60 கோடி ரூபா மதிப்­புள்ள போதைப்­பொ­ரு­ளு­டனும் துப்­பாக்­கி­க­ளு­டனும் இந்­திய எல்­லைக்குள் நுழைய முனைந்த 2 பாகிஸ்தான் ஊடு­ரு­வல்­கா­ரர்­களை இந்­திய இரா­ணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

அமிர்­த­ச­ரஸில் பாகிஸ்தான் எல்­லையில் இந்­திய இரா­ணு­வ­வீ­ரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இந்­நி­லையில் பாகிஸ்தான் பகு­தியில் இருந்து இரண்டு பேர் இந்­தி­யா­விற்குள் ஊடு­ருவ முயற்சி செய்­துள்­ளனர்.

அப்­போது இரா­ணுவ வீரர்கள் அவர்­க­ளுக்கு திரும்பி சென்­று­வி­டுங்கள் என்று எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர். ஆனால், ஊடு­ரு­வல்­கா­ரர்கள் தொடர்ந்து இந்­தி­யாவை நோக்கி உள்ளே வந்­துள்­ளனர்.

அப்­போது ஊடு­ரு­வல்­கா­ரர்கள் இரா­ணுவ வீரர்­களை நோக்கி துப்­பாக்கி சூடு நடத்­தி­யுள்­ளனர். இராணுவம் நடத்­திய பதில் தாக்­கு­தலில் இரண்டு ஊடு­ரு­வல்­கா­ரர்­களும் சம்­பவ இடத்­தி­லேயே உயிரிழந்­தனர்.

அவர்­க­ளிடம் இருந்து 60 கோடி ரூபா மதிப்­புள்ள போதைப்­பொருள் மற்றும் 2 ஏ.கே. 47 ரக துப்­பாக்­கி­கள் பறி­முதல் செய்­யப்­பட்­டுள்­ளன.

இவர்களுக்கு இந்தியாவில் யாருடன் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக இராணுவம் விசாரணை களை மேற்கொண்டுள்ளது.

Share.
Leave A Reply