யப்­பட்டார். உண்­மையில் அப்­போது வெலே­சுதா மட்டும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. கூடவே சித்­தீக்கும் சிக்­கி­யி­ருந்தார்.

இரு உழவு இயந்­தி­ரங்­களின் கியர் பெட்­டி­களை அகற்றி அதனுள் ஹெரோயின் போதைப்­பொ­ரு­ளினை வைத்து கராச்சி துறை­முகம் ஊடாக கொழும்­புக்கு அனுப்ப தயா­ரான போதே இந்த கைது இடம்­பெற்­றி­ருந்­தது.

உண்­மையில் பாகிஸ்­தானில் ஹெரோ­யி­னுடன் ஒருவர் கைதா­வது ஒன்றும் பூதா­க­ர­மான விடயமல்ல.

இந்­நி­லை யில் அப்­போது கைதான சித்­தீக்கும் வெலே சுதாவும் அந்­நா ட்டு பாது­காப்பு தரப்­புக்கு ஒரு தொகை பணத் தை கொடு த்து விட்டு தப்­பி க்க வழி­யி­ருந்­தது.

இர­க­சிய தக­வல்­களின் படி தலைக்கு 10 கோடி ரூபா வரையில் பணம் அப்­போது பேரம் பேசப்பட்டுள்ளது. அதன் பெறு­பேறு மொஹம்மட் சித்தீக் அப்­ப­ணத்தை செலுத்தி பாகிஸ்தான் பாதுகாப்பு தரப்பின் பிடியில் இருந்து விடு­த­லை­யா­கி­யுள்ளான்.

எனினும் வெலே சுதாவால் குறித்த காலப்­ப­கு­திக்குள் அந்­த­ளவு பணத்­தொ­கை­யினை செலு த்த முடி­யாமல் போகவே அவர் இலங்­கைக்கு கொண்டு வரப்­படும் நிலைமை உரு­வா­கி­யி­ருந்­தது.

மொஹம்மட் சித்தீக் மரு­தானை மஜீட் வீதியை சேர்ந்­தவர். தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் மற் றும் உருது மொழி­களில் மிகச் சர­ள­மாக உரை­யா­டக்­கூ­டி­யவர்.

இந்­நி­லையில் சித்தீக் பாகிஸ்­தானில் அமீரா என்ற ஒரு பெண்ணை திரு­மணம் செய்­தி­ருந்தார். சித்தீக் பாகிஸ்தான் பொலி­ஸா­ரிடம் சிக்­கிய போது குறித்த 10 கோடி ரூபாவை கொடுத்து அவரை விடு­வித்­தவர் இந்த அமீ­ராவின் அண்­ணனே.

போதைப்­பொருள் தடுப்­புப்­பி­ரி­வி­னரின் தக­வல்­களை வைத்து பார்க்கும் போது மொஹம்மட் சித்­தீக்கே இலங்­கைக்குள் போதைப்­பொருள் கடத்­திய பிர­தான சந்­தேக நபர். வெலே சுதா சித்­தீக்கின் சகாவே தவிர அவனை விஞ்சும் கடத்தல் மன்னன் கிடை­யாது.

vele-600x330

வெலே சுதா

பாகிஸ்தான், – ஆப்­கா­னிஸ்தான் எல்­லை யில் அமைந்­துள்ள பெஷாவர் பிர­தே­சத்தை மைய­மாக வைத்து மொஹம்மட் சித்தீக் முன்­னெ­டுத்து வந்த சர்­வ­தேச ரீதி­யி­லான ஹெரோயின் கடத்­தலில் வெலே சுதா இலங்கை விவ­காரம் தொடர்­பி­லான ஒரு புள்ளி மட்­டுமே. வெலே சுதா­வுக்கு மேலி­ருந்து இந்த கடத்­தல்­களை நடத்­தி­யவர் மொஹம்மட் சித்தீக்.

இந்­த­ளவு பெரிய கடத்தல் மன்­ன­னாக சித்தீக் மாறிய வர­லாறு வித்­தி­யா­ச­மா­னது. ஆரம்­பத்தில் ஆயுத விவ­காரம் ஒன்று தொடர்பில் சிறை­வாசம் அனு­ப­விக்க வேண்­டிய நிலை சித்­தீக்குக்கு ஏற்­பட்ட போது சிறையில் வைத்து சில பாதாள உல­கத்­த­லை­வர்­க­ளுடன் இவருக்கு தொடர்­பேற்­பட்­ட­தாக அறிய முடி­கின்­றது.

இலங்­கையில் அப்­போது நம்பர் – 1 போதைப் ­பொருள் வர்த்­த­க­ராக இருந்­தவர் குடு நூர். குடுநூர் வாழைத்­தோட்டம் பகு­தியில் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டதன் பின்னர் அந்த இடம் அய்யூப் கான் என்ற மற்றொரு பாதாள உலகத் தலை­வனின் கீழா­னது.

அய்யூப்கானை ஆயுதம் காட்ட விசேட அதி­ரடிப்படை அழைத்துச் சென்­ற­போது மோதல் ஏற்­பட்டு அவனும் கொல்­லப்­ப­ட ஆனமலு இம்­டியாஸ், மாளி­கா­வத்தை பாஜி போன்றோர் அடுத்­த­டுத்து அந்த இடத்­தினை பிடித்­தனர்.

ஆன­மலு இம்­டியாஸ் அடை­யாளம் தெரி­யா­தோரால் கடத்­தப்­பட்டு யோக் வீதியில் சட­ல­மாக மீட்­கப்­ப ட்­ட­துடன் மாளி­கா­வத்தை பாஜி விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் சுட்டுக் கொல்­லப்­பட்­டி­ருந்தார்.

இந்­நி­லையில் பொட்ட நௌபர் போன்ற பாதாள உலகத் தலை­வர்கள் சட்­டத்தின் பிடிக்குள் சிக்கிக் கொள்ள கெடு­பி­டிகள் அதி­க­ரிப்­பதை உணர்ந்த கிம்­பு­லா­எல குணா போன்றோர் கடல் மார்க்­க­மாக இந்தியா­வுக்கு தப்பிச் சென்­றனர்.

இதன் பல­னாக ஹெரோயின் தொடர்பில் ஏற்­பட்ட போட்டி நிலையில் வெற்­றிடம் ஏற்­பட்­டது. இந்நிலையில் அதனை தனக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்ட சித்தீக் இலங்­கைக்கு ஹெரோயின் போதைப்­பொ­ரு­ளினை கடத்தும் விநி­யோ­கிக்கும் இடத்தை போட்­டி­யின்றி கைப்­பற்றிக் கொண்டான்.

உண்­மையில் ஹெரோயின் பெரும்­பாலும் ஆப்­கா­னிஸ்தான், பாகிஸ்­தானின் ஆப்கான் எல்­லையை ஒட்­டிய பகு­தியில் மிக மலி­வாக கிடைக்கும் பொரு­ளாகும்.

சர்­வ­தேச தக­வல்­களின் படி ஆப்­கானில் ஒரு கிலோ ஹெரோ­யினை ஒரு டொலர் பெறு­ம­தியில் பெற­லாமாம்.

அப்­படி இருக்கும் போது குடுநூர் முதல் ஆன­மலு இம்டியாஸ், பாஜி கிம்­பு­லா­எல குணா உள்­ளிட்ட அனை­வரும் ஆப்கான் பிராந்­தி­யத்­தி­லி­ருந்து போதைப்பொருளை முதலில் இந்­தி­யாவின் ராமேஸ்­வரம் பகு­திக்கு கடத்தி வந்து அங்­கி­ருந்து புத்­தளம் மன்னார் பிர­தே­சங்­க­ளூ­டாக மீன்­பிடி பட­கு­க­ளுக்குள் மறைத்து நாட்­டுக்குள் கடத்­தப்­ப ட்­டன.

இதுதான் அப்­போ­தைய பாதாள உலகத் தலை­வர்­களின் யுக்­தி­யாக இருந்­தது. இத­னூ­டாக சுமார் 10 கிலோ­வுக்கும் 20 கிலோ­வுக்கும் இடைப்­பட்ட ஒரு தொகையே ஒரு நேரத்தில் இலங்­கைக்குள் கடத்தப்­பட்­டது.

எனினும் இதனை மாற்­றி­யவர் சித்தீக். மீன்­பிடிப் பட­குகள் ஊடாக 10, 15 கிலோ ஹெரோயின் கடத்தப்படு­வதை மாற்­றி­ய­மைத்த சித்தீக் ஒரே நேரத்தில் 100 கிலோ­வுக்கும் மேற்­பட்ட ஹெரோயின் தொகை யை இலங்­கைக்குள் கொண்­டு­வரும் முறை­மையை அறி­முகம் செய்தார்.

துறை­மு­கங்­களை ஊட­றுத்து கொள்­க­லன்­க­ளுக்குள் மறைத்து ஹெரோயின் கடத்தும் முறை­மையே அது­வாகும்.

உண்­மையில் மரு­தானை மஜீட் வீதியை சேர்ந்­த­வ­ராக மொஹம்மட் சித்தீக் அடை­யாளம் காணப்­பட்ட போதிலும் டெக்­னிக்கல் சந்தி, மெள­லான வத்த பிர­தே­சத்தில் பல வரு­டங்கள் வசித்­தவர் எனக் கூறப்படு­கி­றது.

இவை எல்­லா­வற்­றையும் விட தற்­போது 47 வய­தாகும் மொஹம்மட் சித்தீக் அவ­ரது 25 வயது முதல் இந்த போதைப் பொரு­ளுடன் தொடர்பு வைத்­துள்­ள­தாக அறிய முடி­கி­றது.

ஏனைய போதைப்­பொருள் வர்த்­த­கர்­களை போன்று சித்தீக் ஒன்றும் சில்­லறை வர்த்­த­க­ராக இருந்தும் பரி­ண­மித்­தவர் அல்ல. அவன் நேர­டி­யா­கவே ஹெரோயின் மொத்த வியா­பா­ரி­யா­கவே அடை­யாளம் காணப்­பட்­டவர்.

மொஹமட் சித்தீக் இப்­படி ஒரே­டி­யாக 100 கிலோ­வுக்கும் மேற்­பட்ட ஹெரோயின் போதைப் பொருளை இலங்­கைக்கு கடத் தும் வழி­மு­றையைக் கற்றுக் கொடுத்­தவர்.

அத்­தாபாய் எனப்­படும் பாகிஸ்­தா­னியர். பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் தக­வ­லின்­படி அத்­தாபாய் பாகிஸ்­தா­னி­ய­ராக இருந்த போதும் சர­ள­மாக சிங்­கள மொழியில் உரை­யா­டக்­கூ­டி­ய­வராம்.

அத்­தாபாய் பாகிஸ்­தானின் தீவி­ர­வாத குழுக்­க­ளுடன் தொடர்­பு­டை­யவர் என்­பதால் மொஹம்மட் சித்தீக்கும் அப்­ப­டிப்­பட்ட தொடர்­புகள் உள்­ள­னரா என்­பது குறித்து ஆராய்­வது அவ­சி­ய­மாகும்.

பொது­வாக உலகில் மனி­தக்­க­டத்­தல்கள் போதைப்­பொருள் கடத்­தல்­களில் ஈடு­ப­டு வோர் ஏதேனும் தீவி­ர­வாத குழுக்­க­ளுடன் தொடர்பை பேணு­வது வழ­மை­யாகும். இந்த அடிப்­ப­டையில் சித்தீக் மீதான தீவி­ர­ வாத சந்­தே­கங்கள் யதார்த்­த­மா­னதே.

அத­னாலோ என்­னவோ தற்­போது இலங்­கைக்கு அழைத்து வரப்­பட்­டுள்ள சித்தீக் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறார்.

இந்­நி­லையில் மொஹம்மட் சித்தீக் இலங்­கைக்குள் கடத்­திய போதைப் பொருளின் மொத்த அளவு எவ்­வ­ளவு எவ்­வாறு எச்­சந்­தர்ப்­பத்தில் அவற்றைக் கடத்­தினார், அது தொடர்பில் அவ­ருக்கு யார் உதவி செய்­தார்கள் மற்றும் என்­னென்ன தந்­தி­ரங்­களை அது தொடர்பில் பயன்­ப­டுத்­தினார் போன்ற விடயங்கள் இந்த விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­ப­டலாம்.

ஊட­கங்­களில் வெளி­வந்த தக­வ­லுக்கு அமை­வாக மொஹம்மட் சித்­தீக்­குடன் தொடர்­பு­டை­யது என கூறத்­தக்க சில போதைப்­பொருள் கடத்தல் சம்­ப­வங்­களை நாம் பட்­டி­ய­லி­டலாம்.

blogger-image-1772656691அதன்­படி தண்ணீர் பம்­பிகள் 222 இற்குள் மறைத்து 35 கிலோ ஹெரோயின் கடத்­தி­யமை, போல்ட் ஆணி­க­ளுக்குள் மிக சூட்­சு­ம­மாக மறைத்து வைத்து சுமார் 36 கிலோ ஹெரோயின் கடத்­தி­யமை போன்ற சம்­ப­வங்கள் முக்­கி­ய­மா­னவை.

தண்ணீர் பம்­பி­களை தனது இலங்கை மனை­வியின் பெயரில் அனுப்­பி­யி­ருந்த சித்தீக் பின்னர் அவளை காப்­பாற்ற அவ ளை டுபாய்க்கு அனுப்­பி­ய­தா­கவும் அறிய முடி­கி­றது.

இதனை விட பாகிஸ்­தா­னி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட கிழங்கு கொள்­கலன் ஒன்றில் இறப்பர் கிழங்­கு­களை கலந்து அதனுள் ஹெரோயின் போதைப் பொருளை வைத்து 40 கிலோ­வுக்கும் மேல் ஹெரோயின் கடத்­தி­யமை கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சலவை இயந்­தி­ரத்­திற்குள் மறைத்து 65 கோடி பெறு­ம­தி­யான 93 கிலோ ஹெரோயின் கடத்தல், அதே பாணியில் 50 கிலோ ஹெரோயின் கடத்தல் போன்ற கடத்­தல்­களின் பின்­ன­ணியில் சித்தீக் இருப்­பது கிட்­டத்­தட்ட உறு­தி­யா­ன­தாகும்.

அதே­போன்றே 2012ஆம் ஆண்டு நாட்டை விட்டுத் தப்பி சென்ற வெலே­சு­தாவை டுபாயில் இருந்து பாகிஸ்­தா­னுக்கு அழைத்து சென்று இங்­குள்ள வெலே சுதாவின் வலை­ய­மைப்­பையும் பயன்­ப­டுத்தி தனது ஹெரோயின் வர்த்­த­கத்தை சித்தீக் அபி­வி­ருத்தி செய்­துள்­ள­மையும் அந்த வகையில் சித்­தீக்கே பிர­தான போதைப்­பொருள் கடத்­தல்­காரர் என்­ப­தையும் புல­னா ய்வுப் பிரி­வினர் வெளிப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் வெலே சுதா­வுடன் சித்தீக் கை கோர்த்த பின்னர். இந்­நாட்­டுக்கு அனுப்­பிய ஹெரோயின் தொகையும் கொஞ்ச நஞ்­ச­மல்ல.

kadathalகடந்த வருடம் ஜூலை 14ஆம் திகதி களனி பிர­தே­சத்தில் வைத்து விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் கைப்­பற்­றப்­பட்ட 85 கிலோ ஹெரோயின் கடந்த பெப்­ர­வரி மாதம் களனி பிர­தேச களஞ்­சியம் ஒன்றுக்குள் இருந்து வெலே சுதாவின் தக­வ­லுக்கு அமைய கியர் பெட்­டி­யற்ற டெக்­டர்கள் மீட்­கப்­பட்ட நிலையில் அத­னூ­டாக கடத்­தப்­பட்­ட­தாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள 1000 கிலோ ஹரோயின் போன்ற சம்­ப­வங்கள் இவ்­வி­ரு­வ­ரி­னதும் இணைந்த கடத்­தல்­க­ளுக்கு உதா­ர­ணங்­களே.

இந்­நி­லையில் இந்த கடத்தல் முறை மையை அறிமுகம் செய்தவர் என்ற ரீதியில் 2013 ஆகஸ்ட் 30ஆம் திகதி கிரீஸ் டின்க ளில் அடைத்து கடத்தப்பட்ட 261 கிலோ ஹெரோயினின் பின்னணி இன்றுவரை கண்டறியப்படாத நிலையில் அது கூட சித்தீக்கை சார வாய்ப்பில்லாமலில்லை.

இனி எது எப்படியோ வெலே சுதாவையும் சித்தீக்கையும் புலனாய்வு பிரிவினர் கைது செய்து விட்டனர். நாட்டுக்குள் போதைப் பொருளை கடத்தும் பிரதான புள்ளிகளான இவ்விருவரையும் கைது செய்ததுடன் மட்டும் புலனாய்வுப்பிரிவினரின் கடமை முடிந்து விட்டதாக கருத முடியாது.

இவர்களின் வெற்றிடத்தை நிரப்ப இன்னொரு வெலே சுதாவோ சித்தீக்கோ முயற்சிப்பதையும் தடுக்க வேண்டும். தற் போது இலங்கைக்குள் ஹெரோயினுக்கு குறிப்பிடத்தக்க அளவு தட்டுப்பாடு ஏற்ப ட்டுள்ளதையும் அதன் விலையிலும் அதிக ரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்நிலையில் இச்சந்தர்ப்பத்துக்குள் இன்னொரு கடத்தல் மன்னனுக்கு வாய்ப்பு வழங்காது போதை கலாசாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படல் வேண்டும். அப்போதே இந்த கைதுகளின் பூரண பிரயோசனம் நாட்டுக்கு கிடைக்கும்.

Share.
Leave A Reply